நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news கோடிகள் குவிக்கும் 'கோகோபீட்' தொழில்... கிராமத்து இளைஞர்களை லட்சாதிபதி ஆக்கும் பிசினஸ் Just now
news உயிரைப் பணயம் வைக்கும் சங்கு குளித்தல் தொழில் - பின்னணியில் இருக்கும் தாலிக் கயிறு ரகசியம் 17 hours ago
news இந்தியாவில் குறைந்து வரும் கிரெடிட் கார்டு மவுசு: இதெல்லாம் தான் காரணமாம்! 1 days ago
news புதிய அப்டேட்டை வெளியிட தயாராகும் மத்திய அரசு..... பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி டீசலுக்கும் E20.... 3 days ago
news மின்சார வாகனம் வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்.... ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கும் அரசு... 5 days ago
news EPF புதிய விதி: இனி உங்கள் சம்பளம் உங்கள் கையில்.. PF பிடித்தத்தில் அதிரடி மாற்றம்! 6 days ago
news ITR Filing 2026 : வருமான வரி தாக்கல் செய்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு முக்கிய தவறுகள் 02 Jul 2026
news LPG Cylinder Price Drop | எல்பிஜி சிலிண்டர் விலை அதிரடி குறைவு.. வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! 01 Jul 2026
news ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு! 30 Jun 2026
news ஜூலை மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை.. RBI பட்டியல் சொல்வதென்ன! 29 Jun 2026
news கோடிகள் குவிக்கும் 'கோகோபீட்' தொழில்... கிராமத்து இளைஞர்களை லட்சாதிபதி ஆக்கும் பிசினஸ் Just now
news உயிரைப் பணயம் வைக்கும் சங்கு குளித்தல் தொழில் - பின்னணியில் இருக்கும் தாலிக் கயிறு ரகசியம் 17 hours ago
news இந்தியாவில் குறைந்து வரும் கிரெடிட் கார்டு மவுசு: இதெல்லாம் தான் காரணமாம்! 1 days ago
news புதிய அப்டேட்டை வெளியிட தயாராகும் மத்திய அரசு..... பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி டீசலுக்கும் E20.... 3 days ago
news மின்சார வாகனம் வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்.... ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கும் அரசு... 5 days ago
news EPF புதிய விதி: இனி உங்கள் சம்பளம் உங்கள் கையில்.. PF பிடித்தத்தில் அதிரடி மாற்றம்! 6 days ago
news ITR Filing 2026 : வருமான வரி தாக்கல் செய்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு முக்கிய தவறுகள் 02 Jul 2026
news LPG Cylinder Price Drop | எல்பிஜி சிலிண்டர் விலை அதிரடி குறைவு.. வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! 01 Jul 2026
news ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு! 30 Jun 2026
news ஜூலை மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை.. RBI பட்டியல் சொல்வதென்ன! 29 Jun 2026
தொழில்

கோடிகள் குவிக்கும் 'கோகோபீட்' தொழில்... கிராமத்து இளைஞர்களை லட்சாதிபதி ஆக்கும் பிசினஸ்

Jul 10, 2026 Just now 0 Views
நகரமயமாக்கல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பான மற்றும் நஞ்சில்லா உணவின் மீதான மக்களின் ஆர்வமும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக வீட்டின் மொட்டை மாடியையே சிறிய காய்கறி தோட்டமாக மாற்றும் மாடித்தோட்டம் முறை வேகமாக பரவி வருகிறது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக தேங்காய் நார் கழிவு பயன்பாடு உருவெடுத்துள்ளது.

ஒரு காலத்தில் தென்னை தொழிலில் கழிவு பொருளாக கருதப்பட்ட தேங்காய் நார் கழிவு இன்று உலகம் முழுவதும் மாடித்தோட்டம், பசுமைக்குடில் விவசாயம் மற்றும் மண் இல்லா சாகுபடியில் முக்கிய இடம்பிடித்துள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி உள்ளிட்ட தென்னை வளம் மிக்க பகுதிகளில் உற்பத்தியாகும் தேங்காய் நார் கழிவுகளுக்கு வெளிநாடுகளில் பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.

தேங்காய் மட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நார் கழிவு, சுத்திகரிக்கப்பட்டு உலர்த்தப்பட்டு கோகோபீட் ஆக மாற்றப்படுகிறது. இது தண்ணீரை நீண்ட நேரம் தக்கவைக்கும் தன்மை கொண்டதுடன் செடிகளின் வேர்கள் சுவாசிக்க ஏற்ற சூழலையும் உருவாக்குகிறது. இதனால் மண் இல்லாமல்கூட காய்கறி, கீரை, பூச்செடிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை எளிதாக வளர்க்க முடிகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நகர்ப்புற வீடுகளில் அதிக எடை கொண்ட மண்ணை பயன்படுத்துவது சிரமமாக இருப்பதால் கோகோபீட் சிறந்த மாற்றாக உள்ளது. இது எடை குறைவாக இருப்பதுடன் தண்ணீரை சேமிக்கும் திறன் அதிகம் என்பதால் குறைந்த அளவு நீரிலேயே செடிகள் ஆரோக்கியமாக வளரும்.

பழைய பிளாஸ்டிக் வாளிகள், சிமெண்டு பைகள், குரோ பேக்குகள் போன்றவற்றில் கோகோபீட், மண்புழு உரம் மற்றும் இயற்கை மண் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், பீர்க்கங்காய், கீரை வகைகள் உள்ளிட்ட பல காய்கறிகளை வளர்க்க முடியும்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் வளைகுடா நாடுகளில் பசுமைக்குடில் விவசாயம் மற்றும் மண் இல்லா சாகுபடியில் கோகோபீட் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் பல நாடுகள் இதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றன.

பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் கோகோபீட், 5 கிலோ எடையுள்ள சுருக்கப்பட்ட கட்டிகளாக தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்து செலவு குறைவதுடன் வெளிநாடுகளில் பயன்படுத்துவதும் எளிதாக உள்ளது.

தேங்காய் நார் கழிவு தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி தொழில் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. மட்டை உரித்தல், நார் பிரித்தல், உலர்த்துதல், சுத்திகரித்தல், பிளாக் தயாரித்தல், ஏற்றுமதி போன்ற பல்வேறு கட்டங்களில் கிராமப்புற மக்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கிறது.

மழைக்காலங்களில் நார் கழிவுகளை உலர்த்த முடியாததால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் தென்னை மரங்களை தாக்கும் பூச்சி நோய்கள் மற்றும் தேங்காய் வரத்து குறைவு காரணமாக மூலப்பொருள் விலை உயர்ந்து வருவது தொழில்துறைக்கு சவாலாக உள்ளது.

மாடித்தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை துறை மானிய விலையில் காய்கறி விதைகள், குரோ பேக்குகள் மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதேபோல் கோகோபீட் உற்பத்தியாளர்களுக்கு நவீன இயந்திரங்கள், சேமிப்பு வசதிகள் மற்றும் ஏற்றுமதி ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டால் இந்த துறை மேலும் வளர்ச்சியடையும் என உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.