புதிய தொழிலாளர் சட்டங்கள்: ஐடி நிறுவனங்களுக்கு ரூ.3,000 கோடி கூடுதல் செலவு!
மத்திய அரசு கடந்த நவம்பர் 2025 முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் (New Labour Codes) இந்திய ஐடி ஜாம்பவான்களுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு மட்டும் டிசம்பர் 2025 காலாண்டில் சுமார் ரூ.3,000 கோடிக்கும் அதிகமான கூடுதல் செலவினம் உண்டாகியுள்ளது. டிசிஎஸ் மற்றும் ஹெச்சிஎல் நிறுவனங்களின் நிதித் தாக்கம்புதிய சட்டங்களின்படி பணிக்கொடை (Gratuity) மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்காகச் செய்ய வேண்டிய பங்களிப்பு கணிசமாக…


