8வது ஊதியக் குழுவின் குழுவுடனான ஒரு முக்கியக் கூட்டத்தில், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.52,600 ஆகவும், ஃபிட்மென்ட் காரணியை 3.80 ஆகவும் உயர்த்த வேண்டும் என ஐ.ஆர்.டி.எஸ்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளது. அரசு இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால், ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு ஏற்படக்கூடும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு (8th Pay Commission) வர்றப்போ, நமக்கும் விடிவுகாலம் பிறக்கும்னு எல்லாரும் காத்துட்டு இருக்காங்க. இந்த நேரத்துல, ரயில்வேயில் இருக்குற சீனியர் செக்ஷன் இன்ஜினியர்ஸ் (SSE) மற்றும் டெக்னிக்கல் சூப்பர்வைசர்ஸ் தங்களோட கஷ்டங்களை எல்லாம் ஒண்ணா சேர்த்து 'ரமேஷ் குழு' முன்னாடி கொட்டித் தீர்த்திருக்காங்க.
8வது ஊதியக் குழுவின் குழுவுடனான ஒரு முக்கியக் கூட்டத்தில், இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA), ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.52,600 ஆக உயர்த்தவும், 3.80 என்ற பொருத்தக் காரணியை (fitment factor) நிர்ணயிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது. அரசு இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால், ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு ஏற்படும்.
"படிச்ச படிப்புக்கு ஏத்த சம்பளமும் இல்லை, அடுத்த கட்டத்துக்குப் போக பதவி உயர்வும் இல்லை" அப்படின்னு அவங்க வச்ச முக்கியமான டிமாண்ட்ஸ் என்னென்ன தெரியுமா?
சம்பள உயர்வு கோரிக்கை!
-> நிலை 1 பதவிகளுக்கான பொருத்தக் காரணி 2.92 ஆக நிர்ணயிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-> பாதுகாப்புப் பிரிவு மற்றும் நிலை 6, 7, 8 பதவிகளுக்கான பொருத்தக் காரணியை (fitment factor) 3.50 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-> நடுத்தர நிலை பதவிகளுக்கு (ஊதிய நிலை 9 முதல் 12 வரை) இதை 3.80 ஆக உயர்த்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
-> சிரேஷ்ட பிரிவு பொறியாளர்களுக்கு (SSEs) 'குரூப்-பி கெஜட்' அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-> இளநிலை பொறியாளர் மற்றும் முதுநிலை பிரிவு பொறியாளர் ஆகியோரின் பணியின் பொறுப்பு மற்றும் அபாயகரமான தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் ஊதிய நிலை உயர்த்தப்பட வேண்டும்.
-> ரயில்வே வாரியத்தின் விதிமுறைகளின் அடிப்படையில், திறந்த வழித்தடப் பொறியாளர்கள் மற்றும் பராமரிப்புப் பணியாளர்களுக்காக ஒரு குழு ஊக்கத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
முக்கிய கோரிக்கைகள் என்ன
1. ஒரே போஸ்டிங்ல எத்தனை வருஷம்தான் இருக்குறது: உள்ள வந்தப்பவும் இதேதான், இப்பவும் இதேதான், டைரக்டா SSE-வா வேலைக்குச் சேருற பட்டதாரி இன்ஜினியர்ஸ், தங்களோட கரியர் முழுக்க அதே போஸ்டிங்லயே தேங்கிப் போயிடுறாங்க.8-வது ஊதியக்குழுவிலாவது இந்த சம்பளத் தேக்கநிலையை உடைக்கணும்னு கேக்குறாங்க.
2. குரூப்-பி சீட் ரொம்ப கம்மி: குரூப்-பி (Group-B) லெவல்ல மேல் பதவிகள் ரொம்ப கம்மியா இருக்கு. அதனால தகுதி இருந்தும் புரமோஷன் கிடைக்க மாட்டேங்குது. அதுமட்டும் இல்லாம, ஜூனியர் லெவல்ல இருக்குற ஊழியர்களோட இவங்களையும் ஒரே தராசுல வச்சு ஒப்பிடுறது நியாயமே இல்லைங்கிறது இவங்களோட வாதம்.
3. ட்ரெய்னிங் பீரியடையும் கணக்குல எடுங்க: அந்தப் பயிற்சிக் காலம் என்ன கணக்கா? வேலைக்குச் சேர்ந்த புதுசுல போன ட்ரெய்னிங் பீரியடையும் (Training Period) சர்வீஸா கணக்குல எடுத்து, MACPS மூலமா வர்ற சம்பள உயர்வை வழங்கணும்.
4. பழைய பாக்கி வேணும்: கோர்ட் தீர்ப்புகளின்படி, இந்த MACPS பலன்களை 01.01.2006-ல இருந்தே கணக்கிட்டு, விடுபட்ட பணப் பலன்களைக் கொடுக்கணும்.
5. அலவன்ஸ் விஷயத்துல ஏன் இந்த பாரபட்சம்: லெவல்-8-ல இருக்குற SSE ஆபீஸர்ஸோட உற்பத்திக் கட்டுப்பாட்டு அமைப்புப் படியை (PCO Allowance) கட் பண்ணிட்டாங்க. ரயில்வேயோட சொந்த லாபத்துக்கும் உற்பத்திக்கும் முதுகெலும்பா இருக்குற இந்த இன்சென்டிவ் முறையை ஏன் கைவிடணும்னு கேள்வி எழுப்பியிருக்காங்க.
6. நைட் டியூட்டி அலவன்ஸ்: நைட்டு முழுக்க கண்ணு முழிச்சு பாக்குற வேலைக்கான 'நைட் டியூட்டி அலவன்ஸ்', ஓவர்டைம் காசு, அப்புறம் ஃபீல்டுல உயிரைப் பணயம் வச்சு வேலை பாக்குறவங்களுக்கு 'ரிஸ்க் அலவன்ஸ்' (Risk and Hardship Allowance)—இதையெல்லாம் 8-வது ஊதியக்குழு முறைப்படி உயர்த்தித் தரணும்.
7.விபத்தில்லா சேவைக்கு விருது: ரயில்வேயைப் பாதுகாப்பா நடத்துற ஓபன் லைன் இன்ஜினியர்களுக்கும் ஊழியர்களுக்கும் விபத்தில்லா சேவைக்கான விருதுகளைத் தொடர்ந்து கொடுக்கணும்.