தொழில் & வர்த்தகம்
₹7,280 கோடியில் மத்திய அரசின் மெகா திட்டம்!
இந்தியாவில் மின்னணு சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவைப்படும் அரிய வகை நிரந்தர காந்தங்கள் (Rare Earth Permanent Magnets – REPM) பெரும்பாலும் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. உலகளவில் இந்த உற்பத்தியில் சீனாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சீனா இந்த அரிய வகைக் காந்தங்கள் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதித்ததால், இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இதற்கு மாற்று வழியை உருவாக்க…
மாருதி சுசுகி: 39,000 கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன! ‘கிராண்ட் விட்டாரா’வில் எரிபொருள் காட்சிச் சிக்கல்!
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனம், தனது பிரபலமான மாடலான கிராண்ட் விட்டாரா (Grand Vitara) கார்களில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, மொத்தம் 39,506 வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக (Recall) அறிவித்துள்ளது. காரணம் 2024 டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 9 ஆம் தேதி வரை தயாரிக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா கார்களில் சிலவற்றில் வேகமானி அசெம்பிளியில் (ஸ்பீடாமீட்டர்) இருக்கும் எரிபொருள் நிலை காட்டி மற்றும் எச்சரிக்கை விளக்கு ஆகியவை சரியாக…
பாரத் பே நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக (CHRO) ஹர்ஷிதா கன்னா நியமனம்!
இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் (FinTech) நிறுவனங்களில் ஒன்றான பாரத் பே (BharatPe) நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக (CHRO) ஹர்ஷிதா கன்னா நியமிக்கப்பட்டுள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறையில் 18 ஆண்டுகளுக்கும் அனுபவம் பெற்ற இவர் இதற்கு முன் ஹோம் கிரெடிட் இந்தியா (Home Credit India),அல்காடெல் லூசென்ட் (Alcatel Lucent),சி.எஸ்.சி (CSC),ஹெவிட் (Hewitt)போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து பாரத் பே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) நலின் நெகி கூறுகையில், “உயர் செயல்திறன் கலாச்சாரத்தை…
அரசுத் ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு – தீபாவளிக்கு முன் பெரிய பரிசு!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்காக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. வரும் தீபாவளி பண்டிகைக்கு முன், அரசாங்கம் 3% விலைவாசி தாங்கும் கொடுப்பனவு (DA) உயர்வை அறிவிக்க உள்ளது. இதனால் தற்போது வழங்கப்படும் 55% டிஏ, 58% ஆக உயர்கிறது. இந்த உயர்வால் மொத்தம் சுமார் 1.1 கோடி பேர் நேரடியாக பலன் பெறுவார்கள். டிஏ என்பது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் தொகையாகும். விலைவாசி உயர்வால் வாழ்க்கையில் ஏற்படும் கூடுதல் சுமையை குறைக்கும் வகையில் அரசு…
செப். 2025 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!
• செப்டம்பர் மாதம் எல்பிஜி (சமையல் எரிவாயு) சிலிண்டர் விலைகள் மாதத்தின் முதல் நாளில் மாற்றப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச எண்ணெய் விலை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் பரிமாற்ற விகிதம் ஆகியவை இதை சார்ந்த முக்கிய பின்புலமாக இருக்கின்றன. பொதுமக்கள், குறிப்பாக மாதாந்தம் சிலிண்டர் வாங்குவோர், இந்த மாற்றத்தினை கணக்கிட்டு முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். • தங்க நகைகளுக்கு தரத்திற்கான “ஹால்மார்க்” கட்டாயமாக்கப்பட்டுள்ளது போல, வெள்ளிக்கும் “ஹால்மார்க்” தரப்பதிவை கொண்டுவர…
உள்நாட்டு பொருட்களுக்கு ஆதரவு அளிக்க பிரதமர் மோடி அழைப்பு!
இந்தியாவின் பொருளாதார வலிமையை உயர்த்தவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் வெளிநாட்டு பொருட்களுக்கு இடமின்றி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “நம் நாட்டில் விவசாயிகள் உழைக்கிறார்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உற்பத்தி செய்கின்றன, அத்தகைய உள்நாட்டு பொருட்களை முன்னிறுத்தினால், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்” என்று மோடி குறிப்பிட்டார். மேலும், உள்நாட்டு பொருட்களை…
டிரம்பின் புதிய விசா திட்டம்: $15,000 கட்டணமா? யாரை பாதிக்கும்?
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், பல கடுமையான குடியுரிமை மற்றும் விசா விதிமுறைகளை எடுத்துவர ஆரம்பித்துள்ளார். அதில் மிகப்பெரிய எதிர்வினையை உருவாக்கியிருக்கிறது இந்த “$15,000 விசா பாண்ட் திட்டம்”. விசா பாண்ட் திட்டம் என்பது, சில நாடுகளின் பயணிகள் அமெரிக்கா வரும்போது, அவர்களின் விசா காலம் முடிந்த பிறகும் திரும்பி செல்லாமல் அனுமதி இல்லாமல் தங்குவார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், $15,000 வரை ஒரு பாண்ட் (பாதுகாப்புத் தொகை) செலுத்துவதாகும். இந்த திட்டத்தின் நோக்கம்:விசா விதிமுறைகளை மீறுவதைத்…
ஜியோ – அலியன்ஸ் : ஒப்பந்தம் கையெழுத்து
Jio Financial Services மற்றும் ஜெர்மனியை சேர்ந்த Allianz கம்பெனி இணைந்து இந்தியாவில் புதிய மீள்காப்பீடு (reinsurance) நிறுவனத்தை அமைக்க உள்ளன. இந்தத் திட்டம் இரு நிறுவனங்களும் 50:50 பங்குதாரராக இருக்கும் கூட்டு வணிக சேவை முயற்சியாகும். இரு நிறுவனங்களும் இந்திய காப்பீட்டு துறையின் வளர்ச்சியை முன்னேற்றி, life insurance மற்றும் general insurance நிறுவனங்களுக்கு பின்னணியில் பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தியாவில் 2047க்குள் “Insurance for All” என்ற குறிக்கோளை அடையும் முயற்சியின் ஒரு…
StableCoin Law – டொனால்டு டிரம்ப் ஒப்புதல்!
அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது ஸ்டேபிள்காயின் (Stablecoin) தொடர்பான முக்கியமான சட்டத்திற்கு கையெழுத்திட்டுள்ளார். 2025-ல் வர்த்தக உலகத்துக்குள் கிரிப்டோவை முழுமையாக கொண்டு வர இந்த சட்டம் வழிவகுக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். StableCoin Law – என்ன இந்த சட்டம்? இந்த புதிய சட்டத்தின் மூலம், டாலர் மதிப்பை சார்ந்த கிரிப்டோ கரன்சிகள், மிக தெளிவான விதிகளுடன் வளர்ச்சிக்கான வழியில், கட்டுப்பாடுகளுக்குள் கொண்டு வரப்படுகின்றன. இது, நிதி நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கும்….
Tesla Model Y – இந்தியாவில் அறிமுகம்!
டெஸ்லா நிறுவனம் தனது பிரபலமான Model Y எலக்ட்ரிக் கார் மூலம் இந்திய சந்தையில் அறிமுகமானது. இது டெஸ்லாவின் இந்தியாவுக்கான முதல் முயற்சியாகும். இந்த காரின் விலை ரூ.59.89 லட்சம் (Rear-Wheel Drive) முதல் ரூ.67.89 லட்சம் (Long Range) வரை இருக்கிறது. Model Y கார் ஒரே சார்ஜில் 500 முதல் 622 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடியது. காரின் வேகம், 0 முதல் 100 கிமீ வரை 5.6 முதல் 5.9 விநாடிகளில் அடையக்கூடியது. இதில்…
Forbes 2025 : இந்திய வம்சாவளியினரின் டாப் 10 பில்லியனர்கள்
Forbes வெளியிட்டுள்ள “America’s Richest Immigrants 2025” பட்டியலில், அமெரிக்காவில் வசிக்கும் 12 இந்திய வம்சாவளி பில்லியனர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் இந்திய வம்சாவளி முதலீட்டாளர்கள், இஸ்ரேலுக்குப் பின்னர் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப மற்றும் நிதி துறைகளில் தலைமை வகிக்கும் இந்தியர்கள், இப்பட்டியலில் மிகச் சிறப்பாக மின்னுகிறார்கள். இந்த பட்டியலில் Zscaler நிறுவனத்தின் நிறுவனர் ஜெய் சௌத்ரி, சுமார் $17.9 பில்லியன் சொத்து மதிப்புடன், அமெரிக்காவின் முதல் 10 பில்லியனர்கள் பட்டியலில் இடம்…
உலகின் 11 வது பெரிய பணக்காரரான சட்டோஷி! பிட்காயின் நிறுவனர்.
Bitcoin-ஐ உருவாக்கியவரான Satoshi Nakamoto இன்று உலகின் 11-வது பணக்காரராக உருவெடுத்துள்ளார். 2008-ஆம் ஆண்டு Bitcoin-இன் வெள்ளை ஆவணத்தை (White Paper) வெளியிட்டு, 2009-இல் அந்த நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியவர் Satoshi Nakamoto. இது ஒரு புனைபெயராக இருந்தாலும், இவர் ஒருவர் எனவும், சிலர் கூட்டு குழு எனவும் கருதப்படுகின்றனர். Nakamoto யார் என்பதை இன்று வரை உறுதியாகக் கூற முடியவில்லை என்பது ஒரு மிகப்பெரிய மர்மமாகவே இருக்கிறது. Blockchain பகுப்பாய்வு நிறுவமான Arkham வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில்,…
எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜினாமா: லிண்டா யாக்கரினோ விலகல்!
பிரபல சமூக ஊடகமான X (முன்னர் Twitter) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த லிண்டா யாக்கரினோ, திடீரென தனது பதவியை விட்டு விலக்கி உள்ளார். NBC Universal இல் விளம்பரத் துறையில் முன்னணி செயற்பாட்டாளராக இருந்த யாக்கரினோ, 2023ம் ஆண்டு எக்ஸில் சேர்ந்தார். எலான் மஸ்கின் பார்வைக்கு ஏற்ப சமூக ஊடகத்தை முழுமையாக மறுமலர்ச்சி செய்யும் முயற்சியில் இவர் முக்கிய பங்கு வகித்திருந்தார். தன்னுடைய தலைமையில், X தளத்தில் வீடியோ சென்டர், போட்காஸ்ட் போன்ற புதிய…
ரிலையன்ஸ் குழுமத்தில் அனந்த் அம்பானிக்கு புதிய பொறுப்பு – வருடாந்த சம்பளம் ரூ.10 முதல் 20 கோடி வரை!
இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நிறுவனத்தின் வருங்காலத் தலைமையைக் கட்டமைக்கும் நடவடிக்கைகளில் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. உலகத் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான அனந்த் அம்பானி, தற்போது ரிலையன்ஸ் குழுமத்தின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆக நியமிக்கப் பட்டுள்ளார். இந்த புதிய பொறுப்புடன் அனந்த் அம்பானிக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரையிலான சம்பள தொகை வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், நிலையான சம்பளமும், வெகுமதிகள், ஊக்கத்…
இந்தியாவின் தடை, பாகிஸ்தானுக்கு பாதிப்பு
இந்தியாவுடன் வாணிபத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தானில் சரக்கு மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளன. இந்தியா வழியாக கிடைக்கும் குறைந்த செலவிலான வழிகள் இப்போது கிடைக்காததால், உள்நாட்டு விநியோகச் செலவுகள் அதிகரித்து, பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கால்நடை விற்பனைக்கு புதிய இணையதளம்!
விவசாயிகள் தங்கள் மாடுகள் மற்றும் பிற கால்நடைகளை எளிதாக விற்பனை செய்யக்கூடிய புதிய இணையதளம் அறிமுகமாகியுள்ளது. நேரடி விற்பனை, விரைவான சந்தை அணுகல், மற்றும் மென்மையான பரிவர்த்தனை ஆகியவற்றை இத்தளம் வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இது கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு முக்கிய பயனளிக்கிறது.
கொடைக்கானலில் ஆப்பிள் பண்ணைகள் வளர்ச்சி பெறும் புதிய முயற்சி!
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஆப்பிள் பழங்கள் வெற்றிகரமாக சாகுபடி செய்யப்படுவதால், விவசாயிகள் இதனை புதிய வருமான வாய்ப்பாக ஏற்று வருகின்றனர். மாடல் பண்ணை திட்டத்தின் கீழ் அரசு ஆதரவுடன், ஆப்பிள் சாகுபடி விரிவடையும் நிலைமை உருவாகி வருகிறது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!
மேற்கு ஆசியாவில் உள்ள இஸ்ரேல்-ஈரான் இடையிலான பதற்றம் கடுமையாகி வருவதால், கச்சா எண்ணெய் விலை 4% உயர்ந்துள்ளது. இந்த நிலைமை பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்தும் அபாயத்தை உருவாக்கி உள்ளது. சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையை இது நேரடியாக பாதிக்கக்கூடும்.


