பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது.
அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசலை மொத்தமாக சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்க தடைவிதிக்கப்பட்டது.
மேலும், ஒரு வாகனத்துக்கு ஒரு நாளைக்கு 200 லிட்டருக்கு மேல் விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டது. தற்போது மேற்கு ஆசிய போர் முடிவுக்கு வந்து கச்சா எண்ணெய் போக்குவரத்து சீரடைந்து வருகிறது.
இந்நிலையில், ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது.




