மார்ச் 1- ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 6.5 கோடி டாலர் உயர்ந்து 62,562.6 கோடி டாலராக உள்ளது. பிப்ரவரி 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது, 297.5 கோடி டாலர் உயர்ந்து 61,907 கோடி டாலராக இருந்தது.
அக்டோபர் 2021 இல், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, 64,500 கோடி டாலரை எட்டியது. உலகளாவிய பொருளாதார சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே, ரூபாய் மதிப்பை பாதுகாப்பதற்காக அந்நிய செலாவணி கையிருப்பை ரிசர்வ் வங்கி பயன்படுத்துவதால், அது அவ்வப்போது குறைந்து வந்தது.
கடந்த மார்ச் 1- ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நிய செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான, அந்நிய நாணய சொத்துக்கள் 604.3 கோடி டாலர் உயர்ந்து 55,423 கோடி டாலராக உள்ளது. டாலர் அல்லாத யூரோ, பவுண்ட் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் டாலர் மதிப்பில் கணக்கிடப்படுவது, அந்நிய நாணய சொத்துக்கள் ஆகும்.
மதிப்பீட்டு வாரத்தில், நாட்டின் தங்கம் கையிருப்பு 56.9 கோடி டாலர் அதிகரித்து l4,841.7 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்.டி.ஆர்) 1.7 கோடி டாலர் சரிந்து 1,818 கோடி டாலராக உள்ளது. சர்வதேச நிதியத்தில் நாட்டின் கையிருப்பு,
4.1 லட்சம் டாலர் குறைந்து 4,798 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.




