ஜிமெயில் பயனர்களுக்கு குட் நியூஸ்: டேட்டா அழியாமல் மின்னஞ்சல் முகவரியை மாற்றலாம்!

கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் (Gmail) பயனர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, புத்தாண்டு பரிசாக ஒரு அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இனி பயனர்கள் தங்களுடைய தற்போதைய @gmail.com முகவரியை, அதில் உள்ள தரவுகள் (Data) எதையும் இழக்காமல் எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். சிறுவயதில் அல்லது அவசரத்தில் உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் பலருக்கும் ‘ப்ரொபஷனலாக’ இருப்பதில்லை என்பதால், வேலைவாய்ப்பு போன்ற தேவைகளுக்காகப் புதிய முகவரிக்கு மாற விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகவல்கள்…

Read More

கூகுளின் ‘எமர்ஜென்சி லொகேஷன்’ சேவை இந்தியாவில் அறிமுகம்: முதற்கட்டமாக உத்தரப் பிரதேசத்தில் தொடக்கம்!

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக ‘எமர்ஜென்சி லொகேஷன் சர்வீஸ்’ (Emergency Location Service – ELS) என்ற உயிர்காக்கும் புதிய வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தச் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அவசரகாலச் சூழலில் ஒருவர் சிக்கிக்கொள்ளும்போது, அவரால் போன் செய்து தனது இருப்பிடத்தை விவரிக்க முடியாத நிலையிலும் இந்தச் சேவை பேருதவியாக இருக்கும். அவசரகால அழைப்பின் போது தானாகவே பகிரப்படும் இருப்பிடத் தகவல்உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இருந்து 112 போன்ற…

Read More

மனிதர்களுக்குப் பதில் AI-ஐப் பணிக்கு அமர்த்தியது தவறு! சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce) அதிகாரிகளின் பகீர் ஒப்புதல்!

உலகின் முன்னனி மென்பொருள் நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce), சமீபத்தில் மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள் தனக்கே தலைவலியாக மாறியுள்ளதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. சுமார் 4,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜெண்டுகளைப் பணிக்கு அமர்த்திய முடிவு பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. AI ஏஜெண்டுகளின் குழப்பமும் அதிகாரிகளின் வெளிப்படையான வருத்தமும்சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ‘ஏஜெண்ட்ஃபோர்ஸ்’ (Agentforce) என்ற பெயரில் AI ஏஜெண்டுகளை உருவாக்கி வழங்கியது. ஆனால், இவை நிஜமான வணிகத் தேவைகளைப்…

Read More

கூகுள் பே-யின் அதிரடி: ‘Flex’ டிஜிட்டல் கிரெடிட் கார்டு அறிமுகம்!

கூகுள் பே (Google Pay) பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் டிஜிட்டல் கிரெடிட் கார்டை ‘Flex by Google Pay’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்டு ஆக்சிஸ் வங்கியுடன் (Axis Bank) இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) ரூபே (RuPay) நெட்வொர்க்கில் செயல்படுகிறது. இந்த கிரெடிட் கார்டை பயனர்கள் தங்களின் UPI கணக்குடன் எளிதாக இணைக்க முடியும். இதன் மூலம் கடைகளில்…

Read More

AI புரட்சி: வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் – சுந்தர் பிச்சை எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து வருகிறது. AI நுழையாத துறையே இல்லை என்ற அளவுக்கு அது தன் கிளைகளைப் பரப்பிவிட்டது. இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் வேலையை எளிமையாக ஆக்கினாலும், அது லட்சக்கணக்கான ஊழியர்களின் வேலை வாய்ப்புகளையும் படிப்படியாகப் பறித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் டெக் நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; இதற்கு AI தொழில்நுட்பத்தின் வருகையே பெரும்பான்மையான…

Read More

2026-இல் கூகுளின் அடுத்த அதிரடி: ஜெமினி AI ஸ்மார்ட் கண்ணாடிகள் அறிமுகம்

கூகுள் நிறுவனம் 2026-ஆம் ஆண்டில் தனது முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் தற்போதைய மாடல்களுக்குப் போட்டியாக இந்த புதிய தயாரிப்பு வரவிருக்கிறது. கூகுள் இரண்டு வகையான கண்ணாடிகளை உருவாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. ஒன்று, “ஸ்கிரீன் இல்லாத உதவியை” வழங்கும் AI கண்ணாடிகள். இவை ஜெமினி AI-யுடன் உரையாடவும், புகைப்படங்கள் எடுக்கவும், உதவி பெறவும் ஸ்பீக்கர்கள், மைக்ரோஃபோன்கள் மற்றும் கேமராக்களைப் பயன்படுத்துகின்றன. மற்றொரு வகை, “டிஸ்ப்ளே AI கண்ணாடிகள்”…

Read More

இந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட்: டெக் நிறுவனங்களின் மிகப்பெரிய முதலீடு ஏன்?

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி டெக் நிறுவனங்களின் கவனம் தற்போது இந்தியாவின் மீது தீவிரமாகத் திரும்பியுள்ளது. கூகுள், மைக்ரோசாப்ட், இன்டெல் மற்றும் காக்னிசன்ட் போன்ற உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் அடுத்தடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டைத் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் இந்தியாவை ஒரு சந்தையாக மட்டும் பார்க்காமல், தங்களின் முக்கியமான டெக் மற்றும் உற்பத்தி மையமாக மாற்ற முன்வந்துள்ளன. இதன் மூலம், ஏஐ (AI) மையமாகவும், கிளவுட் உள்கட்டமைப்பு, டேட்டா…

Read More

AI-யைப் பற்றி நினைத்தால் தூக்கம் வரவில்லை!” – டீப்ஃபேக் வீடியோக்களால் அச்சுறுத்தும் சுந்தர் பிச்சை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அதிவேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. மனிதர்கள் செய்து வந்த பல வேலைகள் தற்போது AI தொழில்நுட்பத்தின் வசம் சென்ற வண்ணம் உள்ளன. சுந்தர் பிச்சையின் அச்சம்கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, AI தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி குறித்து தனக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசுகையில், “AI தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்று நினைத்தால் இரவு நேரங்களில் தனக்குத் தூக்கமே வருவதில்லை”…

Read More

ஐடி ஊழியர்கள் தலையில் இடியை இறக்கிய LTI Mindtree: 1,500 ‘டிஜிட்டல் ஊழியர்களை’ பணிக்கு அமர்த்தியது!

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான எல்டிஐ மைண்ட் ட்ரீ (LTI Mindtree), செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1,500 டிஜிட்டல் ஊழியர்களை உருவாக்கி, தனது செயல்பாடுகளில் களமிறக்கியுள்ளது. இந்த அறிவிப்பு, ஏற்கனவே பணிநீக்க அச்சத்தில் உள்ள ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்பணி அமர்த்தப்பட்டுள்ள பிரிவுகள் வாடிக்கையாளர் சேவை (Customer Service), நிதித்துறை (Finance), மற்றும் உள்கட்டமைப்புச் செயல்பாடு (Infrastructure Operations) ஆகிய பிரிவுகளில் இந்த 1,500…

Read More

“அது ஒரு மிகப் பெரிய ரகசியம்”… ChatGPT-யின் வெற்றிக்குக் காரணமான ‘விஞ்ஞான அதிர்ஷ்டம்’ குறித்து சாம் ஆல்ட்மேன் தகவல்!

உலகப் புகழ் பெற்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓப்பன்ஏஐ (OpenAI)-இன் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், ChatGPT-யின் (Large Language Model – LLM) உருவாக்கத்தில் ஆரம்பத்தில் தாங்கள் கண்டறிந்த சில அடிப்படை விதிமுறைகள் ஒரு மகத்தான திருப்புமுனையாக அமைந்ததாகக் கூறியுள்ளார். சாம் ஆல்ட்மேன் கூறியதுஓப்பன்ஏஐ-இல் முதலீடு செய்துள்ள முக்கிய நிறுவனங்களில் ஒன்றான அன்ட்ரீசன் ஹொரோவிட்ஸ் (a16z) உடன் நடந்த உரையாடலில், சாம் ஆல்ட்மேன் பின்வரும் முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்: ‘பெரும் விஞ்ஞான அதிர்ஷ்டம்’ செயற்கை…

Read More

எலான் மஸ்க் நேர்காணல், நிகில் காமத் வெளியிட்ட 39 வினாடி வீடியோ!

இந்தியாவின் மிகப் பிரபலமான பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளில் ஒன்று, ஜெரோதாவின் (Zerodha) இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் ‘WTF is?’ ஆகும். இந்த நிகழ்ச்சியில் குமார் மங்களம் பிர்லா, பில் கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடி போன்ற உலகப் புகழ்பெற்ற முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். தற்போது, நிகில் காமத் அடுத்தகட்டமாக உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியாளரான எலான் மஸ்க் உடன் உரையாடுவது போன்ற ஒரு வீடியோ டீசரை X (முன்பு ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ளார். இது இணையவாசிகள்…

Read More

கூகுள் மேப்ஸில் 10 புதிய அம்சங்கள் அறிமுகம்!

அமெரிக்காவிற்கு வெளியே, இந்தியாவுக்காக  பிரத்யேகமாக கூகுள் மேப்ஸில் (Google Maps) 10 புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மேம்படுத்தல்கள் பயனர்களின் பயணத்தை எளிதாக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. முக்கிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள்: 1. ஜெமினி AI ஒருங்கிணைப்புடன் வழிகாட்டுதல் (Gemini AI Integration) குரல் வழிக் கட்டுப்பாடு: கூகுள் மேப்ஸில் உள்ள புதிய அம்சங்கள், ஜெமினி AI  உடன் இணைக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் இனி தங்கள் மொபைல் திரையைத்…

Read More

Paytm-இல் புரட்சி! AI வசதியுடன் புதிய வடிவத்தில் ரீலாஞ்ச்! இனி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தங்க நாணயமும் கிடைக்கும்!

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனங்களில் ஒன்றான Paytm, தனது செயலியைப் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வடிவம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பயனர்களின் நிதிப் பரிவர்த்தனை அனுபவத்தை எளிமையாகவும், தனிப்பயனாக்கப்பட்டதாகவும் மாற்றுகிறது. புதிய செயலியின் முக்கிய அம்சங்கள் 1.  AI அடிப்படையிலான பரிவர்த்தனை நிர்வாகம்:     இந்த மேம்படுத்தப்பட்ட செயலி, பயனர்களின் செலவு முறைகளைப் புரிந்துகொண்டு பரிவர்த்தனைகளைத் தானாகவே ஒழுங்குபடுத்துகிறது.    பயனர்களின் நிதிப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப, பணத்தை…

Read More

ரூ.88 லட்சம் கோடி சம்பளம் சும்மா கொடுப்பாங்களா! எலான் மஸ்க்-கிற்கு டெஸ்லா நிர்வாகம் வைத்த 4 தரமான செக்!

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை நீண்ட காலத்திற்குத் தக்கவைத்துக்கொள்ளவும், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், அதன் பங்குதாரர்கள் எலான் மஸ்க்-கிற்கு 1 டிரில்லியன் டாலர் (தோராயமாக ₹88 லட்சம் கோடி) மதிப்பிலான சம்பளத் தொகுப்புக்கு நவம்பர் 6, 2025 அன்று ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த மாபெரும் தொகையைப் பெற, எலான் மஸ்க் 10 ஆண்டுகளுக்குள் (2035 வரை) டெஸ்லா நிர்வாகம் நிர்ணயித்த, எட்ட முடியாத அளவு சவாலான 12 வர்த்தக இலக்குகள் மற்றும் 12 நிதியியல் இலக்குகளை அடைய…

Read More

ஏஐ தரவு மையங்களும் தண்ணீர் பிரச்சினையும்!

உலகளவில் டிஜிட்டல் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் (AI) அபரிமிதமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கு முதுகெலும்பாகச் செயல்படும் தரவு மையங்கள் (Data Centers) மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவாலை, குறிப்பாகத் தண்ணீர் பற்றாக்குறையை, ஏற்படுத்தி வருகின்றன. இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா இந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது குறித்த விரிவான அலசல் இது. தரவு மையங்களின் அவசியம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோன்கள், சமூக ஊடகங்கள், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஏஐ செயலிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பச்…

Read More

போர்ட்டர் (Porter) நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோர் பணி நீக்கம்! செலவுக் குறைப்புக்காக 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்கியது!

பெங்களூருவைச் சேர்ந்த முன்னணி லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான போர்ட்டர் (Porter), அதன் செலவுகளைக் குறைக்கும் முயற்சியாகவும், நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியைத் திட்டமிடுவதற்காகவும் சுமார் 300 முதல் 350 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை நிறுவனத்தை மேலும் திறமையாகவும், நிதி ரீதியாக வலுவாகவும் மாற்றும் சீரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் சரியான எண்ணிக்கையை போர்ட்டர் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. நிறுவனத்தின் அறிக்கை இதுகுறித்து போர்ட்டர்…

Read More

மஹிந்திராவின் ஆதரவால் பேசுபொருளான “அரட்டை”

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்புக்கு மாற்றாக, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் Zoho உருவாக்கிய “அரட்டை (Arattai)” செயலி தற்போது மீண்டும் இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது சமூக வலைத்தளத்தில் “இன்று நான் ‘அரட்டை’ செயலியை பெருமையுடன் பதிவிறக்கம் செய்தேன்” என கூறியதும், இந்திய தொழில்நுட்ப உலகம் முழுவதும் பெரும் கவனம் ஈர்த்தது. இதற்கு பதிலளித்த Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, “அந்தப் பதிவு வந்தபோது நாங்கள் தென்காசி அலுவலகத்தில் செயலி…

Read More

ஒராக்கிள் நிறுவனத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம்!

ஒராக்கிள் நிறுவனம் உலகளவில் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிலிப்பைன்ஸ், கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் பணிநீக்க அலை. இந்தியாவின் பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை, புனே போன்ற நகரங்களில் பணிநீக்கம் தீவிரமாக நடந்துள்ளது.    பணிநீக்கத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள்: 2022ல் $28.3 பில்லியன் செலவில் செர்னர் (Cerner) நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, ஒராக்கிள் அதன் வணிக அமைப்பில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது. செலவுக் குறைப்பு…

Read More

செயற்கை நுண்ணறிவு தாக்கம் – 4,000 ஊழியர்களை நீக்கிய சேல்ஸ்ஃபோர்ஸ்!

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான சேல்ஸ்ஃபோர்ஸ், தனது ஆதரவு பிரிவில் 9,000 பேரில் 4,000 ஊழியர்களை நீக்கியுள்ளது. இதனால் மொத்த பணியாளர் எண்ணிக்கை 5,000 ஆகக் குறைந்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவின் விரைவான பயன்பாடு பணியிடங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் காட்டுகிறது.                                                                     ஏன் இத்தகைய முடிவு? நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் பெனியோஃப் கூறுகையில், “செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உதவியாளர்கள் (AI Agents) வாடிக்கையாளர் கேள்விகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கத் தொடங்கியதால், மனித பணியாளர்களின் தேவைகள்…

Read More

AI  வளர்ச்சி – 5 ஆண்டுகளில் மனிதர்களின் நிலை!

தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எதிர்கால உலகத்தை முழுமையாக மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக  உலகப் புகழ் பெற்ற இந்திய வம்சாவளியிலான தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் Sun Microsystems நிறுவன நிறுவனர் வினோத் கோஸ்லா ஒருவர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “இன்னும் 5 ஆண்டுகளில், உலக வேலைவாய்ப்புகளில் 80% ஐ AI ஆக்கிரமித்துவிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட நபர்கள்…

Read More