நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news நிலத்தடி நீர் மாசுபாடு விவகாரத்தில் சிக்கிய டாடா ஐஃபோன்.. ஓசூர் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்.. என்னதான் நடக்குது? 16 hours ago
news 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.... 2 days ago
news 13 ஆண்டுகளுக்கு பிறகு ... ரிசர்வ் வங்கி கொடுத்த ஜாக்பாட் ... செப்டம்பர் 30-க்குள் முதலீடு செய்தால் 20% வரை வட்டி | FCNR B Account 3 days ago
news Credit Card | நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஜூன் 15 முதல் புது ரூல்ஸ்! 3 days ago
news வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்? 5 days ago
news 90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை! 6 days ago
news மீண்டும் உயரும் கச்சா எண்ணெய் விலை... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.... 08 Jun 2026
news எங்களுக்கும் ரூ.52,000 அடிப்படைச் சம்பளம் வேணும்.. 8வது ஊதியக்குழுவின் IRTSA-இடம் வேண்டுகோள் வைத்த ரயில்வே ஊழியர்கள்! 05 Jun 2026
news எச்சரிக்கை... இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரிக்கு வழிவகுக்கலாம்... கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 05 Jun 2026
news மீண்டும் தாமதமாகும் 8வது ஊதியக்குழு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. இனி பென்சன், சம்பளம் எப்போ கிடைக்கும்? 03 Jun 2026
news நிலத்தடி நீர் மாசுபாடு விவகாரத்தில் சிக்கிய டாடா ஐஃபோன்.. ஓசூர் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்.. என்னதான் நடக்குது? 16 hours ago
news 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.... 2 days ago
news 13 ஆண்டுகளுக்கு பிறகு ... ரிசர்வ் வங்கி கொடுத்த ஜாக்பாட் ... செப்டம்பர் 30-க்குள் முதலீடு செய்தால் 20% வரை வட்டி | FCNR B Account 3 days ago
news Credit Card | நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஜூன் 15 முதல் புது ரூல்ஸ்! 3 days ago
news வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்? 5 days ago
news 90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை! 6 days ago
news மீண்டும் உயரும் கச்சா எண்ணெய் விலை... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.... 08 Jun 2026
news எங்களுக்கும் ரூ.52,000 அடிப்படைச் சம்பளம் வேணும்.. 8வது ஊதியக்குழுவின் IRTSA-இடம் வேண்டுகோள் வைத்த ரயில்வே ஊழியர்கள்! 05 Jun 2026
news எச்சரிக்கை... இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரிக்கு வழிவகுக்கலாம்... கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 05 Jun 2026
news மீண்டும் தாமதமாகும் 8வது ஊதியக்குழு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. இனி பென்சன், சம்பளம் எப்போ கிடைக்கும்? 03 Jun 2026
பொருளாதாரம்

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த ஆஸ்திரேலியா!!

Apr 01, 2026 01 Apr 2026 0 Views
ஈரான் போர் உலகம் முழுவதுமே கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை அதிகப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளிலும் கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசு மாற்று ஆதாரங்கள் மூலமாக கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துகிறது.

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை, எனர்ஜி லாக்டவுன் போன்ற சூழலோ இல்லை. ஆனால் அண்டை நாடுகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. பாகிஸ்தான் , இலங்கை ஆகிய நாடுகளில் எல்லாம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெருமளவு உயர்வு கண்டிருக்கிறது. பிலிப்பைன்ஸில் எனர்ஜி லாக்டவுன் அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த சூழலில் ஆஸ்திரேலியாவும் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆஸ்திரேலியாவில், விக்டோரியா மற்றும் தாஸ்மானியா ஆகிய மாநிலங்களில் பொதுமக்களுக்கு இலவச பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விக்டோரியா மாநிலத்தில் ஒரு மாத காலத்திற்கு மக்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். தாஸ்மானியாவில் ஜூலை 1ஆம் தேதி வரை மக்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இலவசம் என்பதால் மக்கள் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதையோ இதற்காக பெட்ரோல் டீசல் வாங்குவதையோ குறைத்துக் கொள்வார்கள், இதனால் எரிபொருள் சேமிக்கப்படும் இருக்கக்கூடிய குறைந்த அளவு இருப்பினை சாமர்த்தியமாக பயன்படுத்தும் வகையில் இந்த இரண்டு மாநிலங்களிலும் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இது தவிர ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. பெட்ரோல், டீசல் கிடைக்காமல் பல்வேறு மக்களும் தவித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் பணவீக்கம் அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேற்காசிய போர் முடிவுக்கு வந்து எண்ணெய் விநியோகம் சீரடைந்தால் மட்டுமே இந்த நிலைமை சரியாகும் என ஆஸ்திரேலிய மத்திய வங்கி கூறி இருக்கிறது. மேலும் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயரும் என்ற எச்சரிக்கையும் எடுத்திருக்கிறது. இதற்கிடையே ஆஸ்திரேலிய அரசு தனியார் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் இருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளை வாங்குவதற்கான விதிகளை தளர்த்தி இருக்கிறது.

ஈரான் நாட்டு போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வந்த நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.