நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news நிலத்தடி நீர் மாசுபாடு விவகாரத்தில் சிக்கிய டாடா ஐஃபோன்.. ஓசூர் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்.. என்னதான் நடக்குது? 16 hours ago
news 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.... 2 days ago
news 13 ஆண்டுகளுக்கு பிறகு ... ரிசர்வ் வங்கி கொடுத்த ஜாக்பாட் ... செப்டம்பர் 30-க்குள் முதலீடு செய்தால் 20% வரை வட்டி | FCNR B Account 3 days ago
news Credit Card | நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஜூன் 15 முதல் புது ரூல்ஸ்! 3 days ago
news வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்? 5 days ago
news 90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை! 6 days ago
news மீண்டும் உயரும் கச்சா எண்ணெய் விலை... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.... 08 Jun 2026
news எங்களுக்கும் ரூ.52,000 அடிப்படைச் சம்பளம் வேணும்.. 8வது ஊதியக்குழுவின் IRTSA-இடம் வேண்டுகோள் வைத்த ரயில்வே ஊழியர்கள்! 05 Jun 2026
news எச்சரிக்கை... இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரிக்கு வழிவகுக்கலாம்... கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 05 Jun 2026
news மீண்டும் தாமதமாகும் 8வது ஊதியக்குழு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. இனி பென்சன், சம்பளம் எப்போ கிடைக்கும்? 03 Jun 2026
news நிலத்தடி நீர் மாசுபாடு விவகாரத்தில் சிக்கிய டாடா ஐஃபோன்.. ஓசூர் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்.. என்னதான் நடக்குது? 16 hours ago
news 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.... 2 days ago
news 13 ஆண்டுகளுக்கு பிறகு ... ரிசர்வ் வங்கி கொடுத்த ஜாக்பாட் ... செப்டம்பர் 30-க்குள் முதலீடு செய்தால் 20% வரை வட்டி | FCNR B Account 3 days ago
news Credit Card | நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஜூன் 15 முதல் புது ரூல்ஸ்! 3 days ago
news வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்? 5 days ago
news 90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை! 6 days ago
news மீண்டும் உயரும் கச்சா எண்ணெய் விலை... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.... 08 Jun 2026
news எங்களுக்கும் ரூ.52,000 அடிப்படைச் சம்பளம் வேணும்.. 8வது ஊதியக்குழுவின் IRTSA-இடம் வேண்டுகோள் வைத்த ரயில்வே ஊழியர்கள்! 05 Jun 2026
news எச்சரிக்கை... இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரிக்கு வழிவகுக்கலாம்... கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 05 Jun 2026
news மீண்டும் தாமதமாகும் 8வது ஊதியக்குழு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. இனி பென்சன், சம்பளம் எப்போ கிடைக்கும்? 03 Jun 2026
தொழில் கட்டுரைகள்

கோவையில் தனித்திறன் பயிற்றுனர்கள் சந்திப்பு :2.0!

Aug 12, 2025 12 Aug 2025 0 Views
நமது வணிகம் ஊடகம் மற்றும் கூட்டமைப்பு (COTE) – NVMA ஏற்பாடு செய்திருந்த தனித்திறன் பயிற்றுனர்களுக்கான ஒரு நாள் சந்திப்பு, 10.08.2025 – ஞாயிறு அன்று கோவையில் காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட தனித் திறன் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு தற்கால சமுதாயம், தொழில்நுட்பம், பயிற்சியாளர்களுக்கு தேவையான அடிப்படை திறன்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் முறை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முக்கிய சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட, பன்னாட்டு பேச்சாளர் மற்றும் பயிற்சியாளர் முனைவர். ஆர்த்தி அவர்களும், சமூக வலைதளத்தில் பிரபலமாக இயங்கி வரும் திரு. ஹுசைன் அஹமத் அவர்களும் சிறப்புரையாற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மதிய சிறப்பு உணவுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், கலந்து கொண்ட அனைத்து பயிற்றுனர்களும் தங்களுக்குள்ளாக தொடர்புகளையும், நாளைய தலைமுறையின் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான பயிற்சி முறைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வின் சிறப்பாக பங்குபெற்று, கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய பயிற்றுனர்களுக்கு “சிறப்பு விருதுகள்” வழங்கி பாராட்டப்பட்டது.

முக்கிய 30 ற்கும் மேற்பட்ட தனித்திறன் பயிற்றுனர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், அமைப்பின் நிறுவனர் திரு. எம்.எம்.பிரபு அவர்களால் முன்மொழியப்பட்ட ஐந்து முக்கிய தீர்மானங்கள், அனைத்து பங்கேற்பாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் அவர் கூறுகையில் “மாறிவரும் கால சூழ்நிலைகளுக்கேற்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும், மாணவர்கள், தொழில் முனைவோர்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து மனித மனங்களின் மாற்றங்களை புரிந்து கொண்டும், சமூகத்திற்கு ஏற்ற பயிற்சிகளை அடையாளம்கண்டு நேர்மறையான வழியில் வழங்குவது என்பது சவாலான ஒன்று. அது ஒவ்வொரு பயிற்சியாளர்களின் திறனைப் பொறுத்தது. இருப்பினும் அவற்றை இன்னும் எளிதாக புரிந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் பயிற்சியாளர்கள் இன்னும் தங்களை மெருகேற்றிக்கொள்ள இது போன்றதொரு பயிற்சியாளர்களுக்கென தனிப்பட்ட ஒன்றுகூடல் சந்திப்பு ஒவ்வொரு வருடமும், மிகவும் அவசியமான ஒன்று.

முதலாம் ஆண்டில் 10 பயிற்சியாளர்கள் வரை கலந்து கொண்ட நிகழ்வு திருப்பூரில் நடைபெற்றது. இந்த ஆண்டில் 30க்கும் மேற்பட்ட தொழில்முறை பயிற்சியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதுவே இந்நிகழ்வின் மாபெரும் வெற்றி. இந்த நிகழ்வு இனி வரும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் நடைபெற உள்ளது.

பயிற்றுனர்களுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்துவது மூலம், தெளிவான, உலகமயமாக்கப்பட்ட தனித்திறன் மற்றும் தொழில் பயிற்சிகளை சமூகத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதே இந்நிகழ்வில் நோக்கம்“.” என்று தெரிவித்தார்.

கலந்து கொண்ட அனைத்து தனித்திறன் பயிற்றுனர்களுக்கும், நிகழ்வின் முடிவில் “Trainers Endorsement” சான்றிதழ் வழங்கப்பட்டு, நமது வணிகம் கூட்டமைப்பின் தலைவர் திரு. சி. மணி அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு, நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது.