தொழில் வளர்ச்சி
Suzlon நிறுவனம் : Tata Power உடன் புதிய ஒப்பந்தம்!
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் வளர்ச்சி வேகம் பிடித்து வரும் நிலையில், Suzlon குழுமம் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது. Tata Power Renewable Energy-இல் இருந்து 838 மெகாவாட் சூரிய சக்தி திட்டம் அது . இது Suzlon-க்கு எதிகால வளர்ச்சிக்கு வலுவூட்டும் சாதனை ஒப்பந்தம் என்றும், இந்தியாவின் “எரிசக்தி மாற்றம்” (energy transition) முயற்ச்சியில் சிறப்பான தருணம் என்று பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தம் மூலம், சூரிய சக்தித் துறையில் தொழிற்சாலை வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்; மாடியூல்கள்,…
அதானிக்கு வெற்றி – ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது செபி!
இந்திய தொழிலதிபர்களின் ஒருவரான கௌதம் அதானி மற்றும் அவரது அதானி குழும நிறுவங்கள் மீது, கடந்த சில ஆண்டுகளாக ஹிண்டன்பர்க் ரிசர்ச்ச் நிறுவனம் பங்கு மோசடி, செயற்கையான பங்குகள் விலையேற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் வைத்துவந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக முதலீட்டாளர் நம்பிக்கை பெரிதும் பாதித்தது. தற்போது, இந்திய பங்குச் சந்தையை கண்காணிக்கும் அமைப்பான SEBI (Securities and Exchange Board of India)இந்த குற்றச்சட்டங்களைப் பற்றி விசாரணை நடத்தி, அதானி குழுமத்திற்கு எதிரான பிரச்சனைகள் அனைத்தும் “தவறானவை”…
ஓசூரை அறிவுசார் மையமாக்கும் திட்டம்: TIDCO செய்யும் முயற்சி!
தமிழ்நாடு அரசு ஓசூரை தொழில், தகவல் தொழில்நுட்பம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் சாப்ட்வேர் ஸ்டார்ட்-அப் துறைகளுக்கு ஒரு பிரதான “அறிவுசார் வழித்தட (Knowledge Corridor)” மையமாக மாற்ற விரும்புகிறது. இதற்காக தமிழக தொழில் மேம்பாட்டு கழகமான TIDCO ஆலோசகரை நியமித்து, விரிவான திட்ட அறிக்கை (development blueprint) தயாரிக்க செயல்பட்டுள்ளது. இந்த திட்டம் வெறும் நகர்புற மாற்றம் அல்ல; ஓசூரின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக அமைய இருக்கிறது. என்ன பயன்கள் கிடைக்கும்?…
Sampre Nutrition: 3 மாதங்களில் 300 சதவீதம் லாபம் கொடுத்த சிறிய பங்கு மல்டிபேக்கர்!
இந்திய பங்குச் சந்தையில் சின்ன பங்குகள் பல இருக்கின்றன. ஆனால் சில பங்குகள் மட்டும் முதலீட்டாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் மிகப்பெரிய வருமானம் தருகின்றன. அப்படிப் பேசப்படும் பங்கு தற்போது சம்ப்ரே நியூட்ரிஷன்ஸ் லிமிடெட். தொடர்ந்து அப்பர் சர்க்யூட் அடித்து, மிகக் குறுகிய காலத்தில் 300 சதவீதத்துக்கும் மேல் லாபம் கொடுத்து முதலீட்டாளர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. பங்கு விலை உயர்வு – சில மாதங்களுக்கு முன் 23 ரூபாய் இருந்த இந்த பங்கு, தற்போது சுமார் 80 ரூபாயை…
வருடத்திற்கு ரூ.2 லட்சம் வரி சேமிப்பு – ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கான முழு வழிகாட்டு குறிப்புகள்!
ரியல் எஸ்டேட் முதலீடு வீடு வாங்குவதற்கோ அல்லது வாடகை வருவாய் பெறுவதற்கோ மட்டுமல்ல; சரியான திட்டமிடலுடன் வருடத்திற்கு ரூ.2 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளையும் அளிக்கக்கூடியது. ஆனால், பல முதலீட்டாளர்கள் சட்டப்படி கிடைக்கக்கூடிய இந்நன்மைகளை முழுமையாகப் பயன்படுத்தாமல் விடுவதால் பெரிய சேமிப்புகளை இழக்கிறார்கள். கட்டுமானத்திற்கு முன் வட்டி சொத்து கட்டுமானம் முடிந்து, உரிமை பெற்ற பின், முன் கட்டுமான காலத்தில் செலுத்திய வட்டியை ஐந்து ஆண்டுகளுக்கு சமமாகப் பிரித்து தள்ளுபடி கோரலாம். இது பிரிவு 24(b) கீழ்…
விஞ்ஞானி – தொழில் முனைவோர் : டாக்டர் பாத்திமா பெனசீர் & அசூகா லேப்ஸ்!
விஞ்ஞானியாய் கண்டுபிடித்த கோட்பாடு, பொதுமக்களின் வாழ்க்கையுடன் இணையும் போது அது வெறும் ஆராய்ச்சியல்ல, ஒரு புதிய தொழில் பயணத்தின் துவக்கம் ஆகிறது. அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தவர் தான் டாக்டர் பாத்திமா பெனசீர். மரபியல் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளில் ஆழ்ந்த அறிவைப் பெற்ற அவர், அந்த அறிவை வணிக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பயன்படும் வகையில் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து அசூகா லேப்ஸ் (Azooka Labs) என்ற உயிர் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கினார். அசூகா லேப்ஸ் –…
இந்திய ஐடி துறைக்கு புதிய சவால் – HIRE ACT!
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அறிமுகமான HIRE Act (Hiring Incentives to Restore Employment) என்ற சட்ட மசோதா, வெளிநாட்டில் கணினி, மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் அவுட்சோர்சிங் செய்து வரும் நிறுவனங்களுக்கு பெரிய சவாலை ஏற்படுத்தக்கூடும் என இந்தியாவின் முன்னணி ஐடி துறை எச்சரிக்கை செய்துள்ளது. 25% அவுட்சோர்சிங் வரி: அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஐடி நிறுவனங்களில் பணியை ஒப்படைக்கும் போது, அந்தச் செலவில் 25% வரை கூடுதல் வரி விதிக்கப்படும். வரி சலுகைகளில் கட்டுப்பாடு:…
அமெரிக்க வரி – இந்திய MSME-கள், திருப்பூர் ஏற்றுமதி பாதிப்பு!
உலகளாவிய போட்டித் தன்மை அதிகரித்துள்ள நிலையில், இந்திய உற்பத்தியாளர்கள் அமெரிக்க கூடுதல் வரிகள் காரணமாக பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். உற்பத்தி செலவுகள் உயர்வதால், லாப விகிதம் குறைந்து, இந்திய தயாரிப்புகளின் மொத்த போட்டித் தன்மை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. MSME-களின் நிலை: இந்த சூழலில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளன. நிதி வளம் குறைவு, கடுமையான கட்டுப்பாடுகள் போன்ற பிரச்சனைகள் காரணமாக, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதியின் முதன்மை ஆதாரமாக…
ஸ்விகி, ஸோமேட்டோ – இனி கூடுதல் செலவு!
ஜிஎஸ்டி கவுன்சில் சமீபத்தில் எடுத்த தீர்மானத்தின் படி, உணவு டெலிவரி சேவைகளின் டெலிவரி கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது. இதனால், உங்கள் ஒவ்வொரு ஆர்டருக்கும் சுமார் ₹2 முதல் ₹2.6 வரை கூடுதல் செலவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.அதிகமாக ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நிறுவனங்களின் சுமை: இந்த புதிய வரி விதிப்பின் காரணமாக ஸ்விகி மற்றும் ஸோமேட்டோ போன்ற தளங்களுக்கு வருடாந்திர அளவில் ₹180–200 கோடி வரி சுமை ஏற்படும். இந்தச்…
HAL – ISRO உடன் SSLV தொழில்நுட்ப ஒப்பந்தம்!
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL), ISRO, IN மற்றும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) ஆகியவற்றுடன் இணைந்து சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (SSLV) தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.வடிவமைப்பு, உற்பத்தி, தரக் கட்டுப்பாடு, இணைப்பு, ஏவுதல் மற்றும் பிந்தைய சோதனைகள் வரை SSLV முழுமையான உரிமையை HAL பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் கற்றல் கட்டம், அதன் பின் பத்து ஆண்டுகள் முழுமையான உற்பத்தி கட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.அறிவிப்புக்குப் பிறகு HAL பங்குகள் ஒரு புள்ளி முப்பத்து…
ஜிஎஸ்டி – ரேஞ்ச் ரோவர், டிபெண்டர், டிஸ்கவரி வாகனங்கள் ₹4.5L – ₹30.4ள் குறைந்தன!
மத்திய அரசு ஜிஎஸ்டி கட்டமைப்பில் மாற்றம் செய்து, ஆடம்பர வாகனங்களுக்கு 40 சதவீதம் வரி விகிதம் மட்டுமே நிலைநிறுத்தியது. இதன் பலனாக ஜாக்வார் லேண்ட் ரோவர் இந்தியா தனது ரேஞ்ச் ரோவர், டிபெண்டர், டிஸ்கவரி போன்ற வாகனங்களின் விலையை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.30.4 லட்சம் வரை குறைத்துள்ளது. ஜாக்வார் லேண்ட் ரோவர் இந்தியாவின் மேலாண்மை இயக்குனர் ரஞ்ஜன் அம்பா, “இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் வாடிக்கையாளர்களுக்கும் தொழில் துறைக்கும் நல்ல வளர்ச்சி வாய்ப்பு” என்று தெரிவித்துள்ளார். அரசு…
ஒராக்கிள் நிறுவனத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம்!
ஒராக்கிள் நிறுவனம் உலகளவில் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிலிப்பைன்ஸ், கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் பணிநீக்க அலை. இந்தியாவின் பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை, புனே போன்ற நகரங்களில் பணிநீக்கம் தீவிரமாக நடந்துள்ளது. பணிநீக்கத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள்: 2022ல் $28.3 பில்லியன் செலவில் செர்னர் (Cerner) நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, ஒராக்கிள் அதன் வணிக அமைப்பில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது. செலவுக் குறைப்பு…
GST 2.0: வாழ்க்கை & மருத்துவ காப்புறுதியில் GST முழுமையாக நீக்கம்!
இந்திய GST மானியம் சமீபத்தில் நிகழ்த்தியுள்ள “GST 2.0” சீர்திருத்தத்தின் முக்கிய உறுப்பாக, வாழ்க்கை மற்றும் மருத்துவ காப்புறுதி பிரீமியத்தின் மீது விதிக்கப்படும் 18% GST முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது, இது 22 செப்டம்பர் 2025 முதல் அமல் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவால்கள்: இதுவரை 18% GST வசூலிக்கப்பட்டதால் காப்புறுதி பிரீமியம் அதிகமாக இருந்தது. (எ.கா. ₹20,000 பிரீமியத்தில் ₹3,600 GST சேர்ந்து ₹23,600 செலவாகியது) இந்தச் செலவின் பதிவிறக்கம் இல்லாததால், நடுத்தர வர்க்கம் காப்புறுதியில் இருந்து…
மகிந்திராவின் பேட்மேன் பதிப்பு – 135 வினாடிகளில் விற்று தீர்ந்த மின்சார கார்!
மகிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய பேட்மேன் பதிப்பு BE 6 மின்சார SUV வாகனம் விற்பனையில் அசாதாரண சாதனையை நிகழ்த்தியுள்ளது. முன்பதிவு திறந்தவுடன் வெறும் 135 வினாடிகளில் 999 கார்கள் முழுவதும் விற்றுத் தீர்ந்தன. இது இந்திய வாகன வரலாற்றில் தனித்துவமான நிகழ்வாகும். பேட்மேன் பதிப்பு – சிறப்பு அம்சங்கள்! முதலில் 300 வாகனங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத அளவுக்கு அதிகமான தேவை காரணமாக, அதை 999 வாகனங்களாக உயர்த்தினர்.பேட்மேன் திரைப்படத்தை ஒத்த வடிவமைப்பு –…
GST குறைப்பு: கட்டுமானப் பொருட்கள் மலிவாகும்!
இந்திய அரசு சமீபத்தில் GST 2.0 சீர்திருத்தத்தை அறிவித்துள்ளது. அதன்படி, கட்டுமானத்துக்குத் தேவையான சிமென்ட், கிரானைட், பளிங்கு, செங்கல் போன்ற பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை பல கட்டுமானப் பொருட்களுக்கு 28% வரி வசூலிக்கப்பட்ட நிலையில், இப்போது அது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீடு கட்டும் செலவில் ஒரு முக்கிய குறைப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Affordable housing பிரிவில் வாங்குபவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. குறிப்பாக, வீடு கட்டும் திட்டங்களில்…
ஃப்ளிப்கார்ட் – புதிய தலைவராக பாலாஜி தியாகராஜன்!
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட், தனது புதிய தலைமை தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு அதிகாரியாக (CTPO) பாலாஜி தியாகராஜனை நியமித்துள்ளது. பாலாஜி அவர்களின் அனுபவம்: கூகுள், மைக்ரோசாஃப்ட், ஊபர், யாஹூ போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளை வகித்துள்ளார்.ஒரு நிறுவனத்தை நிறுவி அதில் தலைமை நிர்வாகியாக செயல்பட்டுள்ளார்.தொழில் துறைக்கான தானியங்கி தீர்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிறப்பான பங்களிப்புகளை செய்துள்ளார். 9 அமெரிக்க காப்புரிமைகள் (பேட்டன்கள்) பெற்றுள்ளார். ஃப்ளிப்கார்ட்டில் அவரது பங்கு: செயற்கை…
ரயில்வே பணியாளர்களுக்கு நிதி பாதுகாப்பு!
இந்திய ரயில்வே பணியாளர்களுக்கான நலனில் ஒரு புதிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. ரயில்வே துறை மற்றும் எஸ்பிஐ இணைந்து கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் மூலம், பணியாளர்களுக்கு மேம்பட்ட காப்பீடு பலன்கள் வழங்கப்படுகின்றன. முக்கிய நன்மைகளாக,• விபத்து மரணம் காப்பீடு – ரூ. 1 கோடி• முழு நிலை மாற்றுத்திறன் காப்பீடு – ரூ. 1 கோடி• பகுதி மாற்றுத்திறன் காப்பீடு – அதிகபட்சம் ரூ. 80 லட்சம்• இயல்பான மரணம் காப்பீடு– ரூ. 10 லட்சம் (மருத்துவ சோதனை அல்லது…
உணவுக் கழிவை உரமாக்கும் தென் கொரியா – உலகுக்கு முன்மாதிரி!
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் உணவுக் கழிவு பிரச்சினைக்கு, தென் கொரியா ஒரு புதுமையான தீர்வை கண்டுபிடித்துள்ளது. அங்குள்ள கம்யூனிட்டி கம்போஸ்டிங் இயந்திரங்கள், வீடுகளிலிருந்து வரும் உணவுக் கழிவுகளை ஒரே இரவில் பயனுள்ள இயற்கை உரமாக மாற்றுகின்றன. இந்த முறையின் மூலம், • குப்பைக் கிடங்குகளில் சேரும் கழிவு குறைகிறது• விவசாயம் மற்றும் தோட்டப்புற வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது• மண்ணின் வளம் அதிகரிக்கிறது• பசுமை வாழ்க்கை முறைக்கு மக்கள் நகர்கின்றனர் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னேற்றி, பூஜ்யக் கழிவு (Zero…
JSW – மின்சார வாகன பேட்டரி துறையில் – சீன நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை!
இந்தியாவில் மின்சார வாகனத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், JSW குழுமம் சீன, ஜப்பான் மற்றும் தென் கொரியா தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, சீனாவின் முன்னணி நான்கு நிறுவனங்களுடன் பேட்டரி தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான ஆழமான பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. உற்பத்தி திட்டம்: முதற்கட்டமாக 2027க்குள் 10 ஜிகாவாட் திறன் கொண்ட உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். அடுத்த கட்டத்தில் 2028 முதல் 2030க்குள் 20 ஜிகாவாட் திறன் சேர்க்கப்படும்.இறுதிக்கட்டமாக, மொத்த உற்பத்தி திறன் 50…
ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா விமான சேவை!
ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்க உள்ளதாக இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று மற்றும் எல்லைத் தகராறுகளால் 2020 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்த சேவை, இப்போது இருநாடுகளின் பொருளாதார மற்றும் சமூக உறவுகளுக்குப் புத்துயிர் ஊட்டும் வகையில் திரும்ப வருகிறது. 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் மற்றும் எல்லை பிரச்சினைகள் காரணமாக விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. 2025 ஆம் ஆண்டில்,…
அமெரிக்க வரியினால் பெப்சி, கோகோலா, கேஎஃப்சி புறக்கணிப்பு!
அமெரிக்கா இந்திய தயாரிப்புகளுக்கு அதிக சதவீதம் வரி விதித்த பின்னணியில், இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான புறக்கணிப்பு குரல் அதிகரித்துள்ளது. யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் நேரடியாக மக்களிடம் அழைப்பு விடுத்து, “ஒரு இந்தியரும் பெப்சி, கோகோலா, கேஎஃப்சி, மக்டொனால்ட்ஸ் அல்லது சப்வே கவுண்டர்களில் இருக்கக் கூடாது” என வலியுறுத்தியுள்ளார். இந்த அழைப்பு, பிரதமர் மோடி வலியுறுத்தி வரும் “வோக்கல் ஃபார் லொக்கல்” இயக்கத்துடன் இணைந்து “ஸ்வதேசி 2.0” என்ற புதிய தேசிய உணர்வை தூண்டுகிறது. இதன்…
தமிழ்நாடு அரசு: ஸ்டார்ட்அப் டேட்டா வவுச்சர் திட்டம் அறிமுகம்
தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் தொழில்நுட்பத்தையும், ஸ்டார்ட்அப்-களையும் வலுப்படுத்தும் நோக்கில் ஸ்டார்ட்அப் டேட்டா வவுச்சர் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தகுதி பெற்ற ஸ்டார்ட்அப்புகளுக்கு ஆண்டுதோறும் அதிகபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் வரை டேட்டா செலவுக்கான நிதியுதவி வழங்கப்படும். திட்ட காலம் மூன்று ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் சிறப்பம்சங்கள் இந்த திட்டத்துக்காக பத்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட க்ளவுட் சேவை வழங்குநர்களிடமிருந்து ஸ்டார்ட்அப்புகள் நாற்பது சதவீதம் வரை தள்ளுபடி பெறும் வகையில் அரசாங்கம்…
மத்திய அரசின் PM-VBRY : வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு புதிய ஊக்கம்!
இந்திய மத்திய அரசு, PM-VBRY (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) திட்டத்தை ஆகஸ்ட் 1, 2025 அன்று தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மொத்தம் ₹99,446 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் 3.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறைக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. புதிய ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ₹15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இது இரண்டு கட்டங்களாக வழங்கப்படும்: முதல் பகுதி: 6 மாதங்கள் தொடர்ந்து…
HDFC வங்கியின் புதிய கட்டண விதிகள் – IMPS, NEFT, செக்-புக் சேவைகளில் மாற்றம்!
HDFC வங்கி தனது சேவைகளில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை பொதுவாக இலவசமாக வழங்கப்பட்ட பணம் எடுத்தல், செக்-புக், IMPS, NEFT சேவைகளில் இருந்த இலவச வரம்புகள் இப்போது குறைக்கப்பட்டுள்ளன. வங்கியின் சேவைச் செலவுகளை சமநிலைப்படுத்தவும், வாடிக்கையாளர்கள் அதிகமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்த ஊக்குவிக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. செக்-புக் வழங்கலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு வருடத்திற்கு 25 பக்கங்கள் வரை இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், இனி மாதத்திற்கு ஒரு செக்-புக் மட்டும் இலவசமாக…
இந்தியாவில் UPI புரட்சி – பரிவர்த்தனைகள் புதிய உச்சம்!
இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் முறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கும் UPI (Unified Payments Interface) தற்போது உலகத்தையே ஆச்சரியப்படுத்தும் வளர்ச்சியை கண்டு வருகிறது. 2025ஆம் ஆண்டில், UPI பரிவர்த்தனைகளின் தினசரி மதிப்பும், எண்ணிக்கையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதத்தில் ஒரு நாளின் சராசரி பரிவர்த்தனை மதிப்பு ₹75,743 கோடி இருந்த நிலையில், ஆகஸ்டில் அது ₹90,446 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 127 மில்லியனிலிருந்து 675 மில்லியனாக உயர்ந்துள்ளது என்பது…
RBI புதிய ATM விதிகள் – இலவச வரம்பை கடந்தால் கூடுதல் கட்டணம்!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ள புதிய ATM விதிகள் படி, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும். மெட்ரோ நகரங்களில் குறைந்தது 3 இலவச பரிவர்த்தனைகள், மற்ற நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 5 இலவச பரிவர்த்தனைகள் வழங்கப்படுகின்றன. இவை financial transactions (பணம் எடுப்பது) மற்றும் non-financial transactions (இருப்பு பார்வை, PIN மாற்றம் போன்றவை) இரண்டையும் உள்ளடக்கும். இலவச வரம்பை மீறினால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் வங்கிகள் அதிகபட்சம்…
தூத்துக்குடி துறைமுகம் உட்சபட்ச சாதனை!
2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-இல், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் (VOC Port) புதிய சாதனையை படைத்தது: ஒரே கப்பலில் 101 காற்றாலை (wind turbine) இறக்கைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது முன்பிருந்த சாதனையைத் தாண்டிய தன்மை—முன்பு 75 இறக்கைகள் ஒரே ஆற்றல் முயற்சியில் ஏற்றமுடிந்தது. இந்த சாதனை, துறைமுகத்தின் சிறப்பான கையால் திறன், விரைவான இயந்திரங்கள், சரியான இடவசதி ஆகியவற்றால் வலியுறுத்தப்பட்டுள்ளது. VOC துறைமுகம் வருடாந்தரமாக கையாளும் காற்றாலை இறக்கைகள் எண்ணிக்கை, கடந்த ஆண்டு…
இந்திய ரயில்வே : நொடிக்கு 25,000 டிக்கெட் பதிவு செய்து சாதனை!
இந்திய ரயில்வேகள், பயணியர் முன்பதிவு அமைப்பில் (PRS) புதிய சாதனையை பதிவு செய்துள்ளன. தற்போது, PRS ஒரு நொடியிலேயே 25,000 டிக்கெட்டுகள் வரை பதிவு செய்யும் திறனை பெற்றுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அசுவினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதற்காக ₹182 கோடி செலவில் ஹார்ட்வேர், மென்பொருள், நெட்வொர்க் கருவிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் முழுமையான மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், பயணிகளுக்கான டிஜிட்டல் அனுபவம் மேலும் வலுப்பெற்றுள்ளது. மேலும், RailOne மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்…
கோவை தொழில்துறை சங்கங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை!
கோவையில் உள்ள தொழில்துறைகள் மற்றும் வணிக அமைப்புகள், தங்களின் நீண்டகால நிதி நிலைத்தன்மைக்காக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக TEXPROCIL முன்னாள் தலைவர் ரவி சாம் தலைமையில் நடைபெற்ற இந்த முயற்சி, தொழில்துறையின் எதிர்கால வளர்ச்சியை பாதுகாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய தொழில்துறை மையமாக விளங்கும் கோவை, எஞ்சினியரிங், துணிநூல், உற்பத்தி, மோட்டார், பம்ப் உற்பத்தி போன்ற துறைகளில் தனித்துவமான பங்கைக் கொண்டுள்ளது. இந்த துறைகள் மாநில பொருளாதாரத்திற்கும், இந்தியாவின் மொத்த வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க…
Toll – FASTag : வருடாந்திர பாஸ் அறிமுகம்!
மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்காக FASTag வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், வர்த்தகம் சாராத கார்கள், ஜீப்கள், வேன்களுக்கு ரூ.3,000 செலுத்தி ஒரு ஆண்டுக்குள் அதிகபட்சம் 200 முறை பயணிக்கலாம். இந்த வசதியால் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய சிரமம் குறைக்கப்பட்டு, ஆண்டுக்கு சுமார் ரூ.7,000 வரை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது. FASTag கணக்கில் வருடாந்திர பாஸ் மற்றும் வழக்கமான இருப்பு…


