ரயில்வே பணியாளர்களுக்கு நிதி பாதுகாப்பு!


இந்திய ரயில்வே பணியாளர்களுக்கான நலனில் ஒரு புதிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. ரயில்வே துறை மற்றும் எஸ்பிஐ இணைந்து கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் மூலம், பணியாளர்களுக்கு மேம்பட்ட காப்பீடு பலன்கள் வழங்கப்படுகின்றன.

முக்கிய நன்மைகளாக,
• விபத்து மரணம் காப்பீடு – ரூ. 1 கோடி
• முழு நிலை மாற்றுத்திறன் காப்பீடு – ரூ. 1 கோடி
• பகுதி மாற்றுத்திறன் காப்பீடு – அதிகபட்சம் ரூ. 80 லட்சம்
• இயல்பான மரணம் காப்பீடு– ரூ. 10 லட்சம் (மருத்துவ சோதனை அல்லது கூடுதல் கட்டணம் இன்றி)
• விமான விபத்து காப்பீடு– ரூ. 1.6 கோடி
• ரூபே டெபிட் கார்டு மூலம் கூடுதல் பாதுகாப்பு – ரூ. 1 கோடி

இந்த திட்டம் ரயில்வே சம்பள கணக்குகள் எஸ்பிஐ வங்கியில் உள்ள பணியாளர்களுக்கு பொருந்தும். இதன் மூலம் சுமார் ஏழு லட்சம் பணியாளர்கள் நேரடியாக பயன்பெற உள்ளனர்.

இந்த திட்டம், முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்புகளை விட மிக உயர்ந்த அளவிலான காப்பீட்டை வழங்குகிறது. பணியாளர்களின் நலன், நம்பிக்கை மற்றும் நிதி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், இது மிக முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.