புதிய தொழிலாளர் சட்டங்கள்: ஐடி நிறுவனங்களுக்கு ரூ.3,000 கோடி கூடுதல் செலவு!

மத்திய அரசு கடந்த நவம்பர் 2025 முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் (New Labour Codes) இந்திய ஐடி ஜாம்பவான்களுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு மட்டும் டிசம்பர் 2025 காலாண்டில் சுமார் ரூ.3,000 கோடிக்கும் அதிகமான கூடுதல் செலவினம் உண்டாகியுள்ளது. டிசிஎஸ் மற்றும் ஹெச்சிஎல் நிறுவனங்களின் நிதித் தாக்கம்புதிய சட்டங்களின்படி பணிக்கொடை (Gratuity) மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்காகச் செய்ய வேண்டிய பங்களிப்பு கணிசமாக…

Read More

தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி: விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம்!

இந்தியாவில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில், நடப்பாண்டில் 19 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், விலை குறைந்ததாலும், குஜராத் உப்பின் வருகையாலும் 12 லட்சம் டன் உப்பு உப்பளங்களிலேயே தேங்கியுள்ளது. உப்பளப் பகுதிகள்: தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி போன்ற பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.சராசரி…

Read More

பிஎல்எஸ் இன்டர்நேஷனல்: விசா அவுட்சோர்சிங் சந்தையில் வல்லுநராக உயர்ந்த நிறுவனம்

பிஎல்எஸ் இன்டர்நேஷனல் சர்வீசஸ் என்பது விசா செயலாக்கம், தூதரக சேவைகள் மற்றும் குடிமக்கள் சேவைகள் வழங்கும் நிறுவனம். உலகம் முழுவதும் 46 நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், இந்தியாவில் இருந்து உலக அளவிலான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தற்போது பிஎல்எஸ் பங்குகள் சுமார் ₹330 விலையில் வர்த்தகமாகி வருகின்றன. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹13,600 கோடி வரை உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பிஎல்எஸ் பங்குகள் 1,500 % அளவுக்கு வளர்ந்துள்ளன — அதாவது, ஒரு லட்சம்…

Read More