வங்கி கணக்கு இல்லாமலேயே UPI! சிறுவர்கள் மற்றும் இளம் வயதினருக்காக ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்!

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் யுபிஐ (UPI), தற்போது வங்கி கணக்கு இல்லாத குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரையும் (Kids and Teens) சென்றடைய உள்ளது. திட்டத்தின் பின்னணி இந்தியாவில் தற்போது யுபிஐ பாதுகாப்பான மற்றும் வேகமான டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறையாக அதிவேக வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், வங்கி கணக்கு இல்லாத சிறுவர்களும் யுபிஐ பேமென்ட்களைப் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யும் ஒரு புதிய திட்டத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி…

Read More

Paytm-இல் புரட்சி! AI வசதியுடன் புதிய வடிவத்தில் ரீலாஞ்ச்! இனி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தங்க நாணயமும் கிடைக்கும்!

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனங்களில் ஒன்றான Paytm, தனது செயலியைப் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வடிவம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பயனர்களின் நிதிப் பரிவர்த்தனை அனுபவத்தை எளிமையாகவும், தனிப்பயனாக்கப்பட்டதாகவும் மாற்றுகிறது. புதிய செயலியின் முக்கிய அம்சங்கள் 1.  AI அடிப்படையிலான பரிவர்த்தனை நிர்வாகம்:     இந்த மேம்படுத்தப்பட்ட செயலி, பயனர்களின் செலவு முறைகளைப் புரிந்துகொண்டு பரிவர்த்தனைகளைத் தானாகவே ஒழுங்குபடுத்துகிறது.    பயனர்களின் நிதிப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப, பணத்தை…

Read More

உலகளாவிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஸ்கோடா இந்தியா!

செக் குடியரசைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா (Skoda), இந்தியாவில் தனது சந்தைப் பிரிவை விரிவுபடுத்தும் நோக்கில், அதன் உலகளாவிய (Global) கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். திட்ட விவரங்கள் புதிய மாடல்கள்: இந்த ஆண்டின் ஆக்டேவியா (Octavia) மாடலில் செய்யப்பட்ட மேம்படுத்தலைப் போலவே, அடுத்த ஆண்டு இந்தியச் சந்தையை உற்சாகப்படுத்தும் வகையில் மேலும் சில உலகளாவிய கார்களை அறிமுகப்படுத்த ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட்…

Read More

உலகத் தரத்திற்கு மாறும் பொதுத்துறை வங்கிகள்! மாஸ்டர் பிளான் போட்ட மத்திய அரசு! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த அப்டேட்!

இந்திய வங்கித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில், நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை (Public Sector Banks – PSB) ஒன்றிணைத்து, சர்வதேச அளவில் போட்டியிடும் திறன் கொண்ட உலகத் தரமான வங்கிகளை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசின் புதிய திட்டம் என்ன? ஆலோசனை:  நவம்பர் 6 அன்று மும்பையில் நடந்த எஸ்.பி.ஐ யின் வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் பேசிய‌…

Read More

ரூ.88 லட்சம் கோடி சம்பளம் சும்மா கொடுப்பாங்களா! எலான் மஸ்க்-கிற்கு டெஸ்லா நிர்வாகம் வைத்த 4 தரமான செக்!

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை நீண்ட காலத்திற்குத் தக்கவைத்துக்கொள்ளவும், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், அதன் பங்குதாரர்கள் எலான் மஸ்க்-கிற்கு 1 டிரில்லியன் டாலர் (தோராயமாக ₹88 லட்சம் கோடி) மதிப்பிலான சம்பளத் தொகுப்புக்கு நவம்பர் 6, 2025 அன்று ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த மாபெரும் தொகையைப் பெற, எலான் மஸ்க் 10 ஆண்டுகளுக்குள் (2035 வரை) டெஸ்லா நிர்வாகம் நிர்ணயித்த, எட்ட முடியாத அளவு சவாலான 12 வர்த்தக இலக்குகள் மற்றும் 12 நிதியியல் இலக்குகளை அடைய…

Read More

6 ஆண்டுகளில் ₹53 லட்சம் வீட்டுக் கடன் செட்டில்! ஒரு டெக்கியின் ஸ்மார்ட் கால்குலேஷன் மற்றும் மனப்பாடங்கள்!

ஜெர்மனியில் ஒரு வாகன நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் ஓர் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர், தான் எடுத்த ₹53 லட்சம் வீட்டுக் கடனை, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே ஆறு ஆண்டுகளுக்குள் (செப்டம்பர் 2019 முதல் நவம்பர் 2025 வரை) முழுமையாகச் செலுத்தி முடித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். முக்கியக் கடன் விவரங்கள் அசல் கடன் தொகை: ₹53 லட்சம் செலுத்தப்பட்ட மொத்த வட்டி: ₹14 லட்சம் செலுத்தப்பட்ட மொத்தத் தொகை: ₹67 லட்சம்கடன் முடித்த காலம்: 6 ஆண்டுகள்…

Read More

25 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களாக்கிய எஸ்ஐபி! மாதம் ₹10,000 முதலீட்டில் ₹8.81 கோடி வருமானம் – முன்னணி ஈக்விட்டி ஃபண்டுகள்!

மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி (SIP – Systematics Investment Plan) முறையில் தொடர்ந்து முதலீடு செய்வது நீண்ட காலத்தில் பெரும் செல்வத்தை உருவாக்க முடியும் என்பதைப் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்திய முதலீட்டுச் சந்தையில் கடந்த 25 ஆண்டுகளில் இந்த உத்தி எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் இங்கே: நவம்பர் 4, 2000 முதல் நவம்பர் 4, 2025 வரையிலான 25 ஆண்டுகாலப் பகுதியில், 30 ஆண்டுகளுக்கு மேல் சந்தையில் உள்ள 18 ஃபண்டுகள் உட்பட,…

Read More

வேலூர் டைடல் பார்க்கை திறந்து 24 மணிநேரத்தில் மொத்தமாக குத்தகைக்கு எடுத்த AGS நிறுவனம்!

தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையை ஒரு சில நகரங்களுக்குள் மட்டும் சுருக்காமல் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு இடங்களில் டைடல் பூங்காக்கள் மற்றும் மினி டைடல் பூங்காக்களை அமைத்து வருகிறது. வேலூர் மினி டைடல் பூங்கா விவரங்கள் அமைவிடம்: வேலூர் மாவட்டத்தின் அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே 4.98 ஏக்கர் பரப்பளவில் இந்த மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. செலவு மற்றும் பரப்பு: மொத்தம் ₹32 கோடி செலவில் தரை மற்றும்…

Read More

ஏஐ தரவு மையங்களும் தண்ணீர் பிரச்சினையும்!

உலகளவில் டிஜிட்டல் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் (AI) அபரிமிதமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கு முதுகெலும்பாகச் செயல்படும் தரவு மையங்கள் (Data Centers) மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவாலை, குறிப்பாகத் தண்ணீர் பற்றாக்குறையை, ஏற்படுத்தி வருகின்றன. இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா இந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது குறித்த விரிவான அலசல் இது. தரவு மையங்களின் அவசியம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோன்கள், சமூக ஊடகங்கள், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஏஐ செயலிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பச்…

Read More

ஜி20 குழுவின் அதிர்ச்சி அறிக்கை: இந்தியாவின் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம் 23 ஆண்டுகளில் 62% அதிகரிப்பு!

சர்வதேச சமத்துவமின்மையின் நிலை குறித்து ஆராய, தென் ஆப்பிரிக்கத் தலைமையால் நியமிக்கப்பட்ட ஜி20 நிபுணர் குழு, சமத்துவமின்மை உலகளவில் “அவசரநிலை” அளவை எட்டியுள்ளது என்று எச்சரித்துள்ளது. இந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் செல்வந்தர்கள் அடைந்த அபரிமிதமான வளர்ச்சி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் வளர்ச்சி வளர்ச்சி விகிதம்: இந்தியாவில் உள்ள முதல் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம், கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான 23 ஆண்டுகளில் 62%…

Read More

போர்ட்டர் (Porter) நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோர் பணி நீக்கம்! செலவுக் குறைப்புக்காக 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்கியது!

பெங்களூருவைச் சேர்ந்த முன்னணி லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான போர்ட்டர் (Porter), அதன் செலவுகளைக் குறைக்கும் முயற்சியாகவும், நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியைத் திட்டமிடுவதற்காகவும் சுமார் 300 முதல் 350 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை நிறுவனத்தை மேலும் திறமையாகவும், நிதி ரீதியாக வலுவாகவும் மாற்றும் சீரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் சரியான எண்ணிக்கையை போர்ட்டர் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. நிறுவனத்தின் அறிக்கை இதுகுறித்து போர்ட்டர்…

Read More

ஆறு மாதங்களில் 18% உயர்வு – மாருதி சுசுகி முன்னிலை!

இந்தியாவிலிருந்து பயணிகள் வாகனங்களின் (Passenger Vehicles) ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆறு மாத காலப்பகுதியில், ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 18.4% உயர்ந்து, மொத்தம் 4,45,884 யூனிட்களை எட்டியுள்ளது. பிரிவுகள் வாரியான வளர்ச்சிமொத்த பயணிகள் வாகன ஏற்றுமதியில் ஏற்பட்ட இந்த வளர்ச்சியில், பல்வேறு பிரிவுகள் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளன. பயணிகள் கார்கள் (Passenger Cars) ஏற்றுமதி 12% அதிகரித்து 2,29,281 யூனிட்களாக உயர்ந்துள்ளது….

Read More

முத்தூட் மைக்ரோஃபின்: ₹375 கோடி நிதி திரட்டத் திட்டம்!

முத்தூட் குழுமத்தின் மைக்ரோஃபின் நிறுவனமான முத்தூட் மைக்ரோஃபின் (Muthoot Microfin), விரைவில் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ₹375 கோடி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது. பத்திரங்கள் வெளியீடு: இன்டெர்னலாக விற்கப்படும் மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (Non-Convertible Debentures) மூலம் இந்நிறுவனம் ரூ. 375 கோடியைத் திரட்ட முடிவு செய்துள்ளது. வட்டி விகிதம்: இந்தக் கடன் பத்திரங்களுக்கு 9.5% வட்டி விகிதம் வழங்கப்பட உள்ளது. யாருக்காக: இந்தக் கடன் பத்திரங்கள் அதிக நிகர் மதிப்புள்ள தனிநபர்களுக்கு (High…

Read More

₹500 கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கிக்கு கடும் சவால் – மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் புதிய 500 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகளின் புழக்கம் கணிசமாகக் கூடியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை (Department of Economic Affairs) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. கள்ள நோட்டுப் புழக்கத்தின் நிலை இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளில், 500 ரூபாய் நோட்டுகள்தான் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன. உயர் மதிப்புள்ள ₹2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகளை நோக்கி இதன் புழக்கம்,மாறியுள்ளது. 2024-25 நிதியாண்டில்…

Read More

உலக நிதித்துறையை உலுக்கிய $500 மில்லியன் மோசடி! இந்தியத் தொழிலதிபரால் BlackRock திணறல்!

உலகளாவிய நிதிச் சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் பிளாக்ராக் (BlackRock) நிறுவனத்தின் தனிநபர் கடன் பிரிவு, 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் ₹4,170 கோடி) அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தும் பெரிய மோசடிக்கு உள்ளாகியுள்ளது. இது உலகத் தனியார் கடன் துறையில் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மோசடி பின்னணிஅமெரிக்க வாழ் இந்திய வம்சாவளித் தொழிலதிபரான பங்கிம் பிரம்மபட் தனது தலைமையிலான பிராட்பேண்ட் டெலிகாம், பிரிட்ஜ்வாய்ஸ் மற்றும் கேரியாக்ஸ் கேபிடல் நிறுவனங்கள் மூலம் இந்த மோசடியினை…

Read More

பாரத் பே நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக (CHRO) ஹர்ஷிதா கன்னா நியமனம்!

இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் (FinTech) நிறுவனங்களில் ஒன்றான பாரத் பே (BharatPe) நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக (CHRO) ஹர்ஷிதா கன்னா நியமிக்கப்பட்டுள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறையில் 18 ஆண்டுகளுக்கும் அனுபவம் பெற்ற இவர் இதற்கு முன் ஹோம் கிரெடிட் இந்தியா (Home Credit India),அல்காடெல் லூசென்ட் (Alcatel Lucent),சி.எஸ்.சி (CSC),ஹெவிட் (Hewitt)போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து பாரத் பே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) நலின் நெகி கூறுகையில், “உயர் செயல்திறன் கலாச்சாரத்தை…

Read More

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ வசதியை உறுதி செய்வதற்காக, கேரள அரசு செயல்படுத்தி வரும் முக்கிய திட்டமான ‘காருண்ய ஆரோக்கிய சுரக்ஷா பத்வதி’ (Karunya Arogya Suraksha Padhathi – KASP) திட்டத்திற்கு, கூடுதலாக ₹250 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், கேரளா மாநிலத்தில் உள்ள சுமார் 41.99 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு நிதி ரீதியான பெரும் பலன் உறுதி செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: ₹5 லட்சம் வரை காப்பீடு: KASP திட்டத்தின் கீழ்,…

Read More

வீட்டுக் கடன் வட்டி – ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள ஒரு முக்கிய அறிவிப்பின்படி, வங்கிகளில் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களைப் பெற்ற வாடிக்கையாளர்கள், தங்கள் கிரெடிட் ஸ்கோர் (Credit Score) மேம்பட்டால், வட்டி விகிதத்தைக் குறைக்க வங்கி நிர்வாகத்தை அணுகலாம். புதிய விதிமுறையின் முக்கிய அம்சம்பொதுவாக, வங்கிகள் கடன் வழங்கும்போது, வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டே வட்டி விகிதத்தையும், மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகையையும் நிர்ணயம் செய்கின்றன. இதுவரை, கடன் வாங்கிய பிறகு கிரெடிட் ஸ்கோர் அதிகரித்தாலும்,…

Read More

மெட்டா உடன் இணைந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனம், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் (Meta Platforms) உடன் இணைந்து புதிய செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனத்தை அறிவித்துள்ளது. கூட்டு முயற்சியின் முக்கிய அம்சங்கள் பங்குதாரர்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நடத்தும் இந்த AI நிறுவனத்தில், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் அங்கம் வகிக்கும் ஃபேஸ்புக் ஓவர்சீஸ் (Facebook Overseas) 30% பங்குகளை வைத்திருக்கும். ரிலையன்ஸ் பங்கு: ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ரிலையன்ஸ் எண்டர்பிரைஸ் இன்டலிஜென்ஸ் லிமிடெட்டில் (Reliance Enterprise Intelligence…

Read More

இந்தியாவின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.44,000 கோடி முதலீடு! டிபி வேர்ல்டு (DP World) நிறுவனம் மாபெரும் அறிவிப்பு!

சர்வதேச சரக்குப் போக்குவரத்து நிறுவனமான டிபி வேர்ல்டு (DP World), இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறையில் 5 பில்லியன் டாலர்களை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹44,000 கோடியை, கூடுதலாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. முதலீட்டின் நோக்கம் இதுகுறித்து டிபி வேர்ல்டு குழுமத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுல்தான் அகமது பின் சுலாயம் தெரிவித்ததாவது: விநியோகச் சங்கிலி: ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் இரண்டையும் ஆதரிக்கும் வகையில், ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலி (Integrated Supply Chain)…

Read More

ரூ.3,250 கோடி முதலீடுடன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஃபோர்டு! டிரம்ப் எதிர்ப்பை மீறி இந்தியாவில் உயர் ரக எஞ்சின்கள் உற்பத்தி!

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனம் (Ford Motor Company), இந்தியாவில் தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதில் உறுதியாக உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஒரு ஆலையை மீண்டும் உயிர்ப்பிக்கவும், ஏற்றுமதிக்கான உயர் ரக எஞ்சின்களை உற்பத்தி செய்யவும் சுமார் ரூ.3,250 கோடி ($370 மில்லியன்) முதலீடு செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜிம் ஃபார்லியின் (Jim Farley) உற்பத்தித் தளமாக இந்தியா மீதான புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை…

Read More

8-வது ஊதியக் குழு: இந்திய கடற்படை கேப்டன் சம்பளம் எவ்வளவு உயரும்? அவசியம் படிங்க.!!

இந்தியப் பாதுகாப்பின் முக்கியமான தூணாகக் கருதப்படும் இந்திய கடற்படையில் கேப்டன் (Captain) பதவி மிகவும் மதிப்புமிக்க மற்றும் பொறுப்புள்ள ஒன்றாகும். இது இந்திய ராணுவத்தில் கர்னல் பதவிக்கும், விமானப்படையில் குரூப் கேப்டன் பதவிக்கும் இணையானது.தற்போது அவர்களுக்கான சம்பளம், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.கேப்டன்கள் பே பேண்ட் 4 .ன் கீழ் ஊதியம் பெறுகின்றனர்.இவர்களின் அடிப்படை சம்பளம்: தோராயமாக ₹87,000 (₹37,400 முதல் ₹67,000 வரையிலான சம்பளம் + ₹8,700 தர ஊதியம்) ஆகும்.வீட்டு வாடகைப்படி…

Read More

இந்தியா Vs சீனா: வேகம் கூட்டும் இந்தியப் பொருளாதாரம்! 2025-26-ல் 6.6% வளர்ச்சி – சர்வதேச நிதியம் கணிப்பு!

சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற வர்த்தகச் சூழலுக்கு மத்தியில், உலகப் பொருளாதார முன்னோட்டம் (World Economic Outlook) குறித்த அறிக்கையைச் சர்வதேச நிதியம் (International Monetary Fund – IMF) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் அசுர வேகத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி விவரங்கள்:இந்தியா (2025-26): இந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.6 சதவீதம் என்ற வீதத்தில் வளர்ச்சி அடையும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. சீனா (2025-26): சீனா இதே…

Read More

AI-யால் கிடைத்த ஜாக்பாட்! மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லாவுக்கு ₹850 கோடி சம்பளம்!

பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர் ஆகியோருக்குப் பிறகு, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) பொறுப்பு வகித்து வருபவர் சத்யா நாதெல்லா. இவரது தலைமையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. சம்பள உயர்வு விவரம்:2023-24 நிதி ஆண்டு: சத்யா நாதெல்லாவுக்கு முந்தைய 2023-24 நிதியாண்டில் ₹694 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. 2024-25 நிதி ஆண்டு: தற்போது, 2024-25 நிதியாண்டில் அவரது சம்பளம் கணிசமாகக் கூட்டப்பட்டு ₹850 கோடி…

Read More

இந்திய வான் பாதுகாப்புக்கு மேலும் வலு! ரஷ்யாவிடம் ₹10,000 கோடியில் கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள் வாங்கத் திட்டம்!

இந்திய விமானப்படையின் வான் தடுப்புத் திறனை (Air Defence Capability) மேலும் மேம்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து சுமார் ₹10,000 கோடி மதிப்பிலான எஸ்-400 (S-400) வான் தடுப்பு ஏவுகணைத் தொகுப்புகளை வாங்குவது குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எஸ்-400-இன் வலிமை:பெயர்: தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் இந்த ஏவுகணைத் தொகுப்பு, இந்தியாவில் ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. செயல்திறன்: இந்த ஏவுகணை 300 கி.மீ. தொலைவில் வரும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது….

Read More

EPFO ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ₹7 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு அறிமுகம்!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தியாக, ரூ. 7 லட்சம் வரையிலான இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை (Free Life Insurance) வழங்குகிறது. ஊழியர்கள் எந்தப் பிரீமியமும் செலுத்தாமல் இந்தக் காப்பீட்டைப் பெறலாம். திட்டத்தின் பெயர்: ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (Employee Deposit Linked Insurance Scheme – EDLI), 1976. காப்பீட்டுத் தொகை: பணியாளர்கள் இப்போது ரூ. 2.5 லட்சம் முதல் ரூ….

Read More

AI உதவியுடன் UPSC தேர்வில் வெற்றி! ஐஏஎஸ் அதிகாரியான இளைஞர்!

உத்தரபிரதேச மாநிலம் புலாந்த்சர் மாவட்டத்தில் உள்ள உத்தாரவலி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் விபோர் பரத்வாஜ். இவர் நவீன ஜென்ரேட்டிவ் AI (Generative AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது ஐஏஎஸ் அதிகாரியாகியுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்த விபோர், எந்தவொரு விலையுயர்ந்த பயிற்சி மையத்திற்கும் (Coaching Centre) செல்லாமல், AI கருவிகளின் உதவியுடன் தானே படித்து வெற்றி பெற்றுள்ளார். AI-ஐ பயன்படுத்திப் படித்த…

Read More

இந்தியாவின் தங்கப் புதையல்: அதிக தங்க இருப்பு உள்ள மாநிலம் எது?

இந்தியாவில் தங்கம் அதிகமாக உள்ள முதல் 7 மாநிலங்கள் குறித்த ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த தங்க இருப்புகளில் பெரும்பகுதி பின்வரும் மாநிலங்களில் காணப்படுகின்றன.இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க இருப்புகளைக் கொண்ட மாநிலமாக பீகார் உள்ளது. இந்தியாவில் அதிக தங்க இருப்பு கொண்ட முதல் 7 மாநிலங்கள் (மில்லியன் டன்களில்) 1.  பீகார் (Bihar)   தங்க இருப்பு: சுமார் 222.8 மில்லியன் டன்கள் (மொத்த தங்கத் தாது வளங்களில் சுமார் 44%). முக்கியப் பகுதி: ஜமுய் மாவட்டம். சிறப்பம்சம்: பீகார் எதிர்காலத்தில் ஒரு…

Read More