நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news நிலத்தடி நீர் மாசுபாடு விவகாரத்தில் சிக்கிய டாடா ஐஃபோன்.. ஓசூர் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்.. என்னதான் நடக்குது? 18 hours ago
news 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.... 2 days ago
news 13 ஆண்டுகளுக்கு பிறகு ... ரிசர்வ் வங்கி கொடுத்த ஜாக்பாட் ... செப்டம்பர் 30-க்குள் முதலீடு செய்தால் 20% வரை வட்டி | FCNR B Account 3 days ago
news Credit Card | நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஜூன் 15 முதல் புது ரூல்ஸ்! 3 days ago
news வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்? 5 days ago
news 90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை! 6 days ago
news மீண்டும் உயரும் கச்சா எண்ணெய் விலை... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.... 08 Jun 2026
news எங்களுக்கும் ரூ.52,000 அடிப்படைச் சம்பளம் வேணும்.. 8வது ஊதியக்குழுவின் IRTSA-இடம் வேண்டுகோள் வைத்த ரயில்வே ஊழியர்கள்! 05 Jun 2026
news எச்சரிக்கை... இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரிக்கு வழிவகுக்கலாம்... கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 05 Jun 2026
news மீண்டும் தாமதமாகும் 8வது ஊதியக்குழு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. இனி பென்சன், சம்பளம் எப்போ கிடைக்கும்? 03 Jun 2026
news நிலத்தடி நீர் மாசுபாடு விவகாரத்தில் சிக்கிய டாடா ஐஃபோன்.. ஓசூர் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்.. என்னதான் நடக்குது? 18 hours ago
news 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.... 2 days ago
news 13 ஆண்டுகளுக்கு பிறகு ... ரிசர்வ் வங்கி கொடுத்த ஜாக்பாட் ... செப்டம்பர் 30-க்குள் முதலீடு செய்தால் 20% வரை வட்டி | FCNR B Account 3 days ago
news Credit Card | நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஜூன் 15 முதல் புது ரூல்ஸ்! 3 days ago
news வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்? 5 days ago
news 90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை! 6 days ago
news மீண்டும் உயரும் கச்சா எண்ணெய் விலை... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.... 08 Jun 2026
news எங்களுக்கும் ரூ.52,000 அடிப்படைச் சம்பளம் வேணும்.. 8வது ஊதியக்குழுவின் IRTSA-இடம் வேண்டுகோள் வைத்த ரயில்வே ஊழியர்கள்! 05 Jun 2026
news எச்சரிக்கை... இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரிக்கு வழிவகுக்கலாம்... கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 05 Jun 2026
news மீண்டும் தாமதமாகும் 8வது ஊதியக்குழு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. இனி பென்சன், சம்பளம் எப்போ கிடைக்கும்? 03 Jun 2026
பொருளாதாரம்

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, யாருக்கு பயன் அளிக்கும்?

Jan 17, 2025 17 Jan 2025 0 Views
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதாவது, ரூபாயின் மதிப்பு 85-க்கு மேல் சரிந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வீழ்ச்சி அடைவதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும், எஃப்ஐஐ விற்பனை மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள் பலரும், அதை வெளியே எடுத்து வருகின்றனர்.

இதன் பொருள், டாலர் சந்தையிலிருந்து டாலர் வெளியேறுகிறது என்பதுதான். கிட்டதட்ட 4 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ரூபாயின் விலை ஏற்றம் ஒருவிதமான அழுத்தத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக எஃப்ஐஐக்கள் தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுமட்டும் இல்லாமல், இந்தியாவின் இறக்குமதிக்கான செலவும் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகவும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏனெனில், இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு அதிகமாக உள்ளது. எனவே தங்கம்,வெள்ளி இறக்குமதி செய்வதற்கு பெருமளவு தொகை டாலரின் மதிப்பில் செலவிடப்படுகிறது. மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கும் கணிசமான தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அன்னிய செலவாணி தொடர்ந்து அதிகரித்து, ரூபாய் மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்கிறது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி என்பது தனியாக நடப்பது அல்ல. அதைச் சுற்றி பல புறக்காரணிகள் உள்ளன. மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, பல நாடுகளின் கரன்சிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளின் கரன்சி மதிப்பு சரிந்து வருகிறது.அமெரிக்கா, தனது பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் காரணமாக, உலக நாடுகளில் உள்ள முதலீடுகள் அமெரிக்காவுக்கு செல்கின்றன.

இதனால், பல நாடுகளின் கரன்சிகள் வலிமை இழந்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் உள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவதால், இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் அனைத்து நாடுகளின் கரன்சி மதிப்பும் சரிந்து வருவதால், இந்த பலன் அனைத்து நாடுகளுக்கும் பகிரப்படும். அதே நேரத்தில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அதிக விலை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். இதில் தங்கம், வெள்ளியின் இறக்குமதியை குறைத்தால் ரூபாய் மதிப்பின் மீதான அழுத்தம் குறையும்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தால் அது ரூபாயின் மதிப்புக்கு சாதகமாக அமையும்.