ஜிஎஸ்டி குறைக்கப்பட்டும் விலையை அதிகரிக்க தயங்கும் நிறுவனங்கள்! அச்சத்தில் விழி பிதுங்கும் FMCG & ஆட்டோமொபைல் துறைகள்!
சோப்பு, பிஸ்கட், சலவை சோப்பு, வாகனங்கள் மற்றும் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் உள்ள நிறுவனங்கள், உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இப்போதைக்கு விலையை உயர்த்துவதற்குத் தயக்கம் காட்டி வருகின்றன. விலை உயர்வுக்கு காரணம் என்ன? மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, இறக்குமதிச் செலவுகள் உயர்வு போன்ற காரணங்களால் அனைத்துத் துறைகளிலும் உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், நிறுவனங்களின் லாப வரம்பு (Profit Margin) குறைகிறது. இந்தச் செலவுகளைச் சமாளிக்க அவர்கள் பொருட்களின் விலையை…


