தேசிய நெடுஞ்சாலைகளில் ‘நோ சிக்னல்’: நெட்வொர்க்கை மேம்படுத்த தொலைத்தொடர்புத் துறைக்கு என்எச்ஏஐ கோரிக்கை!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் நடத்திய விரிவான ஆய்வில், சுமார் 1,750 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய 424 இடங்களில் செல்போன் நெட்வொர்க் வசதி அறவே இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் தொலைதூர மற்றும் கிராமப்புறப் பகுதிகள் வழியாகச் செல்வதால், அங்கு சிக்னல் கிடைக்காமல் போவது அவசர கால மீட்புப் பணிகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளைப் பாதிப்பதாக என்எச்ஏஐ கவலை தெரிவித்துள்ளது. இந்தச் சவாலை எதிர்கொள்ள, மத்திய தொலைத்தொடர்புத்…

Read More

டோல் கட்டணத்தில் புதிய மாற்றம்: ஃபாஸ்டேக் (FASTag) இல்லையென்றால் இனி 2 மடங்கு கட்டணம்!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. இந்த விதிகளின்படி, வாகனங்களில் ஃபாஸ்டேக் இல்லாவிட்டாலோ அல்லது அதில் போதிய பணம் இல்லாவிட்டாலோ, வாகன ஓட்டிகள் கூடுதல் கட்டணத்தைச் செலுத்த நேரிடும். இது நவம்பர் 15, 2025 முதல் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமலுக்கு வந்துள்ளது. சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் சரியாக இயங்காத நிலையில், வாகன…

Read More