TNSDC நிர்வாக இயக்குனருக்கு, IBTC அமைப்பு துவக்க விழா சிறப்பு அழைப்பு!

சென்னை, தமிழ்நாடு:
பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களின் தரநிலையை உலகளவில் உயர்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட IBTC (International Board of Trainers & Coaches) எனும் சமூக கூட்டமைப்பு, இந்தியா முழுவதும் முப்பதிற்கும் மேற்பட்ட தேர்ந்த பயிற்சியாளர்களுடன் சமூக அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டு, உலகளாவிய பயிற்சி நிறுவன அங்கீகாரம், பாதுகாப்புக்கான TradeMark பதிவு, மேலும் தரத்திற்கான ISO 9001 சான்றிதழ் ஆகிய உயர்ந்த தரச் சான்றுகளுடன், வரும் நவம்பர் 9, 2025 அன்று கோவை, தாஜ் விவந்தா நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக துவங்குகிறது.

இந்நிகழ்வில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவிருக்கும் பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல துறைகளின் பங்கேற்பாளார்களும், சிறப்பு விருந்தினர்களாக அரசு அலுவலர்கள், மாநிலத்தின் அடையாளமாக விளங்கும் தொழிலதிபார்கள் மற்றும் சிறந்த ஆளுமைகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர்.

இந்த அமைப்பு பயிற்சியாளர்களுக்கான பிரத்யேக சமூக அமைப்பு என்பதால், நிகழ்வின் முக்கிய சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு, “நான் முதல்வன்”, “வெற்றி நிச்சயம்” போன்ற மாநில திறன் மேம்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் TNSDC (Tamil Nadu Skill Development Corporation) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியரான திரு. கிராந்தி குமார் பாடி, IAS அவர்களுக்கு, IBTC நிர்வாகிகள் சென்ற 15.10.2025 அன்று நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினர்.

TNSDC அமைப்பின் இலக்குகளுடன் இணைந்த நோக்கத்தில் பயிற்சியாளர்களுக்கான சமூக வலையமைப்பாக IBTC – International Board of Trainers & Coaches இயங்க உள்ளதால், இச்சந்திப்பு IBTC அமைப்பின் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.