நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 2 hours ago
news ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. ஆதார் கார்டு ரயில் டிக்கெட் விலை எல்லாம் மாறப்போகுது.. நோட் பண்ணுங்க! 3 days ago
news ஆகஸ்ட் மாதம் SBI, HDFC உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் 14 நாட்கள் செயல்படாது.. RBI வங்கி விடுமுறை அறிவிப்பு விவரங்கள் இதோ! 4 days ago
news Tomato Price | வரத்து குறைவால் தக்காளி விலை கடும் சரிவு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? 6 days ago
news UBERல் 10 % ஊழியர்கள் பணிநீக்கம் :இந்திய IT -BPO துறைக்கான மாற்றங்களும் எச்சரிக்கையும் 24 Jul 2026
news Solar Panel | 3 கிலோவாட் சோலார் பேனல் ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யும்? அரசு மிகப்பெரிய மானியம்! 23 Jul 2026
news LPG Cylinder | இனி இந்த வீடுகளுக்கு சிலிண்டர் கிடையாது.. எல்பிஜி பயனர்களுக்கு ஷாக் நியூஸ்! 22 Jul 2026
news RBI Polymer Notes | வருகிறது ரூ.10, 20 பிளாஸ்டிக் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி புது திட்டம்..! 21 Jul 2026
news Solar Panel | வீட்டில் சோலார் பேனல் வச்சிருக்கீங்களா..? உடனே இதை பண்ணுங்க..! 18 Jul 2026
news UPI பண பரிவர்த்தனைக்கு மீண்டும் கட்டணமா ? மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு 17 Jul 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 2 hours ago
news ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. ஆதார் கார்டு ரயில் டிக்கெட் விலை எல்லாம் மாறப்போகுது.. நோட் பண்ணுங்க! 3 days ago
news ஆகஸ்ட் மாதம் SBI, HDFC உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் 14 நாட்கள் செயல்படாது.. RBI வங்கி விடுமுறை அறிவிப்பு விவரங்கள் இதோ! 4 days ago
news Tomato Price | வரத்து குறைவால் தக்காளி விலை கடும் சரிவு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? 6 days ago
news UBERல் 10 % ஊழியர்கள் பணிநீக்கம் :இந்திய IT -BPO துறைக்கான மாற்றங்களும் எச்சரிக்கையும் 24 Jul 2026
news Solar Panel | 3 கிலோவாட் சோலார் பேனல் ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யும்? அரசு மிகப்பெரிய மானியம்! 23 Jul 2026
news LPG Cylinder | இனி இந்த வீடுகளுக்கு சிலிண்டர் கிடையாது.. எல்பிஜி பயனர்களுக்கு ஷாக் நியூஸ்! 22 Jul 2026
news RBI Polymer Notes | வருகிறது ரூ.10, 20 பிளாஸ்டிக் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி புது திட்டம்..! 21 Jul 2026
news Solar Panel | வீட்டில் சோலார் பேனல் வச்சிருக்கீங்களா..? உடனே இதை பண்ணுங்க..! 18 Jul 2026
news UPI பண பரிவர்த்தனைக்கு மீண்டும் கட்டணமா ? மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு 17 Jul 2026
தொழில்நுட்பம்

கடந்த 10 ஆண்டுகளில், 21 மடங்கு அதிகரித்த கைபேசி உற்பத்தி

Dec 12, 2024 12 Dec 2024 0 Views
மதிப்பின் அடிப்படையில், இந்தியாவின் கைபேசி உற்பத்தி கடந்த பத்து ஆண்டுகளில் 21 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014-15 ஆம் நிதி ஆண்டில் இந்தியா ரூபாய் 18,900 கோடி மதிப்பிலான கைபேசிகளை தயாரித்தது. இது நடப்பு நிதியாண்டில் ரூபாய் 4.10 லட்சம் கோடியாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், நாட்டின் கைபேசி உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் 2000 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நாட்டின் அறிதிறன் பேசி (ஸ்மார்ட் போன்) உற்பத்தி வளர்ச்சியில், ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளன. இதன் மூலம், ஒட்டுமொத்த உள்நாட்டு கைப்பேசி உற்பத்தி அபரிமித வளர்ச்சியைக் கண்டுள்ளது. தற்போதைய நிலையில் நாட்டின் கைபேசி தேவையில் 97 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தியே பூர்த்தி செய்கிறது. எஞ்சிய 3 சதவீத தேவையை தான் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கைபேசிகள் நிறைவு செய்கின்றன.

இந்தியாவில் தயாரிக்கப்படும் 30 சதவீத கைபேசிகள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த 2014 -15 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கைபேசிகளின் மதிப்பு ரூபாய் 1,556 கோடியாக மட்டுமே இருந்தது. ஆனால், நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டில், நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கைபேசிகளின் மதிப்பு ரூபாய் 1.2 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கைபேசிகளின் மதிப்பு 7,500 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியின் காரணமாக கைபேசி ஏற்றுமதியில் உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கைபேசிகள் அதிக அளவில் பிரிட்டன், நெதர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது தவிர மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய சந்தைகளுக்கும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கைபேசிகள் கணிசமான அளவு ஏற்றுமதி ஆகின்றன.

பெரிய அளவிலான மின்னணு சாதனங்களுக்கான உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது, இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது என்றால் அது மிகையாகாது.