ரகுராம் ராஜனின் அதிரடி எச்சரிக்கை! அடுத்த உலக நிதி நெருக்கடிக்குத் தொடக்கப் புள்ளி இதுதான்: தனியார் கடன் சந்தை ஆபத்து!
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன், உலக அளவில் வளர்ந்து வரும் தனியார் கடன் சந்தையில் (Private Credit Market) ஆபத்து அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளார். சந்தையில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதும், வட்டி விகிதம் குறைவது குறித்த எதிர்பார்ப்புகளும் அடுத்த நிதி நெருக்கடிக்கு வித்திடலாம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் கடன் சந்தை என்றால் என்ன?தனியார் கடன் என்பது வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs), முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார்…


