நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news சரசரவென உயர்ந்த முட்டை விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி.. ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? 12 hours ago
news கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது இந்த நான்கு தவறுகளை மட்டும் தவிர்த்துவிடுங்கள் 1 days ago
news "10 ஏக்கர்... 5 தொழில்கள்..." - வருடம் ₹20 லட்சம் அள்ளும் பட்டதாரி விவசாயி 3 days ago
news கோடிகள் குவிக்கும் 'கோகோபீட்' தொழில்... கிராமத்து இளைஞர்களை லட்சாதிபதி ஆக்கும் பிசினஸ் 4 days ago
news உயிரைப் பணயம் வைக்கும் சங்கு குளித்தல் தொழில் - பின்னணியில் இருக்கும் தாலிக் கயிறு ரகசியம் 5 days ago
news இந்தியாவில் குறைந்து வரும் கிரெடிட் கார்டு மவுசு: இதெல்லாம் தான் காரணமாம்! 6 days ago
news புதிய அப்டேட்டை வெளியிட தயாராகும் மத்திய அரசு..... பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி டீசலுக்கும் E20.... 06 Jul 2026
news மின்சார வாகனம் வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்.... ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கும் அரசு... 04 Jul 2026
news EPF புதிய விதி: இனி உங்கள் சம்பளம் உங்கள் கையில்.. PF பிடித்தத்தில் அதிரடி மாற்றம்! 03 Jul 2026
news ITR Filing 2026 : வருமான வரி தாக்கல் செய்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு முக்கிய தவறுகள் 02 Jul 2026
news சரசரவென உயர்ந்த முட்டை விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி.. ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? 12 hours ago
news கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது இந்த நான்கு தவறுகளை மட்டும் தவிர்த்துவிடுங்கள் 1 days ago
news "10 ஏக்கர்... 5 தொழில்கள்..." - வருடம் ₹20 லட்சம் அள்ளும் பட்டதாரி விவசாயி 3 days ago
news கோடிகள் குவிக்கும் 'கோகோபீட்' தொழில்... கிராமத்து இளைஞர்களை லட்சாதிபதி ஆக்கும் பிசினஸ் 4 days ago
news உயிரைப் பணயம் வைக்கும் சங்கு குளித்தல் தொழில் - பின்னணியில் இருக்கும் தாலிக் கயிறு ரகசியம் 5 days ago
news இந்தியாவில் குறைந்து வரும் கிரெடிட் கார்டு மவுசு: இதெல்லாம் தான் காரணமாம்! 6 days ago
news புதிய அப்டேட்டை வெளியிட தயாராகும் மத்திய அரசு..... பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி டீசலுக்கும் E20.... 06 Jul 2026
news மின்சார வாகனம் வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்.... ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கும் அரசு... 04 Jul 2026
news EPF புதிய விதி: இனி உங்கள் சம்பளம் உங்கள் கையில்.. PF பிடித்தத்தில் அதிரடி மாற்றம்! 03 Jul 2026
news ITR Filing 2026 : வருமான வரி தாக்கல் செய்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு முக்கிய தவறுகள் 02 Jul 2026
நிதி மற்றும் பொருளாதாரம்

வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்?

Jun 10, 2026 10 Jun 2026 0 Views
மத்திய நிதி அமைச்சகம் வங்கிகளிடம் இருந்து 2023 முதல் வழங்கப்பட்ட தங்க உலோகக் கடன்கள் (GML) மற்றும் தங்கக் கடன்களின் விவரங்களை அவசரமாகக் கோரியுள்ளது. நாட்டின் தங்கம் இறக்குமதி செலவு 71.9 பில்லியன் டாலராக உயர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம். புதிய தங்க இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டு 'டோரே' தங்கத்தைப் பயன்படுத்தவும், விற்கப்படாத தங்கத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. பொருளாதாரப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ரூபாய் மதிப்பை நிலைநிறுத்தவும் அரசு விரைவில் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வாய்ப்புள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வங்கிகளிடம் இருந்து தங்கக் கடன் மற்றும் தங்க உலோகக் கடன்கள் (GML) குறித்த முழு விவரங்களையும் அவசரமாகக் கேட்டுள்ளது. இதனால், தங்கம் இறக்குமதி மற்றும் அது தொடர்பான விதிகளில் அரசு சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது
இந்த விஷயத்தின் பின்னணியில் உள்ள 5 முக்கிய விஷயங்கள் இதோ!

அரசு திடீரென விவரங்களைக் கேட்பது ஏன்?
சமீபத்தில் தங்கம் இறக்குமதி செய்வதற்கான வரி 15% ஆக உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளி இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது 2023-ஆம் ஆண்டு முதல் வங்கிகள் வழங்கிய தங்கக் கடன்கள், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மற்றும் சர்வதேச விநியோகஸ்தர்கள் பற்றிய முழு விவரங்களையும் திங்கட்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், தங்கக் கட்டுப்பாட்டில் அடுத்தகட்ட நடவடிக்கை வரலாம் என வங்கிகள் கருதுகின்றன.



தங்கம் இறக்குமதியைக் குறைக்க புதிய திட்டம்
இந்தியாவிற்கு வெளியே இருந்து புதிய தங்கத்தை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, உள்நாட்டிலேயே சுத்திகரிக்கப்படும் 'டோரே தங்கம்' (Dore Gold - கலப்புத் தங்கம்) மற்றும் நகைக் கடைகளைச் சுத்திகரித்து வரும் தங்கக் கட்டிகளை நகை வியாபாரிகளுக்குக் கடனாக வழங்கலாம் என்று வர்த்தக அமைப்புகள் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளன. இதன் மூலம் நாட்டின் தங்கம் இறக்குமதியைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

தங்கம் ஏற்றுமதிக்கு அனுமதி?
இந்தியாவில் தங்கத்திற்கான தேவை குறைந்து, தள்ளுபடி அதிகமாக இருக்கும் காலங்களில், விற்கப்படாத தங்கத்தைச் சீனா, துருக்கி போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது நடந்தால், இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும் மற்றும் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறையும்.

தங்கம் இறக்குமதி புதிய உச்சம் (2025-26)
கடந்த 2025-26 நிதியாண்டில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி மதிப்பு 24% அதிகரித்து, 71.9 பில்லியன் டாலர்வ்என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஆனால், ஆச்சரியப்படும் விதமாக இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு (721 டன்கள்) முந்தைய ஆண்டை விடக் குறைவுதான். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்ததே இந்த மதிப்பு அதிகரிப்பிற்குக் காரணம்.



சாமானியர்களைப் பாதிக்குமா?
தற்போதைக்குக் கடுமையான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும், தங்கம் விநியோகத்தைப் பாதுகாக்கவும், தேவையற்ற இறக்குமதியைக் கட்டுப்படுத்தவுமே இந்தத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. எனவே, சாமானியர்களின் தங்கக் கடன்களை விட, பெரிய நகை வியாபாரிகள் வாங்கும் 'தங்க உலோகக் கடன்கள்' (GML) மீதே அரசின் கவனம் அதிகமாக உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைத் தடுக்கவும், தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஒரு பெரிய திட்டத்தோடு களம் இறங்கியுள்ளது.