நிதி மற்றும் பொருளாதாரம்
ஹெச்சிஎல் (HCL Tech) மூன்றாம் காலாண்டு முடிவுகள்: லாபத்தில் 11% சரிவு – டிவிடெண்ட் அறிவிப்பு!
இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான HCL டெக்னாலஜிஸ், 2025 டிசம்பர் காலாண்டு (Q3 FY26) நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. முன்னதாக டிசிஎஸ் நிறுவனம் லாபச் சரிவைச் சந்தித்த நிலையில், தற்போது ஹெச்சிஎல் நிறுவனமும் அதே பாதையில் பயணிப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வருவாய் வளர்ச்சி மற்றும் லாப நிலவரம்ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.4,591 கோடியாக இருந்தது. தற்போது அது 11 சதவீதம் சரிந்து ரூ.4,076 கோடியாகக்…
தமிழக அரசு ஊழியர்களுக்குப் புதிய ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’! ஜனவரி 1 முதல் அமல்!
தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (Tamil Nadu Assured Pension Scheme) கடந்த ஜனவரி 1, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான அரசாணையைத் தமிழக நிதித்துறைச் செயலாளர் உதயசந்திரன் வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) முன்மாதிரியாகக் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் நிதிப் பங்களிப்பு மற்றும் ஊதியச் சலுகைகள்இந்தத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அரசு…
இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பேரிடி: 500% வரி விதிக்கும் மசோதாவுக்கு டொனால்ட் ட்ரம்ப் பச்சைக்கொடி!
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளைக் கடுமையாகத் தண்டிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளின் பொருட்களுக்கு 500% வரை இறக்குமதி வரி விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரவும், பொருளாதார ரீதியாக ரஷ்யாவைத் தனிமைப்படுத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் இந்தியா,…
தனியார் ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்கிறதா? EPFO அதிரடித் திட்டம்!
இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை (Minimum Monthly Pension) உயர்த்த ஆலோசித்து வருகிறது. ஓய்வூதியத் தொகையில் 5 மடங்கு உயர்வு?தற்போது, இபிஎஸ் (EPS – Employee Pension Scheme) திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.1,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை தற்போதைய விலைவாசி உயர்வுக்குப் போதுமானதாக இல்லை எனத் தொழிலாளர்…
பொங்கல் பரிசு ரூ.3,000: எந்த ரேஷன் கார்டுக்கு பணம் கிடைக்கும்? யாருக்குக் கிடைக்காது?
2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அதிரடியாக ரூ.3,000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. ஆனால், அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இந்தத் தொகை கிடைக்காது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பரிசுத் தொகை பெறத் தகுதியான குடும்ப அட்டைகள்அரசு அறிவிப்பின்படி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த ரூ.3,000 மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். குறிப்பாக PHH (முன்னுரிமை குடும்ப அட்டை), PHH-AAY (அந்தியோதயா அன்ன யோஜனா அட்டை), NPHH…
பொங்கல் பரிசுத் தொகுப்பு: வீடு தேடி வரும் டோக்கன்! ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான பணிகளைத் தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், விநியோகத்தை முறைப்படுத்தவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். வீடு தேடி வரும் டோக்கன் மற்றும் நேரக் கட்டுப்பாடுரேஷன் கடை ஊழியர்கள் அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று டோக்கன்களை வழங்க வேண்டும். இந்த டோக்கன்களில் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொள்ள வேண்டிய நாள் மற்றும் நேரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஜனவரி…
8-வது சம்பள கமிஷன்: 2026-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள மழை!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8-வது சம்பள கமிஷன் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 7-வது சம்பள கமிஷனின் காலம் முடிவடைந்து, 2026 ஜனவரி 1 முதல் புதிய சம்பள விகிதங்கள் அமலுக்கு வர வேண்டும். புதிய சம்பளத்தை நிர்ணயிப்பதில் ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ (Fitment Factor) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது 2.15 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், ஆரம்ப நிலை ஊழியர்களின் சம்பளம் ரூ.18,000-லிருந்து ரூ.38,700 ஆக உயரக்கூடும். குரூப் ‘ஏ’ அதிகாரிகளுக்கு ரூ.5…
வருமான வரி ரீபண்ட் நிறுத்தம்: டிசம்பர் 31-க்குள் திருத்தப்பட்ட ஐடிஆர் தாக்கல் செய்ய எச்சரிக்கை!
இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறையிடமிருந்து மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. 2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையில் (ITR) முரண்பாடுகள் இருப்பதால், ரீபண்ட் (Refund) தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை தற்போது ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ மற்றும் மேம்பட்ட டேட்டா அனலிசிஸ் முறையைப் பயன்படுத்தி வருவதால், ஐடிஆர் தகவல்களுக்கும், வருமான வரித் துறையிடம் உள்ள படிவம் 16 அல்லது ஆண்டு தகவல் அறிக்கை (AIS)…
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள்: தேதிகள் அறிவிப்பு!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து இறப்பு, இரட்டைப் பதிவு மற்றும் முகவரி மாற்றம் போன்ற காரணங்களால் சுமார் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் பல தகுதியான வாக்காளர்களின் பெயர்களும் விடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் நான்கு நாட்கள் சிறப்பு முகாம்களை அறிவித்துள்ளது. சிறப்பு முகாம்கள் நடைபெறும்…
2025: இந்திய பொருளாதாரச் சுதந்திரத்தின் ஆண்டா? அரசின் மெகா சீர்திருத்தங்கள் ஒரு பார்வை!
இந்தியப் பொருளாதாரத்தில் 2025-ஆம் ஆண்டு ஒரு புதிய அத்தியாயமாகத் திகழ்கிறது. “தொழில் செய்வது இனி சுமையல்ல” என்ற இலக்கோடு, மத்திய அரசு மற்றும் செபி (SEBI), ஆர்பிஐ (RBI) போன்ற அமைப்புகள் கட்டுப்பாடுகளைக் குறைத்து, வளர்ச்சியை விரிவுபடுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளன. முக்கிய சட்ட மாற்றங்கள் மற்றும் எளிதாக்கப்பட்ட நடைமுறைகள்இதன் ஒரு பகுதியாக, ஜன் விஸ்வாஸ் 2.0 திட்டத்தின் கீழ் சுமார் 17 சட்டங்களைத் திருத்தி, மோட்டார் வாகனங்கள் மற்றும் ஏற்றுமதி தொடர்பான சிறிய…
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள்: 30% பேர் மட்டுமே 3 ஆண்டுகளைக் கடக்கின்றனர்!
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் அதிகரித்து வந்தாலும், முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு நிலைப்பதில்லை என்ற கவலையளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களில் வெறும் 30% பேர் மட்டுமே 3 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் முதலீட்டைத் தொடர்கின்றனர். பங்குச்சந்தை வீழ்ச்சியடையும் போது நஷ்டம் வந்துவிடுமோ என்ற பயம் மற்றும் போதிய அவசர கால நிதி இல்லாததால் வீட்டு விசேஷங்களுக்காக முதலீட்டை இடையில் நிறுத்துவது போன்றவை இதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பும்…
வரலாற்று உச்சத்தில் தங்கம், வெள்ளி: விலை ஏற்றத்தை அரசு கட்டுப்படுத்துமா? நிதி அமைச்சகத்தின் பதில்
இந்தியா முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து புதிய வரலாற்று உச்சங்களைத் தொட்டுவருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. சந்தை நிலவரமே விலை நிர்ணயம்: அரசின் நிலைப்பாடு இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பதிலளித்தார். அவர் அளித்த பதிலில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய விலைமதிப்பற்ற…
டிரம்பின் 50% இறக்குமதி வரியை இரண்டு மாதங்களில் முறியடித்த இந்தியாவின் வியூகம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 50 சதவீத இறக்குமதி வரியை விதித்திருந்தார். இந்தியப் பொருட்களுக்கான 25% வரி விதிப்புடன், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததற்கு தண்டனையாக மேலும் 25% என மொத்தம் 50% வரி விதிக்கப்பட்டதால், ஏற்றுமதித் துறை நிறுவனங்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜவுளி மற்றும் தோல் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால்…
அரிய ரூபாய் நோட்டுகளுக்கு லட்சங்களில் விலை: உங்கள் வீட்டில் இருக்கும் பழைய நோட்டை செக் பண்ணுங்க!
உங்கள் வீட்டில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்கள் மூலம் ஒரே இரவில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது ஆன்லைன் ஏலச் சந்தையில், குறிப்பிட்ட சில எண்கள் மற்றும் அம்சங்கள் கொண்ட பழைய நோட்டுகளுக்கு அதிக விலை பேசப்படுகிறது. எனவே, உங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் தாள்கள் அலமாரியில் இருக்கும் பொக்கிஷமாக இருக்கலாம். உங்களிடம் உள்ள பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்பதன் மூலம் பலர் ஏற்கனவே லட்சங்களில் வருமானம் ஈட்டியுள்ளனர். சிறப்பு…
ரேஷன் அட்டைதாரர்களுக்கான குறை தீர்ப்பு முகாம்: இன்று நடக்கிறது!
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) என்பது மானிய விலையில் பொருட்கள் பெறுவதற்கும், மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் அடிப்படையான ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ், ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. முக்கியச் சேவைகள் மற்றும் நடைபெறும் இடங்கள்அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திரப் பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று…
தங்கம் விலை: 2026-ஆம் ஆண்டில் 10 கிராம் ₹1.5 லட்சம் தொடுமா? கோடக் கணிப்பு!
2026-ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை பல மடங்கு உயருமா என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே நிலவி வருகிறது. இந்த நிலையில், கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனம் 2026-ஆம் ஆண்டுக்கான தங்கத்தின் விலை குறித்த தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை நிச்சயமாக உயரும் என அடித்துக் கூறும் கோடக் செக்யூரிட்டீஸ், இந்தியச் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை ₹1,50,000 என்ற உச்சத்தை எட்டும் எனக் கூறியுள்ளது. உலக அளவில் தங்கத்தின் விலையை உயர்த்துவதற்கான பல காரணிகள்…
மகளிர் உரிமைத் தொகை 2.0: வெள்ளிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
தமிழ்நாடு அரசின் பிரதான திட்டமான மகளிர் உரிமைத் தொகை திட்டம், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கி வருகிறது. 2023 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர். புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் மற்றும் தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு கேட்டு எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை நடத்தியது. இந்த முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் மகளிர்…
தொடர் சரிவில் ரூபாய் மதிப்பு: 2026-ஆம் ஆண்டுக்கான போஃபா செக்யூரிட்டிஸின் கணிப்பு என்ன?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அண்மைக் காலமாக வரலாறு காணாத சரிவைச் சந்தித்து வருகிறது. நடப்பு ஆண்டில் 7 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ள ரூபாய், ஆசிய மற்றும் வளர்ந்து வரும் சந்தை நாணயங்களில் மிக மோசமாகச் செயல்படும் ஒன்றாக உள்ளது. அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக ரூபாயின் இந்த பலவீனம் தொடரலாம் என BofA Securities (பாங்க் ஆஃப் அமெரிக்கா செக்யூரிட்டிஸ்) நிறுவனம் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது. ரூபாயின் மதிப்பிழப்பு…
மகளிர் உரிமைத் தொகை: நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்வது எப்படி?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் முன்னோடித் திட்டமான மகளிர் உரிமைத் தொகை, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதந்தோறும் 15-ஆம் தேதி வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்காக நடத்தப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் பெறப்பட்ட லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் தற்போது கள ஆய்வு செய்யப்பட்டு, பயனாளிகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றனர். தகுதி உள்ளவர்களுக்கு…
மீண்டும் வேலையைக் காட்டும் டிரம்ப்!! இந்திய அரிசிக்குக் கூடுதல் வரி விதிக்கத் திட்டம்!! அமெரிக்க விவசாயிகளுக்கு ஆதரவு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு புதிய வரிகளை விதிக்கப் போவதாகப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அச்சுறுத்தல் வெளியாகியுள்ளது. அரிசி மீதான அச்சுறுத்தலுக்கான காரணம்அமெரிக்க விவசாயிகளுக்கு 12 மில்லியன் டாலர் நிதி உதவி அறிவிப்பது தொடர்பான கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அமெரிக்க விவசாயிகள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தனர் குறைந்த விலை பாதிப்பு, மானிய விலையில்…
10,000 ரூபாய் SIP செய்தவர்களுக்கு ₹40 லட்சமாகத் திருப்பி தந்த டாப் 3 மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்!
சீரான முறையில் நீண்ட கால அடிப்படையில் தொடர்ச்சியாக முதலீட்டை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு, மிட்கேப் பரஸ்பர நிதிகள் (Midcap Mutual Funds) சிறந்த செல்வத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன. பெரிய நிறுவனப் பங்குகளைக் கொண்ட லார்ஜ்கேப் ஃபண்டுகளை விட அதிக வளர்ச்சி வாய்ப்புகளை மிட்கேப் ஃபண்டுகள் வழங்குகின்றன. மிட்கேப் ஃபண்டுகளின் பொதுவான செயல்பாடுகடந்த பத்தாண்டுகளில், மிட்கேப் ஃபண்டுகளின் சராசரி கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் (CAGR) 16.22% ஆக இருந்துள்ளது. இது லார்ஜ்கேப், லார்ஜ் & மிட்கேப், ELSS மற்றும்…
“8% வளர்ச்சி ஒரு மாயை? – RBI உடனடி வட்டி குறைப்பே இந்திய பொருளாதாரத்துக்கு உயிர்காக்கும் தீர்வு!”
இந்தியப் பொருளாதாரம் 8 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்திருந்தாலும், இந்தக் கணிசமான வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு தீவிரமான நிதிப் பிரச்சனை மறைந்திருப்பதாக சாம்கோ குழுமத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான ஜிமீத் மோடி எச்சரித்துள்ளார். இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க, ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி விகிதத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரத்தின் உண்மையான சவால்நாட்டின் உண்மையான வட்டி விகிதம் (Real Interest Rate) கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.25 சதவீதமாக உயர்ந்துள்ளது….
EPS-95 ஓய்வூதியம் ₹7,500 ஆக உயர வாய்ப்பில்லை! – நிதி வரம்புகளைச் சுட்டிக்காட்டி மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் உள்ள 80 லட்சத்திற்கும் மேற்பட்ட EPS-95 ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையானது, குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ₹1,000-ல் இருந்து ₹7,500 ஆக உயர்த்த வேண்டும் என்பதாகும். இந்தக் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய அரசு, ஓய்வூதிய உயர்வுக்கான உடனடித் திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அரசு அளித்த முக்கிய விளக்கங்கள்தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜே மக்களவையில் இதுகுறித்து பதிலளித்தார். அவர், ஓய்வூதியத்தை உயர்த்துவதில் உள்ள சவால்களுக்கு முக்கியக்…
இனி H1B விசா நிராகரிப்புக்கு புதிய காரணங்கள்! – ‘பேச்சு சுதந்திரம்’ மீதான கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டி டிரம்ப் நிர்வாகம் புதிய உத்தரவு
அமெரிக்காவில் திறன்மிக்க வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்தப் பயன்படும் H-1B விசா நடைமுறைகளில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பல கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவில் H-1B விசா மூலம் தங்கியிருப்பவர்களில் 70% பேர் இந்தியர்கள் என்பதால், இந்தக் கட்டுப்பாடுகள் அவர்களை நேரடியாகப் பாதிக்கக்கூடியவையாக உள்ளன. விசா விண்ணப்பத்தில் தீவிர ஆய்வுசமீபத்தில், அனைத்து அமெரிக்கத் தூதரகங்களுக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை (State Department) ஒரு குறிப்பாணையை (Memo) அனுப்பியுள்ளது. அதில், H-1B விசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதில் புதிய…
ரகுராம் ராஜனின் அதிரடி எச்சரிக்கை! அடுத்த உலக நிதி நெருக்கடிக்குத் தொடக்கப் புள்ளி இதுதான்: தனியார் கடன் சந்தை ஆபத்து!
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன், உலக அளவில் வளர்ந்து வரும் தனியார் கடன் சந்தையில் (Private Credit Market) ஆபத்து அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளார். சந்தையில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதும், வட்டி விகிதம் குறைவது குறித்த எதிர்பார்ப்புகளும் அடுத்த நிதி நெருக்கடிக்கு வித்திடலாம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் கடன் சந்தை என்றால் என்ன?தனியார் கடன் என்பது வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs), முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார்…
இந்திய ரூபாய்க்கு வரலாறு காணாத சரிவு! டாலருக்கு நிகரான மதிப்பு ₹90.02 ஆக சரிவு என்ன காரணம்?
இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், டிசம்பர் 2, 2025 அன்று வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 90.02 என்ற புதிய வரலாற்றுச் சரிவை (All-Time Low) பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய ரூபாய் ஆசியாவில் மிகவும் பலவீனமான நாணயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. ரூபாய் மதிப்புச் சரிவினால் ஏற்படும்…
8-வது சம்பள கமிஷன்: அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள சம்பள உயர்வு முறை மாற்றப்படுமா அல்லது அகவிலைப்படி அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கப்படுமா என்பது குறித்த குழப்பங்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஊழியர்களின் கோரிக்கைமத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படுகிறது. இடையில், பணவீக்கத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி (Dearness Allowance – DA) வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படைச் சம்பளத்தில்…
ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்! பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு! EPS-1995 குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹9,000 ஆக உயர வாய்ப்பு!
மத்திய அரசு அடுத்த நிதிநிலை அறிக்கைக்கான (யூனியன் பட்ஜெட்) பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்வரும் பட்ஜெட்டில் EPS-1995 (Employee Pension Scheme) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது தொடர்பான முக்கியமான அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலை மற்றும் கோரிக்கை தற்போதைய ஓய்வூதியம்: இந்தியாவில் நடைமுறையில் உள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டமான EPS-1995-ன் கீழ், ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் அரசின் ஆதரவுடன் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை தற்போது வெறும்…
பொருளாதார சரிவு – விழித்துக்கொள்ளுங்கள்.’Rich Dad Poor Dad’ ராபர்ட் கியோசாகி எச்சரிக்கை!
பண நிர்வாகம் மற்றும் முதலீட்டுத் துறையில் உலகப் புகழ்பெற்ற வழிகாட்டியான ராபர்ட் கியோசாகி, “Rich Dad Poor Dad” என்ற தனது புத்தகத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் நிதிச் சிந்தனையை மாற்றியவர். இப்போது அவர் உலகை உலுக்கும் ஒரு பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்: வரலாற்றின் மிகப்பெரிய பொருளாதாரச் சரிவு தொடங்கிவிட்டது! அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா எனப் பல கண்டங்களிலும் இதன் தாக்கம் பரவத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அபாயகரமான சரிவுக்கு ராபர்ட் கியோசாகி சுட்டிக்காட்டும் முக்கியக்…
மத்திய அரசு ஊழியர்களுக்காக 8ஆவது ஊதியக் குழு – அறிவிப்பு விரைவில்!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மாபெரும் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது! நீண்ட நாட்களாக அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 8ஆவது ஊதியக் குழு (8th Pay Commission) குறித்த அறிவிப்பு, மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1.15 கோடி பேருக்குப் பலன் ஊதிய உயர்வு: ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றை மறுஆய்வு செய்து அரசுக்கு புதிய பரிந்துரைகளை வழங்கும் குழுவே இந்த ஊதியக் குழு ஆகும். இது அமலுக்கு வந்தால்,…
- 1
- 2


