செமிகண்டக்டர் மிஷன் – மீண்டும் மத்திய அரசு ₹4,600 கோடி நிதி!

இந்தியா செமிகண்டக்டர் மிஷன் (ISM) திட்டத்தின் கீழ் மொத்தம் ₹76,000 கோடி மதிப்புள்ள நிதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் செமிகண்டக்டர் உற்பத்திக்காக ₹65,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் ₹62,900 கோடி வரை நிதி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதால், மொத்த நிதியில் 97% பயன்படுத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் புதிய திட்டங்களுக்கு மிகக் குறைவான இடமே மீதமுள்ளது. இந்த விவரத்தை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்னன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ஒதுக்கப்பட்ட நிதியில்…

Read More

ஓசூர் விமான நிலையம் – உறுதி செய்யப்பட்ட இடம்!

பெங்களூரு அருகில் வேகமாக உயர்ந்து வரும் தொழில் முகாமாகிய ஓசூருக்கு, “விமானம் நிலையம்” அமைக்கும் எதிர்பார்ப்பில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு, ஓசூர் விமான நிலையத்திற்கான இடமாக பேரிகை–பாகலூர் அருகிலுள்ள பகுதிகளைத் தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. முன் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட OLS (Obstacle Limitation Surfaces) ஆய்வின் அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த இடம், ஓசூரில் இருந்து சுமார் 25 கிமீ தூரத்திலும், பாகலூரில் இருந்து 12 கிமீ தூரத்திலும், கர்நாடக–தமிழ்நாடு எல்லை அத்திப்பள்ளி…

Read More

20 ஆண்டு பழைய வாகனங்களுக்கு RC புதுப்பிப்பு கட்டணம் உயர்வு – வாகன உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்!

மத்திய சாலை போக்குவரத்து துறை வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, 20 ஆண்டுகளை கடந்த பழைய வாகனங்களுக்கான பதிவு (RC) புதுப்பிப்பு கட்டணம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இலகு வகை வாகனங்களுக்கு (Private Cars) பதிப்பு கட்டணம் ₹5,000–இருந்து ₹10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; இருசக்கர வாகனங்களுக்கு ₹1,000–இருந்து ₹2,000; மூன்று சக்கர வாகனங்களுக்கு ₹1,500–இருந்து ₹5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவு, பெரும் பிரச்னையாக உருவாகிக் கொண்டிருக்கும் காற்று மாசு பிரச்சனையை சமாளிக்கவும், அதிக புகை வெளியீடு…

Read More

GST 2.0 – வருகிறதா இரண்டு கட்ட வரி அமைப்பு?

இந்தியாவின் GST வரிவிகித அமைப்பில் பெரும் மாற்றம் வரவிருக்கிறது.  இரண்டு கட்ட வரி அமைப்பிற்கான (two-slab structure)  பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய 5%, 12%, 18% மற்றும் 28% எனும் நான்கு படிகள் சுருக்கப்பட்டு, இனி 5% மற்றும் 18% என்ற இரண்டு கட்ட வரிகளாக மாற்றப்பட உள்ளது. இதனுடன், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் ‘Sin goods’ என அழைக்கப்படும் பொருட்களுக்கு 40% தனித்த வரி விகிதமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. • பொதுமக்களுக்கு தேவையான…

Read More

பி.எஸ்.என்.எல்.க்கு ரூ.6,982 கோடி நிதி – மத்திய அரசு

இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். (BSNL) வளர்ச்சிக்கும், நவீனமயத்திற்கும் மத்திய அரசு பெரிய ஆதரவு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.6,982 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம், பி.எஸ்.என்.எல். தனது 4G மற்றும் 5G சேவைகளை விரிவுபடுத்தவும், நவீன உள்கட்டமைப்பை உருவாக்கவும் பயன்படுத்தப்படும். தொலைத்தொடர்பு துறையில் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட பி.எஸ்.என்.எல்.க்கு இது ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, இந்த நிதி திட்டம்…

Read More

இந்திய ஆன்லைன் கேமிங் கட்டுப்பாட்டில் பெரிய மாற்றம்!

இந்திய நாடாளுமன்றம் “Promotion & Regulation of Online Gaming Bill, 2025”-ஐ நிறைவேற்றி, பண அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டுகளை முழுமையாக தடை செய்துள்ளது. • இனி ரியல்-மணி கேமிங் ஆப்ஸ் (Dream11, MPL போன்றவை) – விளம்பரம், ஒப்புதல், பண பரிமாற்றம் – அனைத்தும் சட்ட விரோதமாகக் கருத்தப்படும். • மீறினால் 3 ஆண்டு சிறை அல்லது ₹1 கோடி அபராதம்; மீண்டும் மீறினால் ₹2 கோடி வரை அபராதம் + 5 ஆண்டு சிறை…

Read More

உள்நாட்டு பொருட்களுக்கு ஆதரவு அளிக்க பிரதமர் மோடி அழைப்பு!

இந்தியாவின் பொருளாதார வலிமையை உயர்த்தவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் வெளிநாட்டு பொருட்களுக்கு இடமின்றி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “நம் நாட்டில் விவசாயிகள் உழைக்கிறார்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உற்பத்தி செய்கின்றன, அத்தகைய உள்நாட்டு பொருட்களை முன்னிறுத்தினால், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்” என்று மோடி குறிப்பிட்டார். மேலும், உள்நாட்டு பொருட்களை…

Read More

செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் புதிய கட்டம்: Cabinet ஒப்புதலுடன் ₹4,600 கோடி முதலீடு, 2,034 வேலை வாய்ப்பு

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா செமிகண்டக்டர் மிஷன் (ISM) திட்டத்தின் கீழ் மேலும் 4 புதிய செமிகண்டக்டர் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இப்போது வரை அனுமதிக்கப்பட்ட 6 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்க, இந்த 4 புதிய அனுமதிகளால் இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் முன்னேற்ற வேகம் அதிகரித்து வருகிறது. அனுமதி பெற்றுள்ள நிறுவனங்கள் — SiCSem, Continental Device India Private Limited (CDIL), 3D Glass Solutions Inc.,…

Read More

கோவையில் தனித்திறன் பயிற்றுனர்கள் சந்திப்பு :2.0!

நமது வணிகம் ஊடகம் மற்றும் கூட்டமைப்பு (COTE) – NVMA ஏற்பாடு செய்திருந்த தனித்திறன் பயிற்றுனர்களுக்கான  ஒரு நாள் சந்திப்பு, 10.08.2025 – ஞாயிறு அன்று கோவையில் காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட தனித் திறன் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு தற்கால சமுதாயம், தொழில்நுட்பம், பயிற்சியாளர்களுக்கு தேவையான அடிப்படை திறன்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் முறை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முக்கிய சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து…

Read More

மின்சார வாகனம்: 2030க்குள் 30% விற்பனை இலக்கு

தகவல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வணிக வளர்ச்சியை ஒரே நேரத்தில் முன்னெடுக்க இந்திய அரசு மிக முக்கியமான முடிவுகள் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நிதி ஆயோக் தற்போது மின்சார வாகனங்களுக்கான (EV – Electric Vehicles) தேசிய நிலைத் திட்டத்தை (National EV Policy) உருவாக்க விரும்புகிறது. அதற்கு தேவையான துறைசார் கொள்கைகள், சிக்கனமான சார்ஜிங் மையங்கள் அமைப்பது, உற்பத்தி வசதிகள் மேம்பாடு, மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்…

Read More

வெள்ளி விலை ரூ.2000 உயர்வு!

சென்னை : சந்தையில் வெள்ளி விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,000 உயர்ந்து தற்போது ₹1,25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி ₹125 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இந்த விலை உயர்வின் முக்கிய காரணமாக சர்வதேச சந்தை நிலவரம், மத்திய வங்கி முடிவுகள் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த சில வாரங்களில் தொடர்ந்து விலை ஏற்றம் காணப்பட்டு வந்த…

Read More

உலகளவில் 3 பில்லியன் ஐபோன்கள் விற்பனை! Apple-ன் மெகா சாதனை.

Apple நிறுவனத்தின் CEO டிம் குக், சமீபத்தில் அறிவித்த தகவலின்படி, 2007ல் அறிமுகமான iPhone இன்று வரை 3 பில்லியன் யூனிட்கள் வரை உலகம் முழுவதும் விற்பனையானது. இது, எந்தவொரு மொபைல் நிறுவனமும் இதுவரை எட்டாத சாதனை. முக்கிய அம்சங்கள்: 2025 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் iPhone விற்பனை 13% அதிகரித்து, $44.6 பில்லியன் வருமானம் கிடைத்துள்ளது. மொத்த நிறுவன வருமானம் $94 பில்லியன் வரை உயர்ந்துள்ளது. Apple வரலாற்றில், முதல் பில்லியன் iPhones விற்பனைக்கு…

Read More

அமெரிக்கா – 6 இந்திய நிறுவனங்களுக்குத் தடை!

அமெரிக்கா, ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்ததற்காக இந்தியாவில் உள்ள 6 நிறுவனங்கள் மீது தடைகள் விதித்துள்ளது. இந்த நிறுவனங்கள், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி, பின்பு அதை சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 220 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் பொருளாதார தடைகள் அமைப்பான OFAC (Office of Foreign Assets Control) இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து சீனாவை…

Read More

இந்தியாவிற்கு 25% வரி விதித்தது USA!

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 25 சதவீதம் கூடுதல் வரி விதித்து அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த வரி உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படுகின்றன என்ற காரணத்தைக் கொண்டு அமெரிக்கா எடுத்துள்ள கடுமையான நடவடிக்கை இது. இந்த வரி ஸ்டீல், அலுமினியம் பொருட்கள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், பிளாஸ்டிக் பாகங்கள், வேளாண்மை சார்ந்த சில பொருட்கள் மீதும் இந்த வரி அமலாகிறது. இதனால் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் பெரும் அபாயத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல…

Read More

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு, மின் சாதன ஏற்றுமதி அதிகரிப்பு!

கனடா, சீனா ஆகிய நாடுகளின் பொருள்களுக்கு, அமெரிக்கா கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளதால், அமெரிக்காவின் மின் சாதனங்கள் வேளாண் மற்றும் ஜவுளி பொருட்களின் இறக்குமதியில், இந்தியாவின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. 2025 மே மாதத்தில் அமெரிக்காவின் மின்னணு பொருட்கள் இறக்குமதியில், இந்தியாவின் பங்கு 3.5 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரம், சீனாவின் பங்கு 22 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைந்துள்ளது. மின்னணு துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஸ்மார்ட் போன்கள் மற்றும் சோலார் பேனல்கள் முக்கிய…

Read More

லோதா டெவலப்பர்ஸ் –  டெல்லியில் ₹1,900 கோடி மதிப்பில் வீடுகளுக்கான திட்டம்!

மும்பையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் Lodha Developers, தற்போது டெல்லி NCR பகுதியில் ₹1,900 கோடி மதிப்பில் (அதாவது $220 மில்லியன்) ஒரு புதிய வீட்டு திட்டம் (residential project) கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது அவர்களின் டெல்லியில் முதலாவது திட்டமாகும். திட்ட விவரங்கள்:திட்ட மதிப்பு: ₹1,900 கோடிதொடக்க காலம்: 2026 ஏப்ரல்இடம்: டெல்லி NCRபிரிவு: உயர் தரமான குடியிருப்பு வீடுகள் Lodha-வின் Chief Sales Officer பிரசாந்த் பிந்து கூறியபடி,…

Read More

கூகுள் ₹20,000 கோடிக்கு வின்ட்சர்ஃப் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஒப்பந்தம்!

Google, அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக, சமீபத்தில் ஒரு மிகப்பெரிய ஒப்பந்தத்தில் $2.4 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ₹20,000 கோடி) செலுத்தி Windsurf என்ற AI ஸ்டார்ட்அப்பின் முக்கிய தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள  உரிமம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், Windsurf நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வருண் மோகன் மற்றும் முக்கிய ஆராய்ச்சி குழுவினர்கள் Google-இன் DeepMind பிரிவில் இணைக்கப்படுகிறார்கள். இதன் மூலம் Google, “Gemini” எனப்படும் தனது AI திட்டத்தில் முன்னேற்றம் செய்யும்…

Read More

₹5000 கோடியில் இந்தியாவின் கனிமங்களுக்கான திட்டம்

சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளைச் சமாளிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், இந்திய அரசு ரேர் எர்த் மற்றும் மேக்னெட்டுகளுக்கான புதிய PLI (Production Linked Incentive) திட்டத்தை தயாரித்து வருகிறது. இது ₹3,500 முதல் ₹5,000 கோடி வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் மதிப்பு: ₹3,500 – ₹5,000 கோடி.இது “Reverse auction” முறை மூலம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதற்கு அடுத்த 2 வாரங்களில் அமைச்சக அளவில் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு. 2025க்குள் ரேர் எர்த்…

Read More

APPLE COO-ஆக இந்தியர்!

APPLE நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சபி கான் நியமனம். 30 ஆண்டுகளாக APPLE நிறுவனத்தில் துணைத் தலைவராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. சபிஹ் கான் யார்?இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத்தில் பிறந்தார் (Moradabad). சிறுவயதில் சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்து பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர். இவர் Tufts பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இரட்டைப் பட்டம் பெற்றவர். பின்னர் Rensselaer Polytechnic Institute-ல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். ஆப்பிளில்…

Read More

துபாய் கோல்டன் விசா பெற ரூ.23 லட்சம் மட்டும் போதாதா? இந்தியர்களுக்கான புதிய தகுதிகள் என்ன?

அமீரகத்தின் கோல்டன் விசா திட்டம் தற்போது இந்தியர்களிடையே பெரிய கவனம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வாழ்க்கை முழுக்க வதிவுச்சான்றிதழ் (Lifetime Residency) வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் ரூ.23 லட்சம் முதலீடு செய்தால் கோல்டன் விசா கிடைக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது முதலீட்டுத் தொகை மட்டும் போதாது, கூடுதல் தகுதிகள் தேவையாக உள்ளன. புதிய தகுதிகள் என்ன? இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நிபுணர்களுக்கு வழங்கப்படும் இந்த விசாவிற்கு கீழ்க்காணும் தகுதிகள் அவசியமாக்கப்பட்டுள்ளது: 1. உயர் கல்வித் தகுதி (Bachelor’s/Master’s/PhD)…

Read More

இந்தியா – மலேசியா செமிக்கண்டக்டர் & டிஜிட்டல் துறையில் ஒன்றிணையும் சூழ்நிலை!

இந்தியாவின் மலேசியாவுடனான செமிக்கண்டக்டர் மற்றும் டிஜிட்டல் உற்பத்தித் தொடர்புகள் மற்றுமொரு முக்கிய கட்டத்தை அடைகின்றன. மலேசியாவுக்கான இந்திய உயர்நிலை தூதர் B.N. ரெட்டி, “இந்தியா – மலேசியா தொழில்நுட்ப ஒத்துழைப்பு விரிவாக செயல்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார். முக்கிய அம்சங்கள்: B.N. ரெட்டி – இந்திய தூதரின் கோரிக்கைசெமிக்கண்டக்டர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில், இந்தியா-மலேசியா நிறுவனங்கள் கூடுதல் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக, இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள், கூட்டு முயற்சிகள்…

Read More

ஐக்கிய அரபு அமீரகம் 23 இலட்சத்தில் கோல்டன் விசா – இந்தியர்கள் வாழ்நாள் குடியிருப்பு வாய்ப்பைப் பெறலாம்!

வணிகத்தின் புதிய வாசல் திறக்கிறது! உலகளாவிய தொழில், தொழிற்சாலைகள் மற்றும் முதலீட்டாளர்கள் வர்த்தகத்தின் அடுத்த மையமாக UAE-யை நோக்கி நகர்கின்றனர். இந்நிலையில், இந்தியர்கள் உட்பட உலக நாடுகளுக்கே வியப்பூட்டும் விதமாக, UAE அரசு கோல்டன் விசாவை பெற புதிய வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக, இனி பெரும் முதலீடு இல்லாமலே, நிரந்தர குடியிருப்பு (வாழ்நாள் வீசா) பெற வழிகள் உருவாகியுள்ளன. முக்கிய அம்சங்கள்: முதலீடின்றி கோல்டன் விசா: பழைய விதிகளில், கோல்டன் விசா பெறத் தேவையானது AED 2…

Read More

மாறுபட்ட மேற்பரப்புகளிலும் சூரிய மின்சார உற்பத்தி மாடல் “HeliaSol”

இப்போது மின் உற்பத்தி என்றால் கட்டிடங்களின் கூரை மட்டுமல்ல, சுவர், தரை, வேலி என எந்த மேற்பரப்பும் புதிய வணிக வாய்ப்பாக மாறும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட ஒரு நவீன தொழில்நுட்பமான HeliaSol எனப்படும் சூரிய ஆற்றல் தொழில்நுட்பம். என்ன இது HeliaSol? HeliaSol என்பது ஒரு சுழல்படல சூரிய இயக்கி (Organic Photovoltaic – OPV) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட, மிகவும் வளைவான, ஒளியுணரும் சூரியப் படலமாகும். இது வெறும் கூரைகளுக்கு மட்டும் அல்லாமல்,…

Read More

உறுதியாக இருங்கள், தொழிலில் வெற்றி நிச்சயம்!

சேதுபதி என்பவர் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். கல்வி முடித்ததும், தொழிலில் வெற்றியடைய நகரம் நோக்கி புறப்பட்டார். ஆனால், நகரத்தின் வேகமான வாழ்கை, கடின போட்டி ஆகியவை அவரை தயக்கத்துக்கும் பயத்துக்கும் உள்ளாக்கின. ஒரு வேலைக்காக பணிமனையில் காத்திருந்தபோது, அருகில் இருக்க someone “உறுதியான மனிதருக்குத் தோல்வி என்பது எதுவுமே கிடையாது. போகும் பாதையில் கற்றுக்கொள்ளப் பாடங்கள் மட்டுமே உள்ளன” என்று பேசிக்கொண்டிருப்பதை கேட்டார். அந்த வரிகள் அவரது மனதில் தீபம் போல் எரிந்தது. தடைகளை தாண்டும்…

Read More

மூன்றாம் ஆண்டில் நமது வணிகம் செய்தித்தளம் – உதயமாகிறது ‘COTE’

நமது வணிகம் செய்தித்தளம், 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், சிட்னி நகரில் தொடங்கப்பட்ட நமது வணிகம் தொழில் கூட்டமைப்பின் ஒரு அங்கமாகும். 2019 ஆம் ஆண்டு கோவையில்  உலக தமிழ் வணிக கூட்டமைப்பாக விரிவு படுத்தப்பட்ட தொழில்முனைவோர்களுக்கான அமைப்பின் பிரத்யேக செய்தித்தளமாக  வெற்றி நடையிட்டு, வரும் செப்டம்பர் 2025 ஆம் நாள் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து, மூன்றாம் ஆண்டை துவங்குகிறது. நமது வணிகம் செய்தித்தளம், இணைய வழி ஊடகமாகவும், அஞ்சல் மற்றும்…

Read More

JioCinema–Hotstar சந்தாதாரர்கள் 30 கோடியை எட்டியது!

JioCinema மற்றும் Disney+ Hotstar இணைந்து இந்தியாவில் 30 கோடி சந்தாதாரர்களை பதிவு செய்துள்ளன. இந்த வளர்ச்சி, Netflix-ஐ இந்திய சந்தையில் நெருங்கும் நிலைக்கு இத்தலங்களை கொண்டு வந்துள்ளது. இலவச மற்றும் உள்ளூர் உள்ளடக்கம் மூலம் பயனர்கள் அதிகரித்துள்ளனர்.

Read More

இருசக்கர வாகனங்களுக்கு டோல் வசூல் இல்லை – நிதின் கட்கரி உறுதி!

இருசக்கர வாகனங்களிடம் டோல் கட்டணம் வசூலிக்க அரசுக்கு எந்தத் திட்டமும் இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் தவறானவை என்றும் அவர் விளக்கியுள்ளார்.

Read More

தமிழகத்தில் ஜவுளி தொழிலுக்கு ரூ.2.5 கோடி மானியம்

தமிழக அரசு, ஜவுளி தொழிலில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.2.5 கோடி வரை மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த மானியம் தொழில்நுட்ப மேம்பாடு, தொழிலாளர்களுக்கான வசதிகள் மற்றும் உற்பத்தி திறன் அதிகரிப்புக்கு உதவும்.

Read More