நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
தொழில்

தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி: விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம்!

Dec 02, 2025 02 Dec 2025 0 Views
இந்தியாவில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில், நடப்பாண்டில் 19 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், விலை குறைந்ததாலும், குஜராத் உப்பின் வருகையாலும் 12 லட்சம் டன் உப்பு உப்பளங்களிலேயே தேங்கியுள்ளது.

உப்பளப் பகுதிகள்: தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி போன்ற பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
சராசரி உற்பத்தி: இங்கு ஆண்டுக்குச் சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.


நடப்பாண்டு உற்பத்தி: கடந்த ஆண்டு பருவமழை நீடித்ததால் உற்பத்தி தாமதமான நிலையில், இந்த ஆண்டு மே 15-க்குப் பிறகு சாதகமான சூழல் நிலவியது. இதன் காரணமாக, நடப்பாண்டில் உப்பு உற்பத்தி 75 சதவீதத்தைக் கடந்து, சுமார் 19 லட்சம் டன் அளவுக்கு நடந்துள்ளது.

விற்பனை மற்றும் இருப்பு: நடப்பாண்டில் இதுவரை சுமார் 7 லட்சம் டன் உப்பு மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதனால் 12 லட்சம் டன் உப்பு உப்பளங்களிலேயே இருப்பு உள்ளது.


தேக்கத்திற்குக் காரணம்: குஜராத் மாநில உப்பு குறைந்த விலைக்குக் கிடைப்பதாலும், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னரே இருப்பு அதிகமாக இருந்ததாலும் தூத்துக்குடி உப்பு தேங்கியுள்ளது.
விலை நிலவரம்: கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு டன் உப்பு ₹3,000 முதல் ₹3,500 வரை விற்பனையான நிலையில், தற்போது தரத்தைப் பொறுத்து ₹2,000 முதல் ₹2,500 வரை மட்டுமே விலை போகிறது.

சீசன் முடிவு

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கியதைத் தொடர்ந்து, நடப்பு உப்பு உற்பத்தி சீசன் முடிவுக்கு வந்துள்ளது. உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த உப்பைப் மழையிலிருந்து பாதுகாக்க, பிளாஸ்டிக் ஷீட் போட்டு மூடி வைத்துள்ளனர். அடுத்த ஆண்டுக்கான உப்பு உற்பத்திப் பணிகள், வடகிழக்குப் பருவமழை முழுமையாக முடிந்த பிறகே தொடங்கும்.