நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news ரூ.1,045 கோடி லாபம் ஈட்டிய ஜிண்டால் ஸ்டீல்... நஷ்டத்தில் இருந்து லாபப் பாதைக்கும் திரும்பும் ஜிண்டால்.... Just now
news வர்த்தக சிலிண்டர் விலை கடுமையாக உயர்வு.... ஒரே நாளில் ரூ.993 அதிகரிப்பு.... அதிர்ச்சியில் மக்கள்.... 18 hours ago
news வணிக ரீதியான எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை 195 ரூபாய் உயர்வு.. ஹோட்டல் உணவுகளின் விலை உயருமா? 20 hours ago
news பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்திய RBI.. உண்மைத்தன்மை என்ன.. வாங்க பார்க்கலாம்! 1 days ago
news சட்டென உயர்ந்த பிட்காயின் விலை.. திடீர் ஏற்றத்திற்குப்பின் உள்ள காரணம் என்ன? 2 days ago
news மே 1 ஆம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு விதிகள் மீண்டும் மாறுமா? BharatGas, HP Gas.. LPG பயனாளர்கள் பாதிப்பு ஏற்படுமா? 2 days ago
news AI தொழில்நுட்பத்தால் 6,000 போரை வேலைவிட்டு அனுப்பும் மெட்டா... 2 days ago
news கணவன் - மனைவி இருவருக்கும் ஒரே வருமான வரி.. விரைவில் இந்த மாற்றம் வருமா? மத்திய அரசிடம் கோரிக்கை 2 days ago
news Paytm-யின் கதையை மொத்தமாக முடித்த ஆர்பிஐ.... வங்கிக்கான உரிமைத்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை 2 days ago
news 2026-27 இல் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி வரும்.. ராபர்ட் கியோசாகியின் அதிரடி கணிப்பும், தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயினுக்கான ‘மெகா’ இலக்குகளும்! 2 days ago
news ரூ.1,045 கோடி லாபம் ஈட்டிய ஜிண்டால் ஸ்டீல்... நஷ்டத்தில் இருந்து லாபப் பாதைக்கும் திரும்பும் ஜிண்டால்.... Just now
news வர்த்தக சிலிண்டர் விலை கடுமையாக உயர்வு.... ஒரே நாளில் ரூ.993 அதிகரிப்பு.... அதிர்ச்சியில் மக்கள்.... 18 hours ago
news வணிக ரீதியான எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை 195 ரூபாய் உயர்வு.. ஹோட்டல் உணவுகளின் விலை உயருமா? 20 hours ago
news பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்திய RBI.. உண்மைத்தன்மை என்ன.. வாங்க பார்க்கலாம்! 1 days ago
news சட்டென உயர்ந்த பிட்காயின் விலை.. திடீர் ஏற்றத்திற்குப்பின் உள்ள காரணம் என்ன? 2 days ago
news மே 1 ஆம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு விதிகள் மீண்டும் மாறுமா? BharatGas, HP Gas.. LPG பயனாளர்கள் பாதிப்பு ஏற்படுமா? 2 days ago
news AI தொழில்நுட்பத்தால் 6,000 போரை வேலைவிட்டு அனுப்பும் மெட்டா... 2 days ago
news கணவன் - மனைவி இருவருக்கும் ஒரே வருமான வரி.. விரைவில் இந்த மாற்றம் வருமா? மத்திய அரசிடம் கோரிக்கை 2 days ago
news Paytm-யின் கதையை மொத்தமாக முடித்த ஆர்பிஐ.... வங்கிக்கான உரிமைத்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை 2 days ago
news 2026-27 இல் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி வரும்.. ராபர்ட் கியோசாகியின் அதிரடி கணிப்பும், தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயினுக்கான ‘மெகா’ இலக்குகளும்! 2 days ago
தொழில்

ஓலா, ஊபருக்குப் போட்டியாக ‘பாரத் டாக்ஸி’ – கமிஷன் இல்லாத கூட்டுறவு டாக்ஸி சேவை டெல்லி, குஜராத்தில் சோதனை ஓட்டம் ஆரம்பம்!

Dec 23, 2025 23 Dec 2025 0 Views
இந்தியாவின் டாக்ஸி சேவைத் துறையில் ஓலா (Ola), ஊபர் (Uber), மற்றும் ரேபிடோ (Rapido) போன்ற தனியார் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஆதரவுடன் ‘பாரத் டாக்ஸி’ (Bharat Taxi) என்ற புதிய கூட்டுறவு டாக்ஸி சேவை செயலி பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இந்தச் செயலி தற்போது டெல்லி மற்றும் குஜராத்தின் சௌராஷ்டிரா பிராந்தியங்களில் தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தை (Pilot Runs) தொடங்கியுள்ளது. இந்தச் சோதனை ஓட்டத்தில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து, இச்சேவை இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும்.

பாரத் டாக்ஸியின் தனிச்சிறப்புகள்
பாரத் டாக்ஸியை, சஹாரிகா கூட்டுறவு சங்கம் (Sahakarika Co-operative) என்ற அமைப்பு இயக்குகிறது. இது இந்தியாவின் முதல் கூட்டுறவு டாக்ஸி சேவை தளம் ஆகும். இதன் உறுப்பினர்கள் அனைவரும் கார் ஓட்டுநர்களே.

ஓலா, ஊபர் போன்ற தனியார் செயலிகளில் ஒவ்வொரு பயணத்திற்கும் (Ride) ஒரு கமிஷன் தொகையை நிறுவனம் எடுத்துக்கொள்ளும். ஆனால், பாரத் டாக்ஸியில் வாடிக்கையாளர் செலுத்தும் மொத்தப் பணமும் கார் ஓட்டுநருக்கே செல்லும். இதுதான் இதன் முக்கியமான சிறப்பம்சமாகும்.

மேலும், தனியார் செயலிகளைப் போல, தேவை அதிகரிக்கும் நேரங்களில் (Peak Hours) அதிக கட்டணம் (Surge Pricing) வசூலிக்கும் முறை இதில் கிடையாது. எப்போதுமே ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரே கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். இது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் லாபத்தை அளிக்கும்.

இந்தச் சேவையானது முழுக்க முழுக்க கார் ஓட்டுநர்களால் இயக்கப்படும் ஒரு தளமாக இருக்கும். சோதனை ஓட்டம் தொடங்கப்பட்ட 10 நாட்களிலேயே டெல்லி மற்றும் சௌராஷ்டிராவில் 51 ஆயிரம் ஓட்டுநர்கள் இதில் தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசின் நேஷனல் இ-கவர்ன்மென்ட் பிரிவு இந்த முன்னோட்டத்தை எடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு தளத்தில் இதன் சேவை தற்போது கிடைக்கிறது. ஐஓஎஸ் தளத்திலும் கூடிய விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. இந்த மாத இறுதிக்குள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பாரத் டாக்ஸி செயலி கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.