Namathu Vanikam Media

Cash On Delivery -க்கு கூடுதல் கட்டணம்?: அரசு விசாரணை தொடக்கம்

மின்னணு வணிக தளங்களில் Cash on Delivery (COD) முறையைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. பல இ-காமர்ஸ் தளங்களில் “offer handling fee”, “payment handling fee”, “protect promise fee” போன்ற குழப்பமான பெயர்களில் கட்டணம் வசூலிப்பது “dark pattern” எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையை எதிர்கொள்ள, மத்திய அரசு நுகர்வோர் விவகாரத்துறை வழியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. நுகர்வோர் சேவை அமைச்சர் பிரகலாத் ஜோஸி, “CODக்கு கூடுதல் கட்டண…

Read More

பிஎல்எஸ் இன்டர்நேஷனல்: விசா அவுட்சோர்சிங் சந்தையில் வல்லுநராக உயர்ந்த நிறுவனம்

பிஎல்எஸ் இன்டர்நேஷனல் சர்வீசஸ் என்பது விசா செயலாக்கம், தூதரக சேவைகள் மற்றும் குடிமக்கள் சேவைகள் வழங்கும் நிறுவனம். உலகம் முழுவதும் 46 நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், இந்தியாவில் இருந்து உலக அளவிலான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தற்போது பிஎல்எஸ் பங்குகள் சுமார் ₹330 விலையில் வர்த்தகமாகி வருகின்றன. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹13,600 கோடி வரை உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பிஎல்எஸ் பங்குகள் 1,500 % அளவுக்கு வளர்ந்துள்ளன — அதாவது, ஒரு லட்சம்…

Read More

மார்கன் ஸ்டான்லி மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ்: இந்திய வங்கித் துறையில் புதிய முதலீடு

உலகளாவிய முதலீட்டு நிறுவனங்களான மார்கன் ஸ்டான்லி மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ், இந்திய வங்கி மற்றும் வீட்டு கடன் துறைகளில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் புதிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. இந்திய வங்கித் துறை தற்போது வலுவான வளர்ச்சி பாதையில் பயணிக்கும் நிலையில், இந்த இரு பெரிய முதலீட்டாளர்களும் தங்கள் பங்குகளை விரிவுபடுத்தியுள்ளனர். குறிப்பாக, RBL வங்கி மற்றும் Samman Capital (முந்தைய Indiabulls Housing Finance) ஆகிய நிறுவனங்களில் பங்குகளை வாங்கியுள்ளனர். மார்கன் ஸ்டான்லி நிறுவனம் RBL…

Read More

பீகாரில் பெண்களுக்கு ₹10,000 நிதியுதவி – முதலமைச்சர் மகிலா ரோஜகர் யோஜனா தொடக்கம்!

பீகார் மாநில அரசு “முதலமைச்சர் மகிலா ரோஜகர் யோஜனா” என்ற புதிய திட்டத்திற்கான நடைமுறையை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்தில் ஒரு தகுதியான பெண்ணுக்கும் ₹10,000 நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இந்த உதவி நேரடியாக அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படும். திட்டம் செப்டம்பர் 26-ல் தொடங்கப்படுகிறது; முதல் தவணையும் அதேநாளில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பீகாரில் உள்ள 7.5 மில்லியன் பெண்கள் இந்த திட்டத்தின் வாய்ப்பாளர்களாக குறிப்பிடப்படுகிறார்கள், இதற்காக ரூ. 7,500 கோடி செலவிட…

Read More

Distil: சிறப்பு இரசாயனத் தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றம்!

Distil, இந்தியாவின் முன்னணி சிறப்பு இரசாயனத் தொழில்நுட்ப நிறுவனமாக, தனது Series A நிதி திரட்டலில் $7.7 மில்லியன் (சுமார் ₹64 கோடி) பெறுவதை அறிவித்துள்ளது. இந்த நிதி திரட்டல், சிங்கப்பூரைச் சேர்ந்த Jungle Ventures மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த CE-Ventures ஆகிய நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டது. மேலும், Rubamin, PI Industries நிறுவனத்தின் துணைத் தலைவர் Mayank Singhal, மற்றும் India Quotient போன்ற முக்கிய முதலீட்டாளர்கள் இந்த சுற்றில் பங்கேற்றுள்ளனர். இந்த புதிய…

Read More

டிராக்டர்கள் மற்றும் வேளாண் உபகரண விலைகள் 7–13% குறையும்!

மத்திய அரசு, வேளாண் உபகரணங்கள் மற்றும் டிராக்டர்களுக்கு GST விகித மாற்றத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் பொருட்டு, 12% – 18% இடையில் இருந்த விகிதம் 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அறியப்படுகிறது. இந்த மாற்றம் மூலம் டிராக்டர், பம்புகள், தண்ணீர் சிச்டம் உபகரணங்கள், உதிரி பகுதிகள் போன்ற பல உபகரணங்கள் 7–13 சதவீதம் வரை விலை குறையும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு டிராக்டர் வகைக்கும் விலையில் மாறுபாடுகள் உள்ளன; சில வகைகளில் ₹11,875 முதல் ₹63,000 வரை…

Read More

“Skoda Octavia RS” இந்தியாவில் 2025 நவம்பரில் அறிமுகம்!

Skoda நிறுவனத்தின் பிரமாண்டமாக எதிர்பார்க்கப்படும் Octavia RS மாடலில் இந்தியாவில் 2025 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பல ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறைந்த அளவு எண்ணிக்கையிலான யூனிட்களை மட்டுமே விற்பனைக்கு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. Skoda Octavia RS–இன் சக்திவாய்ந்த இயந்திர சிறப்புகள் பின்வருமாறு இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.0 லிட்டர் turbo-petrol இயந்திரம்; ~265 ஹார்ஸ் மற்றும் ~370 எண் டார்க். 0 → 100 கிமீ வேகமடையக்கூடிய நேரம் சுமார் 6.4 விநாடிகள் உச்ச வேகம்…

Read More

வருகிறது பயிற்சியாளர்களுக்ககான பிரத்யேக சமூக அமைப்பு – IBTC!

வரும் நவம்பர் 2025 துவக்க விழா பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களின் தரநிலையை உலகளவில் உயர்த்தும் நோக்கில் உருவாகியுள்ள IBTC (International Board of Trainers & Coaches), 21 தேர்ந்த பயிற்சியாளர்களுடன் அறக்கட்டளையாக தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வமைப்பு, உலகளாவிய பயிற்சி நிறுவன அங்கீகாரம், பாதுகாப்புக்கான TradeMark அங்கீகாரம், மேலும் தரத்திற்கான ISO 9001 அங்கீகாரம் ஆகிய உயர்ந்த தரச் சான்றுகளுடன் நவம்பர் 2025 -இல் துவங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் நவம்பர் 2025-ல் நடைபெறவுள்ள…

Read More

அரசுக் கடன்: பாதுகாப்பான முதலீட்டுடன் அதிக நன்மை!

                                                                                  முதலீடு செய்யும் போது நீங்கள் அதிக லாபம் எதிர்பார்ப்பதோடு உங்களுடைய முதலீட்டையும் பாதுகாப்பாக வைக்க விரும்புவீர்கள். இத்தகைய விருப்பம் உள்ளவர்களுக்கு, அரசு கடன் பத்திரங்கள் / Government Bonds / Government Securities போன்ற முதலீட்டு வழிகள் மிகச் சிறந்தவை. இவற்றில் உங்கள் பணத்தை அரசு மேலாண்மை செய்வதால் மேலாண்மை அபாயம் குறைவாக இருக்கும்; அதே சமயம் நீங்கள் நம்பிக்கையான வட்டி வருமானம் பெறலாம். அரசு கடன் பத்திரங்கள்: அரசு (மத்திய அரசு அல்லது மாநில அரசு)…

Read More

ரிலையன்ஸ் கன்ச்யூமர் புராடக்ட்ஸ்: இந்தியாவில் 40,000 கோடி முதலீட்டுடன் ஆசியாவின் மிகப்பெரிய உணவுப் பூங்காக்கள்

ரிலையன்ஸ் கன்ச்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனங்களில் ஒன்றாகும், உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக மாறுவதற்காக, மத்திய உணவுப் பொருள் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துடன் ₹40,000 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், RCPL இந்தியா முழுவதும் இணைக்கப்பட்ட உணவுப் பொருள் உற்பத்தி மையங்களை அமைப்பதற்காக திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் உள்ள கத்தோல் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் குர்ணூல் ஆகிய இடங்களில் ₹1,500…

Read More

உலக சந்தையில் தங்கத்தின் வெற்றிக்கதை: $6,600 வரை உயரும் வாய்ப்பு!

உலக பொருளாதாரத்தில் எப்போதுமே “சேஃப் ஹெவன்” என்று பார்க்கப்படும் முதலீடு தங்கம். பங்குச் சந்தை சுழலில் சிக்கும்போது, நாணய மதிப்பு சரியும் போது, அரசியல் நெருக்கடிகள் கிளம்பும் போதும் முதலீட்டாளர்கள் தேடும் முதலிடம் தங்கமே. இதுதான் தங்கத்தின் பிரபல்யத்தை என்றும் உயர்த்தி வைத்திருக்கிறது. இப்போது, Jefferies நிறுவனத்தின் பிரபல பொருளாதார நிபுணர் Chris Wood கூறிய ஒரு கணிப்பு உலக சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுவதாவது — “தற்போது ஔன்ஸ் ஒன்றுக்கு சுமார் $3,700…

Read More

அமெரிக்க H-1B விசாக்களுக்கு வருடத்திற்கு $100,000 கட்டணம்: இந்திய IT துறைக்கு பெரிய தாக்கம்!

அமெரிக்காவில், உயர்திறன் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் H-1B விசா திட்டத்தில், டொனால்டு டிரம்ப் அரசு ஒரு புதிய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த புதிய கட்டணத் திட்டம் ஆண்டுக்கு $100,000 என்பது, இந்திய தொழில்நுட்ப (IT) நிறுவனங்களுக்கும் அவற்றின் பணியாளர்களுக்கும் மிக முக்கியமான எதிர்பாராத சவாலாகும். விசா செலவுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பதால், அமெரிக்காவுக்கு இந்திய நிறுவனங்கள் பணியாளர்களை அனுப்புவது மிகவும் செலவானதாக மாறியுள்ளது. இதனால் அனுபவமிக்க பணியாளர்களுக்கு மட்டும் நிறுவனங்கள் விசா வழங்க ஏற்பாடுகள் செய்யலாம்….

Read More

இந்தியாவிற்கு தனிப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பம் அவசியம்!

இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் உலக முன்னணியில் இருந்தாலும், பெரும்பாலான சேவைகள் அமெரிக்க மென்பொருள் மற்றும் கிளவுட் தளங்களின் மீது சார்ந்திருக்கின்றன. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் (GTRI) எச்சரிக்கையில் கூறியுள்ளபடி, இந்த சார்பு பொருளாதாரம், பாதுகாப்பு, தனியுரிமை என பல துறைகளில் ஆபத்தை ஏற்படுத்தும். அரசு, தனியார் துறைகள், வங்கி, பாதுகாப்பு அமைப்புகள் என பெரும்பாலான துறைகள் அமெரிக்க நிறுவனங்களின் கிளவுட் மற்றும் மென்பொருள் சேவைகளைப் பயன்படுத்துகின்றன. சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டாலோ அல்லது அரசியல் காரணங்களால் கட்டுப்பாடுகள்…

Read More

Suzlon நிறுவனம் : Tata Power உடன் புதிய ஒப்பந்தம்!

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் வளர்ச்சி வேகம் பிடித்து வரும் நிலையில், Suzlon குழுமம் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது. Tata Power Renewable Energy-இல் இருந்து 838 மெகாவாட் சூரிய சக்தி திட்டம் அது . இது Suzlon-க்கு எதிகால வளர்ச்சிக்கு வலுவூட்டும் சாதனை ஒப்பந்தம் என்றும், இந்தியாவின் “எரிசக்தி மாற்றம்” (energy transition) முயற்ச்சியில் சிறப்பான தருணம் என்று பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தம் மூலம், சூரிய சக்தித் துறையில் தொழிற்சாலை வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்; மாடியூல்கள்,…

Read More

அதானிக்கு வெற்றி –  ஹிண்டன்பர்க்  குற்றச்சாட்டுகளை நிராகரித்தது செபி!

இந்திய தொழிலதிபர்களின் ஒருவரான கௌதம் அதானி மற்றும் அவரது அதானி குழும நிறுவங்கள் மீது, கடந்த சில ஆண்டுகளாக ஹிண்டன்பர்க் ரிசர்ச்ச் நிறுவனம் பங்கு மோசடி, செயற்கையான பங்குகள் விலையேற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் வைத்துவந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக முதலீட்டாளர் நம்பிக்கை பெரிதும் பாதித்தது. தற்போது, இந்திய பங்குச் சந்தையை கண்காணிக்கும் அமைப்பான SEBI (Securities and Exchange Board of India)இந்த குற்றச்சட்டங்களைப் பற்றி விசாரணை நடத்தி, அதானி குழுமத்திற்கு எதிரான பிரச்சனைகள் அனைத்தும் “தவறானவை”…

Read More

கூகுள் : AI ஊழியர்கள் பணிநீக்கம்!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த (contract) ஊழியர்கள் சமீபத்தில் பணி இழந்துள்ளனர். இந்த பணிநீக்கம், அவுட்சோர்சிங் நிறுவனம் GlobalLogic மூலம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் பணிகளும், எதிர்காலமும் AI கருவிகள் மூலம் மாற்றப்படுவதாக அச்சத்தில் உள்ளனர். இது உலகளவில் தொழில்நுட்ப, சமூக வாழ்வுரிமை மற்றும் பணியாளர் உரிமை தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த ஊழியர்கள் பலர் முதுநிலை பதவியிலும், முக்கியப் பணிகளிலும்  இருந்தவர்கள். எதிர்காலத்தில் AI கருவிகளால் இதுபோன்று…

Read More

ஓசூரை அறிவுசார் மையமாக்கும் திட்டம்: TIDCO செய்யும் முயற்சி!

தமிழ்நாடு அரசு ஓசூரை தொழில், தகவல் தொழில்நுட்பம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் சாப்ட்வேர் ஸ்டார்ட்-அப் துறைகளுக்கு ஒரு பிரதான “அறிவுசார் வழித்தட (Knowledge Corridor)” மையமாக மாற்ற விரும்புகிறது. இதற்காக தமிழக தொழில் மேம்பாட்டு கழகமான TIDCO ஆலோசகரை நியமித்து, விரிவான  திட்ட அறிக்கை (development blueprint) தயாரிக்க செயல்பட்டுள்ளது.  இந்த திட்டம் வெறும் நகர்புற மாற்றம் அல்ல; ஓசூரின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக அமைய இருக்கிறது. என்ன பயன்கள் கிடைக்கும்?…

Read More

Sampre Nutrition: 3 மாதங்களில் 300 சதவீதம் லாபம் கொடுத்த சிறிய பங்கு மல்டிபேக்கர்!

இந்திய பங்குச் சந்தையில் சின்ன பங்குகள் பல இருக்கின்றன. ஆனால் சில பங்குகள் மட்டும் முதலீட்டாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் மிகப்பெரிய வருமானம் தருகின்றன. அப்படிப் பேசப்படும் பங்கு தற்போது சம்ப்ரே நியூட்ரிஷன்ஸ் லிமிடெட். தொடர்ந்து அப்பர் சர்க்யூட் அடித்து, மிகக் குறுகிய காலத்தில் 300 சதவீதத்துக்கும் மேல் லாபம் கொடுத்து முதலீட்டாளர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. பங்கு விலை உயர்வு – சில மாதங்களுக்கு முன் 23 ரூபாய் இருந்த இந்த பங்கு, தற்போது சுமார் 80 ரூபாயை…

Read More

வருடத்திற்கு ரூ.2 லட்சம் வரி சேமிப்பு – ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கான முழு வழிகாட்டு குறிப்புகள்!

ரியல் எஸ்டேட் முதலீடு வீடு வாங்குவதற்கோ அல்லது வாடகை வருவாய் பெறுவதற்கோ மட்டுமல்ல; சரியான திட்டமிடலுடன் வருடத்திற்கு ரூ.2 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளையும் அளிக்கக்கூடியது. ஆனால், பல முதலீட்டாளர்கள் சட்டப்படி கிடைக்கக்கூடிய இந்நன்மைகளை முழுமையாகப் பயன்படுத்தாமல் விடுவதால் பெரிய சேமிப்புகளை இழக்கிறார்கள். கட்டுமானத்திற்கு முன் வட்டி சொத்து கட்டுமானம் முடிந்து, உரிமை பெற்ற பின், முன் கட்டுமான காலத்தில் செலுத்திய வட்டியை ஐந்து ஆண்டுகளுக்கு சமமாகப் பிரித்து தள்ளுபடி கோரலாம். இது பிரிவு 24(b) கீழ்…

Read More

விஞ்ஞானி – தொழில் முனைவோர் : டாக்டர் பாத்திமா பெனசீர் & அசூகா லேப்ஸ்!

விஞ்ஞானியாய் கண்டுபிடித்த கோட்பாடு, பொதுமக்களின் வாழ்க்கையுடன் இணையும் போது அது வெறும் ஆராய்ச்சியல்ல, ஒரு புதிய தொழில் பயணத்தின் துவக்கம் ஆகிறது. அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தவர் தான் டாக்டர் பாத்திமா பெனசீர். மரபியல் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளில் ஆழ்ந்த அறிவைப் பெற்ற அவர், அந்த அறிவை வணிக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பயன்படும் வகையில் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து அசூகா லேப்ஸ் (Azooka Labs) என்ற உயிர் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கினார். அசூகா லேப்ஸ் –…

Read More

இந்திய ஐடி துறைக்கு புதிய சவால் – HIRE ACT!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அறிமுகமான HIRE Act (Hiring Incentives to Restore Employment) என்ற சட்ட மசோதா, வெளிநாட்டில் கணினி, மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் அவுட்சோர்சிங் செய்து வரும் நிறுவனங்களுக்கு பெரிய சவாலை ஏற்படுத்தக்கூடும் என இந்தியாவின் முன்னணி ஐடி துறை எச்சரிக்கை செய்துள்ளது. 25% அவுட்சோர்சிங் வரி: அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஐடி நிறுவனங்களில் பணியை ஒப்படைக்கும் போது, அந்தச் செலவில் 25% வரை கூடுதல் வரி விதிக்கப்படும். வரி சலுகைகளில் கட்டுப்பாடு:…

Read More

அமெரிக்க வரி – இந்திய MSME-கள், திருப்பூர் ஏற்றுமதி பாதிப்பு!

உலகளாவிய போட்டித் தன்மை அதிகரித்துள்ள நிலையில், இந்திய உற்பத்தியாளர்கள் அமெரிக்க கூடுதல் வரிகள் காரணமாக பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். உற்பத்தி செலவுகள் உயர்வதால், லாப விகிதம் குறைந்து, இந்திய தயாரிப்புகளின் மொத்த போட்டித் தன்மை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. MSME-களின் நிலை: இந்த சூழலில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளன. நிதி வளம் குறைவு, கடுமையான கட்டுப்பாடுகள் போன்ற பிரச்சனைகள் காரணமாக, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதியின் முதன்மை ஆதாரமாக…

Read More

அவான்ஸ் டெக்னாலஜீஸ் பங்கு – 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி!

இந்திய பங்குச்சந்தையில் அவான்ஸ் டெக்னாலஜீஸ் பங்கு சமீபத்தில் 2% உயர்ந்து ₹2.17 ஆகியுள்ளது. இது கடந்த 52 வாரங்களுக்கான மிக உயர்ந்த விலை. இதே நேரத்தில், கடந்த ஆண்டு குறைந்தபட்சம் ₹0.52 இருந்ததை நினைத்துப் பார்க்கும்போது, மிகப் பெரிய வளர்ச்சி என்பதை உணரலாம். 5 ஆண்டுகளில் அசாதாரண முன்னேற்றம்: இந்த பங்கு 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியமான லாபத்தை கொடுத்துள்ளது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சில காசுகள் மட்டுமே இருந்த பங்கு, இன்று ₹2.17 ஆகியதால்…

Read More

ஸ்விகி, ஸோமேட்டோ – இனி கூடுதல் செலவு!

ஜிஎஸ்டி கவுன்சில் சமீபத்தில் எடுத்த தீர்மானத்தின் படி, உணவு டெலிவரி சேவைகளின் டெலிவரி கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது. இதனால், உங்கள் ஒவ்வொரு ஆர்டருக்கும் சுமார் ₹2 முதல் ₹2.6 வரை கூடுதல் செலவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.அதிகமாக ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.                                                                                   நிறுவனங்களின் சுமை: இந்த புதிய வரி விதிப்பின் காரணமாக ஸ்விகி மற்றும் ஸோமேட்டோ போன்ற தளங்களுக்கு வருடாந்திர அளவில் ₹180–200 கோடி வரி சுமை ஏற்படும். இந்தச்…

Read More

HAL – ISRO உடன் SSLV தொழில்நுட்ப ஒப்பந்தம்!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL), ISRO, IN மற்றும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) ஆகியவற்றுடன் இணைந்து சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (SSLV) தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.வடிவமைப்பு, உற்பத்தி, தரக் கட்டுப்பாடு, இணைப்பு, ஏவுதல் மற்றும் பிந்தைய சோதனைகள் வரை SSLV முழுமையான உரிமையை HAL பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் கற்றல் கட்டம், அதன் பின் பத்து ஆண்டுகள் முழுமையான உற்பத்தி கட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.அறிவிப்புக்குப் பிறகு HAL பங்குகள் ஒரு புள்ளி முப்பத்து…

Read More

ஜிஎஸ்டி – ரேஞ்ச் ரோவர், டிபெண்டர், டிஸ்கவரி வாகனங்கள் ₹4.5L – ₹30.4ள் குறைந்தன!

மத்திய அரசு ஜிஎஸ்டி கட்டமைப்பில் மாற்றம் செய்து, ஆடம்பர வாகனங்களுக்கு 40 சதவீதம் வரி விகிதம் மட்டுமே நிலைநிறுத்தியது. இதன் பலனாக ஜாக்வார் லேண்ட் ரோவர் இந்தியா தனது ரேஞ்ச் ரோவர், டிபெண்டர், டிஸ்கவரி போன்ற வாகனங்களின் விலையை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.30.4 லட்சம் வரை குறைத்துள்ளது. ஜாக்வார் லேண்ட் ரோவர் இந்தியாவின் மேலாண்மை இயக்குனர் ரஞ்ஜன் அம்பா, “இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் வாடிக்கையாளர்களுக்கும் தொழில் துறைக்கும் நல்ல வளர்ச்சி வாய்ப்பு” என்று தெரிவித்துள்ளார். அரசு…

Read More

உலகளாவிய தேவை & அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு எதிரொலி – வெள்ளி விலை உயர்வு!

இந்திய MCX-இல் வெள்ளி விலை சாதனை உயரத்தை எட்டியது. கிலோ ஒன்றுக்கு ₹1,26,730 வரை சென்றது. இதுவரை இல்லாத உச்சம் இதுவாகும். அமெரிக்க மத்திய வங்கி (Fed) வட்டி விகிதக் குறைப்பது குறித்த எதிர்பார்ப்பு விலை உயர்விற்கு முக்கிய காரணமாக பார்க்கப் படுகிறது. சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் (EV), எலக்ட்ரானிக்ஸ் போன்ற தொழில் துறைகள் வெள்ளி தேவையை வேகமாக அதிகரிக்கின்றன. குறைந்த டாலர் மதிப்பு மற்றும் வெள்ளி பற்றாக்குறை சந்தையில் விலையை மேலும் தூண்டுகின்றன. வெள்ளியின்…

Read More

ஒராக்கிள் நிறுவனத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம்!

ஒராக்கிள் நிறுவனம் உலகளவில் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிலிப்பைன்ஸ், கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் பணிநீக்க அலை. இந்தியாவின் பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை, புனே போன்ற நகரங்களில் பணிநீக்கம் தீவிரமாக நடந்துள்ளது.    பணிநீக்கத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள்: 2022ல் $28.3 பில்லியன் செலவில் செர்னர் (Cerner) நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, ஒராக்கிள் அதன் வணிக அமைப்பில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது. செலவுக் குறைப்பு…

Read More

புதுச்சேரி டு உலகம் – Open AI நிறுவனம் செய்த வரலாற்று ஒப்பந்தம்!

செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, புதுச்சேரியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் விஜய்ராஜியின் ஸ்டார்ட்அப் ஸ்டாட்சிக் நிறுவனத்தை சுமார் ரூ. 9,000 கோடி மதிப்பில் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், விஜய்ராஜி ஓபன்ஏஐயின் பயன்பாடுகளுக்கான தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். விஜய்ராஜியின் பயணம்: புதுச்சேரியில் பிறந்த விஜய்ராஜி, பொறியியல் கல்வியைப் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பெற்றார். மைக்ரோசாஃப்ட் மற்றும் மெட்டா போன்ற முன்னணி நிறுவனங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். 2020 ஆம் ஆண்டு ஸ்டாட்சிக்…

Read More

அரசுத் ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு – தீபாவளிக்கு முன் பெரிய பரிசு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்காக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. வரும் தீபாவளி பண்டிகைக்கு முன், அரசாங்கம் 3% விலைவாசி தாங்கும் கொடுப்பனவு (DA) உயர்வை அறிவிக்க உள்ளது. இதனால் தற்போது வழங்கப்படும் 55% டிஏ, 58% ஆக உயர்கிறது. இந்த உயர்வால் மொத்தம் சுமார் 1.1 கோடி பேர் நேரடியாக பலன் பெறுவார்கள். டிஏ என்பது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் தொகையாகும். விலைவாசி உயர்வால் வாழ்க்கையில் ஏற்படும் கூடுதல் சுமையை குறைக்கும் வகையில் அரசு…

Read More