உணவுக் கழிவை உரமாக்கும் தென் கொரியா – உலகுக்கு முன்மாதிரி!


உலகம் முழுவதும் அதிகரித்து வரும் உணவுக் கழிவு பிரச்சினைக்கு, தென் கொரியா ஒரு புதுமையான தீர்வை கண்டுபிடித்துள்ளது. அங்குள்ள கம்யூனிட்டி கம்போஸ்டிங் இயந்திரங்கள், வீடுகளிலிருந்து வரும் உணவுக் கழிவுகளை ஒரே இரவில் பயனுள்ள இயற்கை உரமாக மாற்றுகின்றன.

இந்த முறையின் மூலம்,


• குப்பைக் கிடங்குகளில் சேரும் கழிவு குறைகிறது
• விவசாயம் மற்றும் தோட்டப்புற வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது
• மண்ணின் வளம் அதிகரிக்கிறது
• பசுமை வாழ்க்கை முறைக்கு மக்கள் நகர்கின்றனர்

சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னேற்றி, பூஜ்யக் கழிவு (Zero Waste) எதிர்காலம் நோக்கி நகரும் இந்த கண்டுபிடிப்பு, உலகின் நகரப் பகுதிகளுக்கு சிறந்த வணிக–சூழல் மாதிரியாக கருதப்படுகிறது.

தென் கொரியாவின் முயற்சி – கழிவைச் சுமையிலிருந்து வளமாக மாற்றும் புதிய வணிக வாய்ப்பு. இந்த முறை தொழில்நுட்பம் வளர்ச்சியை விரைவில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.