நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் பார்முலா வழிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.3 அக்கவுண்ட் பார்முலா மூலம் கிடைக்கும் நன்மைகள் மற்றும் மூன்றிற்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருந்தால் அதனால் வரும் ஆபத்துக்கள் என்ன என்பதனை தற்போது பார்ப்போம்
ஒரு சிலர் பல வங்கி கணக்குகளை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு நிறுவனமாக மாறும்போதும் சம்பளத்திற்காக புதிய கணக்கை சிலர் துவங்குவது வழக்கம் தான். அவ்வாறு பல வங்கி கணக்குகளை துவங்குவதினால் ஏற்படும் நஷ்டம் என்ன ? அதே சமயத்தில் 3 அக்கவுண்ட் பார்முலா மூலம் பணத்தை சேமிப்பது எப்படி ? என்பதனை தற்போது பார்க்கலாம்
நம் மாத சம்பளத்திலிருந்து சேமிப்பதற்கும் வங்கியின் மறைமுக கட்டணங்களில் இருந்து விடுபடவும் நம் பணத்தை 3 கணக்குகளாக பிரிப்பது அவசியம்முதன்மை -வருமான கணக்கு
உங்களுடைய சம்பளம் உள்ளிட்ட அனைத்து வகையான வருமானங்களை இந்த முதன்மை கணக்கில் தான் போட வேண்டும். தினசரி செலவுகளுக்கு இந்த கணக்கை பயன்படுத்த கூடாது.சம்பளம் அல்லது தொழில் சார்ந்த வருமானம் வரும்போது அதனை எடுத்து மற்ற இரண்டு கணக்குகளில் பிரித்து போட வேண்டும். இந்த முதன்மை மற்றும் வருமான கணக்குகளால் நமக்கு மாத சம்பளம் மற்றும் சேமிப்பு தொடர்பான தெளிவு கிடைக்கும்
செலவுகளுக்காக கணக்கு
உங்களுடைய செலவுகளுக்காக கணக்காக இதனை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.வீட்டு வாடகை போன்ற அனைத்து செலவுகளுக்கும் EMI கடன்களுக்கும் இந்த கணக்கை பயன்படுத்தலாம். இந்த கணக்கில் இருந்து EMI கள் ஆட்டோ டெபிட் கூட ஆகலாம். இப்படி செலவுகளுக்காக தனியாக ஒரு கணக்கை பிரிப்பதால் மாத இறுதியில் பணம் இருக்குமோ என்ற பயம் இருக்காது
சேமிப்பு கணக்கு
இந்த சேமிப்பு கணக்கில் நாம் அவசரகால நிதிக்காகவும், நீண்ட கால முதலீட்டிற்காகவும் பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த சேமிப்பு கணக்கில் டெபிட் கார்டு மற்றும் UPI செயலிகளை இணைக்க கூடாது. இந்த சேமிப்பு கணக்கு வைத்திருப்பதால் இதிலிருந்து உடனடியாக நாம் பணத்தை எடுக்க முடியாது. எனவே இதனால் நம் வீண் செலவுகள் குறையும்.பணமும் பாதுகாப்பாக சேமிக்கப்படும்.அவசர காலத்தில் கண்டிப்பாக இது நமக்கு உதவும்
இவ்வாறு மூன்று வங்கி கணக்குகளின் மூலம் நாம் பணத்தை சேமித்து நிதி பாதுகாப்புடன் வாழலாம்
மூன்றிற்கும் மேற்பட்ட கணக்குகள் வைத்திருப்பதினால் வரும் ஆபத்துக்கள்
*மினிமம் பேலன்ஸ் அபராதம்
*டெபிட் கார்டு மற்றும் SMS கட்டணங்கள்
*சைபர் மோசடி ஆபத்து
*வருமான வரி கணக்கீட்டின் போது குழப்பம்
எனவே இதையெல்லாம் தவிர்ப்பதற்கு 3 அக்கவுண்ட் பார்முலாவை பின்பற்றுவது நல்லது




