நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? Just now
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 18 hours ago
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 6 days ago
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? Just now
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 18 hours ago
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 6 days ago
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
நிதி மற்றும் பொருளாதாரம்

வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்?

Jun 10, 2026 10 Jun 2026 0 Views
மத்திய நிதி அமைச்சகம் வங்கிகளிடம் இருந்து 2023 முதல் வழங்கப்பட்ட தங்க உலோகக் கடன்கள் (GML) மற்றும் தங்கக் கடன்களின் விவரங்களை அவசரமாகக் கோரியுள்ளது. நாட்டின் தங்கம் இறக்குமதி செலவு 71.9 பில்லியன் டாலராக உயர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம். புதிய தங்க இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டு 'டோரே' தங்கத்தைப் பயன்படுத்தவும், விற்கப்படாத தங்கத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. பொருளாதாரப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ரூபாய் மதிப்பை நிலைநிறுத்தவும் அரசு விரைவில் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வாய்ப்புள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வங்கிகளிடம் இருந்து தங்கக் கடன் மற்றும் தங்க உலோகக் கடன்கள் (GML) குறித்த முழு விவரங்களையும் அவசரமாகக் கேட்டுள்ளது. இதனால், தங்கம் இறக்குமதி மற்றும் அது தொடர்பான விதிகளில் அரசு சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது
இந்த விஷயத்தின் பின்னணியில் உள்ள 5 முக்கிய விஷயங்கள் இதோ!

அரசு திடீரென விவரங்களைக் கேட்பது ஏன்?
சமீபத்தில் தங்கம் இறக்குமதி செய்வதற்கான வரி 15% ஆக உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளி இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது 2023-ஆம் ஆண்டு முதல் வங்கிகள் வழங்கிய தங்கக் கடன்கள், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மற்றும் சர்வதேச விநியோகஸ்தர்கள் பற்றிய முழு விவரங்களையும் திங்கட்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், தங்கக் கட்டுப்பாட்டில் அடுத்தகட்ட நடவடிக்கை வரலாம் என வங்கிகள் கருதுகின்றன.



தங்கம் இறக்குமதியைக் குறைக்க புதிய திட்டம்
இந்தியாவிற்கு வெளியே இருந்து புதிய தங்கத்தை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, உள்நாட்டிலேயே சுத்திகரிக்கப்படும் 'டோரே தங்கம்' (Dore Gold - கலப்புத் தங்கம்) மற்றும் நகைக் கடைகளைச் சுத்திகரித்து வரும் தங்கக் கட்டிகளை நகை வியாபாரிகளுக்குக் கடனாக வழங்கலாம் என்று வர்த்தக அமைப்புகள் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளன. இதன் மூலம் நாட்டின் தங்கம் இறக்குமதியைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

தங்கம் ஏற்றுமதிக்கு அனுமதி?
இந்தியாவில் தங்கத்திற்கான தேவை குறைந்து, தள்ளுபடி அதிகமாக இருக்கும் காலங்களில், விற்கப்படாத தங்கத்தைச் சீனா, துருக்கி போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது நடந்தால், இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும் மற்றும் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறையும்.

தங்கம் இறக்குமதி புதிய உச்சம் (2025-26)
கடந்த 2025-26 நிதியாண்டில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி மதிப்பு 24% அதிகரித்து, 71.9 பில்லியன் டாலர்வ்என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஆனால், ஆச்சரியப்படும் விதமாக இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு (721 டன்கள்) முந்தைய ஆண்டை விடக் குறைவுதான். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்ததே இந்த மதிப்பு அதிகரிப்பிற்குக் காரணம்.



சாமானியர்களைப் பாதிக்குமா?
தற்போதைக்குக் கடுமையான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும், தங்கம் விநியோகத்தைப் பாதுகாக்கவும், தேவையற்ற இறக்குமதியைக் கட்டுப்படுத்தவுமே இந்தத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. எனவே, சாமானியர்களின் தங்கக் கடன்களை விட, பெரிய நகை வியாபாரிகள் வாங்கும் 'தங்க உலோகக் கடன்கள்' (GML) மீதே அரசின் கவனம் அதிகமாக உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைத் தடுக்கவும், தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஒரு பெரிய திட்டத்தோடு களம் இறங்கியுள்ளது.