டாடா மோட்டார்ஸ் ரீ-என்ட்ரி – உலக சந்தையின் புதிய அடையாளம்”

டாடா மோட்டார்ஸ் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க பயணிகள் கார் சந்தையில் மீண்டும் நுழைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் விலகிய பிறகு, இப்போது மீண்டும் Punch, Curvv, Tiago, Harrier போன்ற புதிய வாகன வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய மற்றும் போட்டி நிறைந்த சந்தையில் இந்தியாவின் வாகன நிறுவனம் மீண்டும் தனது இடத்தை பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சந்தையில் டாடா மோட்டார்ஸ் எதிர்கொள்ளும் சவால்கள் சீன மற்றும் பிற சர்வதேச உற்பத்தியாளர்களின் வலுவான…

Read More

டிஜிட்டல் இந்தியா பயணத்தில் அஞ்சல் துறையின் – IT 2.0 திட்டம்!

இந்திய அஞ்சல் துறை, Digital India நோக்கில் தனது முன்னேற்றப் பயணத்தில் IT 2.0 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம், மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்பத்தை கொண்டு, நிதி சேவைகள், வேகம் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 1.65 லட்சம் அஞ்சல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை ஒரே தரமான சேவை கிடைக்கும். இந்த அமைப்பு MeGraj 2.0 Mega Cloud மற்றும் BSNL  இணைப்பு மூலம்…

Read More

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இணைய வசதி – கல்விக்கான டிஜிட்டல் முன்னேற்றப் புரட்சி!

2021-ல் முதல்-அமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, “ஒவ்வொரு தமிழ்நாட்டுப் பிள்ளையும் தரமான கல்வியைப் பெற வேண்டும்” என்ற இலக்குடன் பல முன்முயற்சிகள் தொடங்கப்பட்டன. இதில், தனித்துவமான மொழி, பண்பாடு மற்றும் சமூக மரபுகளைப் பிரதிபலிக்கும் முறையில் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கையின் படி, தமிழ் பள்ளிகளில் “வாசிப்பு இயக்கம்” மூலம் 1 முதல் 12-ம் வகுப்பு வரை 44.50 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இந்நிலையில், 28,667 அரசு தொடக்கத்திலிருந்து மேல்நிலைப்பள்ளிகளில் அதிவேக இணைய…

Read More

உலகின் நம்பிக்கையாக மாறும் இந்திய பொருளாதாரம்!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நிகழ்த்திய உரையில், இந்தியா சிறிய மாற்றங்களை (Incremental Changes) மட்டும் அல்லாமல், பெரிய மாற்றங்கள் (Quantum Jump) அளவிலான சீர்திருத்தங்களையே முன்னெடுத்து வருவதாகக் கூறினார். அவர் வலியுறுத்திய “Reform, Perform, Transform” தத்துவம், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அரசின் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அரசாங்கம் முன்னெடுத்து வரும் GST 2.0, வருமான வரி சட்ட திருத்தங்கள், Jan Vishwas 2.0 போன்ற முக்கியமான சீர்திருத்தங்கள், பொருளாதாரத்திற்கு புதிய வேகத்தை வழங்கும் என்று…

Read More

இந்திய தபால் ஊழியர்கள் – மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள்!

இந்தியாவின் நிதி சந்தையை ஊரகத்திற்கும் விரிவாக்கும் நோக்கத்தில், இந்தியா போஸ்ட் மற்றும் AMFI (Association of Mutual Funds in India) இணைந்து ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தபால்காரர்கள் அதிகாரப்பூர்வமாக Mutual Fund Distributors ஆகப் பயிற்சி பெற்று, ஊரக மக்களுக்கு முதலீட்டு சேவைகளை வழங்கப் போகிறார்கள். முதல் கட்டத்தில், பீஹார், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மெகாலயா மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 10…

Read More

நவீன ட்ரோன்கள் –  தமிழ்நாட்டு நெல் வயல்களில் புதிய புரட்சி

தமிழ்நாடு விவசாயத்துறை, நெல் பயிர்ச்செய்கையில் ட்ரோன் பரப்புதல் முறையை அறிமுகப்படுத்தி, புதிய டெக்னோ-ரீவல்யூஷனை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தொழிலாளர்கள் பற்றாக்குறை, வேதிப்பொருள் புகை தாக்கம் போன்ற சிக்கல்கள் குறையும் நிலையில், ஒரு ஏக்கர் பரப்பை சில நிமிடங்களில் முடிக்கும் திறன் ட்ரோன்களுக்கு கிடைத்துள்ளது. அரசு சார்பில் Uzhavan ஆப், SMAM, Namo Drone Didi போன்ற திட்டங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் பெண்கள் சுயஉதவி குழுக்களுக்கு நிதி மற்றும் பயிற்சி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் பலனாக,…

Read More

தமிழ்நாடு – புதிய தொழில் வளர்ச்சி வியூகம் | Statewide Business டெவெலப்ன்ட்!

தமிழ்நாடு – இந்தியாவின் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பெற்ற ஒரே மாநிலம் என்ற பெருமையுடன், மாநிலம் முழுவதும் சமமான தொழில் வளர்ச்சி என்ற புதிய வியூகத்தை நோக்கி நகர்கிறது. மற்ற மாநிலங்கள் வளர்ச்சியை சில முக்கிய நகரங்களில் மட்டும் மையப்படுத்தும் நிலையில், தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் முதலீடுகளை கொண்டு செல்லும் பகிர்ந்தளிப்பு வளர்ச்சி மாதிரியை செயல்படுத்தி வருகிறது. தென் தமிழகம் உட்பட பல மாவட்டங்களில் வின்ஃபாஸ்ட் மின் வாகன ஆலைகள், டாடா மோட்டார்ஸ் திட்டங்கள்,…

Read More

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் | Green Railway Revolution in India

இந்திய ரயில்வே, பசுமைப் பயண  நோக்கில் முதன்முறையாக ஹைட்ரஜன் இயந்திர ரயிலை உருவாக்கியுள்ளது. சென்னையின் இன்டிக்ரல் கோச் ஃபேக்டரியில் (ICF Chennai) இறுதி சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததும், இந்த ரயில் ஹரியானாவின் ஜிந்த் – சோனிபத் பாதையில் இயக்கப்பட உள்ளது. ₹136 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இது, இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்வே முயற்சி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த ரயில் 1,200 ஹார்ஸ்பவர் சக்தி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், தினமும் சுமார் 356 கிலோமீட்டர் பயணிக்கக்கூடியது. ஒரே…

Read More

மூத்த குடிமக்கள் வரி – நாட்டின் பொருளாதாரத்தில் புதிய சக்தி!

மூத்த குடிமக்கள், குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டோர், இந்திய மத்திய அரசின் வருமானவரி வசூலுக்கான ஒரு முக்கிய ஆதாரமாக மாறி வருகின்றனர். நிதி அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையைப் பொறுத்து, 2023‑24 நிதியாண்டில் இந்தப் பிரிவிலிருந்து ரூ. 61,624 கோடி வருமானவரி வசூலாகியுள்ளதாகத் தெரிகிறது —இது கடந்த ஆண்டிலிருந்து 28% உயர்ந்து இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், இதனால் மொத்த வருமானவரி வசூலில் இந்த பங்களிப்பின் காரணமாக 5.3% இல் இருந்து 5.9% வரை உயர்ந்துள்ளது. இந்த உயர்வு…

Read More

“பொதுச்சேவையில் புதிய யுகம் – ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் ”

ஆந்திரப் பிரதேச அரசு சமீபத்தில் ஒரு நவீனமான ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்குதல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயல்முறை நிவாரண மற்றும் மக்கள் சேவைத் திட்டங்களில் ஒரு புதிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. புதிய கார்டுகள் குடும்பத் தலைவரின் புகைப்படம், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், மேலும் QR குறியீட்டினால் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் முறைகேடுகள், அடையாளத் திருட்டு, மற்றும் தவறான பயன்பாடுகள் குறைக்கப்பட உள்ளன. கார்டுகள் ஒரு வாலட் வடிவில் தயாரிக்கப்பட்டதால் மக்கள் எளிதில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்….

Read More

செப். 2025 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

• செப்டம்பர் மாதம் எல்பிஜி (சமையல் எரிவாயு) சிலிண்டர் விலைகள் மாதத்தின் முதல் நாளில் மாற்றப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச எண்ணெய் விலை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் பரிமாற்ற விகிதம் ஆகியவை இதை சார்ந்த முக்கிய பின்புலமாக இருக்கின்றன. பொதுமக்கள், குறிப்பாக மாதாந்தம் சிலிண்டர் வாங்குவோர், இந்த மாற்றத்தினை கணக்கிட்டு முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். • தங்க நகைகளுக்கு தரத்திற்கான “ஹால்மார்க்” கட்டாயமாக்கப்பட்டுள்ளது போல, வெள்ளிக்கும் “ஹால்மார்க்” தரப்பதிவை கொண்டுவர…

Read More

தமிழ்நாடு: உலக அளவிலான Non-Leather காலணி உற்பத்தி மையம்!

தமிழ்நாடு தற்போது தோல் சார்ந்து அல்லாத காலணிகளின் (non-leather footwear) முக்கிய உற்பத்தி மையமாக மாறி வருகிறது. முதலில் தோல் உற்பத்தியில் முன்னணி நிலையை வைத்திருந்த தமிழ்நாடு, தற்போது non-leather காலணிகளில் உலகளாவிய சந்தைக்கு உற்பத்தி செய்யும் முன்னணி மாநிலமாக உருவாகியுள்ளது. Nike, Crocs, Adidas, Puma போன்ற பிரபல பிராண்டுகளுக்கான உற்பத்தி இங்கே நடைபெறுகிறது. சர்வதேச ஒத்துழைப்பு மூலம், Shoetown, Feng Tay, Pou Chen, Hong Fu போன்ற நிறுவனங்கள் மிகப்பெரிய non-leather காலணி…

Read More

செமிகண்டக்டர் மிஷன் – மீண்டும் மத்திய அரசு ₹4,600 கோடி நிதி!

இந்தியா செமிகண்டக்டர் மிஷன் (ISM) திட்டத்தின் கீழ் மொத்தம் ₹76,000 கோடி மதிப்புள்ள நிதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் செமிகண்டக்டர் உற்பத்திக்காக ₹65,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் ₹62,900 கோடி வரை நிதி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதால், மொத்த நிதியில் 97% பயன்படுத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் புதிய திட்டங்களுக்கு மிகக் குறைவான இடமே மீதமுள்ளது. இந்த விவரத்தை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்னன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ஒதுக்கப்பட்ட நிதியில்…

Read More

ஓசூர் விமான நிலையம் – உறுதி செய்யப்பட்ட இடம்!

பெங்களூரு அருகில் வேகமாக உயர்ந்து வரும் தொழில் முகாமாகிய ஓசூருக்கு, “விமானம் நிலையம்” அமைக்கும் எதிர்பார்ப்பில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு, ஓசூர் விமான நிலையத்திற்கான இடமாக பேரிகை–பாகலூர் அருகிலுள்ள பகுதிகளைத் தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. முன் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட OLS (Obstacle Limitation Surfaces) ஆய்வின் அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த இடம், ஓசூரில் இருந்து சுமார் 25 கிமீ தூரத்திலும், பாகலூரில் இருந்து 12 கிமீ தூரத்திலும், கர்நாடக–தமிழ்நாடு எல்லை அத்திப்பள்ளி…

Read More

20 ஆண்டு பழைய வாகனங்களுக்கு RC புதுப்பிப்பு கட்டணம் உயர்வு – வாகன உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்!

மத்திய சாலை போக்குவரத்து துறை வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, 20 ஆண்டுகளை கடந்த பழைய வாகனங்களுக்கான பதிவு (RC) புதுப்பிப்பு கட்டணம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இலகு வகை வாகனங்களுக்கு (Private Cars) பதிப்பு கட்டணம் ₹5,000–இருந்து ₹10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; இருசக்கர வாகனங்களுக்கு ₹1,000–இருந்து ₹2,000; மூன்று சக்கர வாகனங்களுக்கு ₹1,500–இருந்து ₹5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவு, பெரும் பிரச்னையாக உருவாகிக் கொண்டிருக்கும் காற்று மாசு பிரச்சனையை சமாளிக்கவும், அதிக புகை வெளியீடு…

Read More

GST 2.0 – வருகிறதா இரண்டு கட்ட வரி அமைப்பு?

இந்தியாவின் GST வரிவிகித அமைப்பில் பெரும் மாற்றம் வரவிருக்கிறது.  இரண்டு கட்ட வரி அமைப்பிற்கான (two-slab structure)  பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய 5%, 12%, 18% மற்றும் 28% எனும் நான்கு படிகள் சுருக்கப்பட்டு, இனி 5% மற்றும் 18% என்ற இரண்டு கட்ட வரிகளாக மாற்றப்பட உள்ளது. இதனுடன், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் ‘Sin goods’ என அழைக்கப்படும் பொருட்களுக்கு 40% தனித்த வரி விகிதமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. • பொதுமக்களுக்கு தேவையான…

Read More

பி.எஸ்.என்.எல்.க்கு ரூ.6,982 கோடி நிதி – மத்திய அரசு

இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். (BSNL) வளர்ச்சிக்கும், நவீனமயத்திற்கும் மத்திய அரசு பெரிய ஆதரவு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.6,982 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம், பி.எஸ்.என்.எல். தனது 4G மற்றும் 5G சேவைகளை விரிவுபடுத்தவும், நவீன உள்கட்டமைப்பை உருவாக்கவும் பயன்படுத்தப்படும். தொலைத்தொடர்பு துறையில் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட பி.எஸ்.என்.எல்.க்கு இது ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, இந்த நிதி திட்டம்…

Read More

இந்திய ஆன்லைன் கேமிங் கட்டுப்பாட்டில் பெரிய மாற்றம்!

இந்திய நாடாளுமன்றம் “Promotion & Regulation of Online Gaming Bill, 2025”-ஐ நிறைவேற்றி, பண அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டுகளை முழுமையாக தடை செய்துள்ளது. • இனி ரியல்-மணி கேமிங் ஆப்ஸ் (Dream11, MPL போன்றவை) – விளம்பரம், ஒப்புதல், பண பரிமாற்றம் – அனைத்தும் சட்ட விரோதமாகக் கருத்தப்படும். • மீறினால் 3 ஆண்டு சிறை அல்லது ₹1 கோடி அபராதம்; மீண்டும் மீறினால் ₹2 கோடி வரை அபராதம் + 5 ஆண்டு சிறை…

Read More

உள்நாட்டு பொருட்களுக்கு ஆதரவு அளிக்க பிரதமர் மோடி அழைப்பு!

இந்தியாவின் பொருளாதார வலிமையை உயர்த்தவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் வெளிநாட்டு பொருட்களுக்கு இடமின்றி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “நம் நாட்டில் விவசாயிகள் உழைக்கிறார்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உற்பத்தி செய்கின்றன, அத்தகைய உள்நாட்டு பொருட்களை முன்னிறுத்தினால், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்” என்று மோடி குறிப்பிட்டார். மேலும், உள்நாட்டு பொருட்களை…

Read More

செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் புதிய கட்டம்: Cabinet ஒப்புதலுடன் ₹4,600 கோடி முதலீடு, 2,034 வேலை வாய்ப்பு

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா செமிகண்டக்டர் மிஷன் (ISM) திட்டத்தின் கீழ் மேலும் 4 புதிய செமிகண்டக்டர் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இப்போது வரை அனுமதிக்கப்பட்ட 6 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்க, இந்த 4 புதிய அனுமதிகளால் இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் முன்னேற்ற வேகம் அதிகரித்து வருகிறது. அனுமதி பெற்றுள்ள நிறுவனங்கள் — SiCSem, Continental Device India Private Limited (CDIL), 3D Glass Solutions Inc.,…

Read More

கோவையில் தனித்திறன் பயிற்றுனர்கள் சந்திப்பு :2.0!

நமது வணிகம் ஊடகம் மற்றும் கூட்டமைப்பு (COTE) – NVMA ஏற்பாடு செய்திருந்த தனித்திறன் பயிற்றுனர்களுக்கான  ஒரு நாள் சந்திப்பு, 10.08.2025 – ஞாயிறு அன்று கோவையில் காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட தனித் திறன் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு தற்கால சமுதாயம், தொழில்நுட்பம், பயிற்சியாளர்களுக்கு தேவையான அடிப்படை திறன்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் முறை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முக்கிய சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து…

Read More

மின்சார வாகனம்: 2030க்குள் 30% விற்பனை இலக்கு

தகவல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வணிக வளர்ச்சியை ஒரே நேரத்தில் முன்னெடுக்க இந்திய அரசு மிக முக்கியமான முடிவுகள் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நிதி ஆயோக் தற்போது மின்சார வாகனங்களுக்கான (EV – Electric Vehicles) தேசிய நிலைத் திட்டத்தை (National EV Policy) உருவாக்க விரும்புகிறது. அதற்கு தேவையான துறைசார் கொள்கைகள், சிக்கனமான சார்ஜிங் மையங்கள் அமைப்பது, உற்பத்தி வசதிகள் மேம்பாடு, மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்…

Read More

வெள்ளி விலை ரூ.2000 உயர்வு!

சென்னை : சந்தையில் வெள்ளி விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,000 உயர்ந்து தற்போது ₹1,25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி ₹125 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இந்த விலை உயர்வின் முக்கிய காரணமாக சர்வதேச சந்தை நிலவரம், மத்திய வங்கி முடிவுகள் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த சில வாரங்களில் தொடர்ந்து விலை ஏற்றம் காணப்பட்டு வந்த…

Read More

உலகளவில் 3 பில்லியன் ஐபோன்கள் விற்பனை! Apple-ன் மெகா சாதனை.

Apple நிறுவனத்தின் CEO டிம் குக், சமீபத்தில் அறிவித்த தகவலின்படி, 2007ல் அறிமுகமான iPhone இன்று வரை 3 பில்லியன் யூனிட்கள் வரை உலகம் முழுவதும் விற்பனையானது. இது, எந்தவொரு மொபைல் நிறுவனமும் இதுவரை எட்டாத சாதனை. முக்கிய அம்சங்கள்: 2025 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் iPhone விற்பனை 13% அதிகரித்து, $44.6 பில்லியன் வருமானம் கிடைத்துள்ளது. மொத்த நிறுவன வருமானம் $94 பில்லியன் வரை உயர்ந்துள்ளது. Apple வரலாற்றில், முதல் பில்லியன் iPhones விற்பனைக்கு…

Read More

அமெரிக்கா – 6 இந்திய நிறுவனங்களுக்குத் தடை!

அமெரிக்கா, ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்ததற்காக இந்தியாவில் உள்ள 6 நிறுவனங்கள் மீது தடைகள் விதித்துள்ளது. இந்த நிறுவனங்கள், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி, பின்பு அதை சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 220 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் பொருளாதார தடைகள் அமைப்பான OFAC (Office of Foreign Assets Control) இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து சீனாவை…

Read More

இந்தியாவிற்கு 25% வரி விதித்தது USA!

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 25 சதவீதம் கூடுதல் வரி விதித்து அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த வரி உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படுகின்றன என்ற காரணத்தைக் கொண்டு அமெரிக்கா எடுத்துள்ள கடுமையான நடவடிக்கை இது. இந்த வரி ஸ்டீல், அலுமினியம் பொருட்கள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், பிளாஸ்டிக் பாகங்கள், வேளாண்மை சார்ந்த சில பொருட்கள் மீதும் இந்த வரி அமலாகிறது. இதனால் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் பெரும் அபாயத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல…

Read More

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு, மின் சாதன ஏற்றுமதி அதிகரிப்பு!

கனடா, சீனா ஆகிய நாடுகளின் பொருள்களுக்கு, அமெரிக்கா கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளதால், அமெரிக்காவின் மின் சாதனங்கள் வேளாண் மற்றும் ஜவுளி பொருட்களின் இறக்குமதியில், இந்தியாவின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. 2025 மே மாதத்தில் அமெரிக்காவின் மின்னணு பொருட்கள் இறக்குமதியில், இந்தியாவின் பங்கு 3.5 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரம், சீனாவின் பங்கு 22 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைந்துள்ளது. மின்னணு துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஸ்மார்ட் போன்கள் மற்றும் சோலார் பேனல்கள் முக்கிய…

Read More

லோதா டெவலப்பர்ஸ் –  டெல்லியில் ₹1,900 கோடி மதிப்பில் வீடுகளுக்கான திட்டம்!

மும்பையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் Lodha Developers, தற்போது டெல்லி NCR பகுதியில் ₹1,900 கோடி மதிப்பில் (அதாவது $220 மில்லியன்) ஒரு புதிய வீட்டு திட்டம் (residential project) கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது அவர்களின் டெல்லியில் முதலாவது திட்டமாகும். திட்ட விவரங்கள்:திட்ட மதிப்பு: ₹1,900 கோடிதொடக்க காலம்: 2026 ஏப்ரல்இடம்: டெல்லி NCRபிரிவு: உயர் தரமான குடியிருப்பு வீடுகள் Lodha-வின் Chief Sales Officer பிரசாந்த் பிந்து கூறியபடி,…

Read More

கூகுள் ₹20,000 கோடிக்கு வின்ட்சர்ஃப் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஒப்பந்தம்!

Google, அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக, சமீபத்தில் ஒரு மிகப்பெரிய ஒப்பந்தத்தில் $2.4 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ₹20,000 கோடி) செலுத்தி Windsurf என்ற AI ஸ்டார்ட்அப்பின் முக்கிய தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள  உரிமம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், Windsurf நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வருண் மோகன் மற்றும் முக்கிய ஆராய்ச்சி குழுவினர்கள் Google-இன் DeepMind பிரிவில் இணைக்கப்படுகிறார்கள். இதன் மூலம் Google, “Gemini” எனப்படும் தனது AI திட்டத்தில் முன்னேற்றம் செய்யும்…

Read More

₹5000 கோடியில் இந்தியாவின் கனிமங்களுக்கான திட்டம்

சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளைச் சமாளிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், இந்திய அரசு ரேர் எர்த் மற்றும் மேக்னெட்டுகளுக்கான புதிய PLI (Production Linked Incentive) திட்டத்தை தயாரித்து வருகிறது. இது ₹3,500 முதல் ₹5,000 கோடி வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் மதிப்பு: ₹3,500 – ₹5,000 கோடி.இது “Reverse auction” முறை மூலம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதற்கு அடுத்த 2 வாரங்களில் அமைச்சக அளவில் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு. 2025க்குள் ரேர் எர்த்…

Read More