நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news சரசரவென உயர்ந்த முட்டை விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி.. ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? 12 hours ago
news கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது இந்த நான்கு தவறுகளை மட்டும் தவிர்த்துவிடுங்கள் 1 days ago
news "10 ஏக்கர்... 5 தொழில்கள்..." - வருடம் ₹20 லட்சம் அள்ளும் பட்டதாரி விவசாயி 3 days ago
news கோடிகள் குவிக்கும் 'கோகோபீட்' தொழில்... கிராமத்து இளைஞர்களை லட்சாதிபதி ஆக்கும் பிசினஸ் 4 days ago
news உயிரைப் பணயம் வைக்கும் சங்கு குளித்தல் தொழில் - பின்னணியில் இருக்கும் தாலிக் கயிறு ரகசியம் 5 days ago
news இந்தியாவில் குறைந்து வரும் கிரெடிட் கார்டு மவுசு: இதெல்லாம் தான் காரணமாம்! 6 days ago
news புதிய அப்டேட்டை வெளியிட தயாராகும் மத்திய அரசு..... பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி டீசலுக்கும் E20.... 06 Jul 2026
news மின்சார வாகனம் வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்.... ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கும் அரசு... 04 Jul 2026
news EPF புதிய விதி: இனி உங்கள் சம்பளம் உங்கள் கையில்.. PF பிடித்தத்தில் அதிரடி மாற்றம்! 03 Jul 2026
news ITR Filing 2026 : வருமான வரி தாக்கல் செய்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு முக்கிய தவறுகள் 02 Jul 2026
news சரசரவென உயர்ந்த முட்டை விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி.. ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? 12 hours ago
news கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது இந்த நான்கு தவறுகளை மட்டும் தவிர்த்துவிடுங்கள் 1 days ago
news "10 ஏக்கர்... 5 தொழில்கள்..." - வருடம் ₹20 லட்சம் அள்ளும் பட்டதாரி விவசாயி 3 days ago
news கோடிகள் குவிக்கும் 'கோகோபீட்' தொழில்... கிராமத்து இளைஞர்களை லட்சாதிபதி ஆக்கும் பிசினஸ் 4 days ago
news உயிரைப் பணயம் வைக்கும் சங்கு குளித்தல் தொழில் - பின்னணியில் இருக்கும் தாலிக் கயிறு ரகசியம் 5 days ago
news இந்தியாவில் குறைந்து வரும் கிரெடிட் கார்டு மவுசு: இதெல்லாம் தான் காரணமாம்! 6 days ago
news புதிய அப்டேட்டை வெளியிட தயாராகும் மத்திய அரசு..... பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி டீசலுக்கும் E20.... 06 Jul 2026
news மின்சார வாகனம் வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்.... ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கும் அரசு... 04 Jul 2026
news EPF புதிய விதி: இனி உங்கள் சம்பளம் உங்கள் கையில்.. PF பிடித்தத்தில் அதிரடி மாற்றம்! 03 Jul 2026
news ITR Filing 2026 : வருமான வரி தாக்கல் செய்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு முக்கிய தவறுகள் 02 Jul 2026
பொருளாதாரம்

புதிய அப்டேட்டை வெளியிட தயாராகும் மத்திய அரசு..... பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி டீசலுக்கும் E20....

Jul 06, 2026 06 Jul 2026 0 Views
எத்தனாலை நேரடியாக டீசலுடன் கலக்க முடியாது என்பதால், அதற்குச் சிறந்த மாற்றாக எத்தனாலில் இருந்து ஐசோபியூட்டனாலைத் தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் விதமாக பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு என்பது நடைமுறைப்படுத்தப் பட்டது. இது கடந்த சில ஆண்டுகளாக நடைமுறை இருக்கும் நிலையில் தற்போது டீசலிலும் 15 சதவீதம் வரை ஐசோபியூட்டனால் (isobutanol) கலவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களுடன், உயிரி எரிபொருள் ( biofuel ) பயன்பாட்டை நோக்கிய அடுத்த கட்டத்திற்கு இந்தியா தயாராகி வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

அரசின் மாற்று எரிபொருள் உத்தி குறித்துப் பேசிய கட்கரி, எத்தனாலை நேரடியாக டீசலுடன் கலக்க முடியாது என்பதால், அதற்குச் சிறந்த மாற்றாக எத்தனாலில் இருந்து ஐசோபியூட்டனாலைத் தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

எத்தனாலை நேரடியாக டீசலுடன் கலக்க முடியாது. எனவே நாங்கள் எத்தனாலில் இருந்து ஐசோபியூட்டனாலை உற்பத்தி செய்கிறோம் என்று கூறிய கட்கரி, ஐசோபியூட்டனால் டீசலுக்கு மாற்றாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

டீசலில் 15 சதவீத ஐசோபியூட்டனால் கலவையை அனுமதிப்பதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறிய அமைச்சர், இது இந்தியாவின் எரிபொருள் துறையில் ஒரு முக்கிய மைல்கல் என்று விவரித்தார்.

100 சதவீத எத்தனால் மற்றும் ஐசோபியூட்டனால் மூலம் இரண்டு ஜெனரேட்டர்களை நாங்கள் வெற்றிகரமாக இயக்கியுள்ளோம். இந்த எரிபொருட்களில் இயங்கும் வகையிலான இயந்திரங்களை உருவாக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளார்.

பல வழக்கமான உயிரி எரிபொருட்களுடன் ஒப்பிடுகையில், அதிக ஆற்றல் அடர்த்தி, சிறந்த இயந்திரப் பொருத்தம் மற்றும் குறைவான உமிழ்வு ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், ஐசோபியூட்டனால் ஒரு நம்பிக்கைக்குரிய அடுத்த தலைமுறை உயிரி எரிபொருளாகக் கருதப்படுகிறது. இதன் பயன்பாடு இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதோடு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உயிரி எரிபொருட்களுக்கான கூடுதல் தேவையையும் உருவாக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

அரசின் E20 எத்தனால் கலப்புத் திட்டத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் நியாயப்படுத்திப் பேசிய சில நாட்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விரிவான விளக்கமளித்த அமைச்சகம், எத்தனால் உற்பத்தியானது நீர் வளங்களை அளவுக்கு அதிகமாகக் குறைக்கிறது. வாகன இயந்திரங்களைச் சேதப்படுத்துகிறது, காப்பீடு அல்லது உத்தரவாதத்தை செல்லாததாக்குகிறது அல்லது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கிறது போன்ற குற்றச்சாட்டுகளை மறுத்தது. அறிவியல் ஆய்வுகள், ஒழுங்குமுறைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எத்தனால் கலந்த எரிபொருட்களின் உலகளாவிய பயன்பாட்டு அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே, பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை இந்தியா எட்டியுள்ளதையும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்திட்டம் 1.9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் உதவியுள்ளது. அதேவேளையில் விவசாயிகளுக்கு வருவாய் வாய்ப்புகளையும் அதிகரித்துள்ளது.