தமிழக அரசு ஊழியர்களுக்குப் புதிய ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’! ஜனவரி 1 முதல் அமல்!

தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (Tamil Nadu Assured Pension Scheme) கடந்த ஜனவரி 1, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான அரசாணையைத் தமிழக நிதித்துறைச் செயலாளர் உதயசந்திரன் வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) முன்மாதிரியாகக் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் நிதிப் பங்களிப்பு மற்றும் ஊதியச் சலுகைகள்இந்தத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அரசு…

Read More

பொங்கல் பரிசு ரூ.3,000: எந்த ரேஷன் கார்டுக்கு பணம் கிடைக்கும்? யாருக்குக் கிடைக்காது?

2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அதிரடியாக ரூ.3,000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. ஆனால், அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இந்தத் தொகை கிடைக்காது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பரிசுத் தொகை பெறத் தகுதியான குடும்ப அட்டைகள்அரசு அறிவிப்பின்படி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த ரூ.3,000 மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். குறிப்பாக PHH (முன்னுரிமை குடும்ப அட்டை), PHH-AAY (அந்தியோதயா அன்ன யோஜனா அட்டை), NPHH…

Read More

10 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப்! தமிழக அரசின் “உலகம் உங்கள் கையில்” திட்டம் துவக்கம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் “உலகம் உங்கள் கையில்” என்ற புதிய டிஜிட்டல் முன்னேற்றத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் மற்றும் AI வசதிஜனவரி 5-ம் தேதி மாலை 3 மணிக்கு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன. இதில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல்,…

Read More

பொங்கல் பரிசுத் தொகுப்பு: வீடு தேடி வரும் டோக்கன்! ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான பணிகளைத் தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், விநியோகத்தை முறைப்படுத்தவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். வீடு தேடி வரும் டோக்கன் மற்றும் நேரக் கட்டுப்பாடுரேஷன் கடை ஊழியர்கள் அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று டோக்கன்களை வழங்க வேண்டும். இந்த டோக்கன்களில் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொள்ள வேண்டிய நாள் மற்றும் நேரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஜனவரி…

Read More

எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு ஜாக்பாட்! சாலை வரி விலக்கை 2027 வரை நீட்டித்தது தமிழக அரசு!

தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் (Electric Vehicles – EV) பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 100% சாலை வரி (Road Tax) விலக்கு சலுகை, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2027 டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்ட 100% வரிச் சலுகைதமிழக அரசின் புதிய அரசாணையின்படி, 2025 டிசம்பர் 31-வுடன் முடிவடைய இருந்த இந்த வரி விலக்கு சலுகை, தற்போது 2027 டிசம்பர் 31…

Read More

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள்: தேதிகள் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து இறப்பு, இரட்டைப் பதிவு மற்றும் முகவரி மாற்றம் போன்ற காரணங்களால் சுமார் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் பல தகுதியான வாக்காளர்களின் பெயர்களும் விடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், பெயர் சேர்க்க  தேர்தல் ஆணையம் நான்கு நாட்கள் சிறப்பு முகாம்களை அறிவித்துள்ளது. சிறப்பு முகாம்கள் நடைபெறும்…

Read More

தாயுமானவர் திட்டம்: ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தமிழக அரசின் அதிரடி மாற்றம்!

தமிழகத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வீடு தேடியே ரேஷன் பொருட்களை வழங்கும் ‘தாயுமானவர் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பொருட்கள் விநியோகம் செய்வதில் இருந்த நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் தமிழக அரசு இப்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வழக்கமாக இத்திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்படும்போது, பயனாளிகளின் கைவிரல் ரேகை அல்லது கண் கருவிழி (Biometric) சரிபார்க்கப்படும். ஆனால், பல நேரங்களில் சர்வர் கோளாறு, நெட்வொர்க் பிரச்சனை அல்லது…

Read More