ஏற்றுமதியில் சாதனை படைக்கும் தமிழகம்!

தமிழகத்தில் இருந்து, நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ரூபாய் 1.92 லட்சம் கோடி மதிப்புள்ள பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

அதிக ஏற்றுமதியில் காஞ்சிபுரம் 68,666 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், சென்னை 22,891 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும், திருப்பூர் 16,371 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு. மாவட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள். மோட்டார் வாகனங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஜவுளி உள்ளிட்ட தொழில்களில் அதிகம் ஈடுபட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில், வேளாண் சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவை திருப்பூர்

ஆகியவை அதிகம் ஏற்றுமதி ஆகின்றன.

இந்நிறுவனங்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஜெர்மனி, சிங்கப்பூர், ஜப்பான், பிரான்ஸ், இலங்கை,

கடந்த நிதியாண்டில் தமிழக ஏற்றுமதி 3.61 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு 202425 இல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை. ரூபாய் 1.92 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 1.74 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
ஏற்றுமதியில் தொலை தொடர்பு கருவிகள் முதலிடத்திலும், பருத்தி ஆயத்த ஆடைகள் இரண்டாம் இடத்திலும், மோட்டார் வாகனங்கள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.