FASTag முறையில் மாற்றம்: செயற்கைக்கோள் மூலம் டோல் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டம்!
இந்திய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களில் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் அவஸ்தைக்கு விரைவில் தீர்வு கிடைக்க உள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, செயற்கைக்கோள் அடிப்படையிலான புதிய டோல் வசூல் முறை குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் இந்த செயற்கைக்கோள் முறை அமலுக்கு வரும். இது ‘மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ’ (MLFF) அடிப்படையில் இயங்கும். இதற்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு…


