இனி புதிய சொந்தப் பயன்பாட்டு வாகனப் பதிவுக்கு ஆர்.டி.ஓ அலுவலகம் செல்லத் தேவையில்லை.
டிசம்பர் முதல் ஆர்.டி.ஓ அலுவலங்களில் சொந்தப் பயன்பாட்டு வாகனங்களைப் பதிவு செய்வதில் பெரும் சலுகையை மோட்டார் வாகனத் துறை வழங்கியுள்ளது. தமிழகத்தில் தினமும் ஏறத்தாழ 8,000 வாகனங்கள் புதிதாக வாங்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் தமிழக மோட்டார் வாகனத்துறையில் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. இதற்காக அனைத்து வாகனங்களையும் ஆர்.டி.ஓ அலுவலங்கங்களுக்கு கொண்டு வர வேண்டும் என்னும் வழக்கம் இதுவரையில் நடைமுறையில் இருந்தது.தமிழகத்தில் 150க்கும் குறைவான ஆர்,டி,ஓ அலுவலகங்கள் மட்டுமே உள்ளன. எனவே ஒவ்வொரு அலுவலகத்திலும்…


