நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news நிலத்தடி நீர் மாசுபாடு விவகாரத்தில் சிக்கிய டாடா ஐஃபோன்.. ஓசூர் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்.. என்னதான் நடக்குது? 18 hours ago
news 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.... 2 days ago
news 13 ஆண்டுகளுக்கு பிறகு ... ரிசர்வ் வங்கி கொடுத்த ஜாக்பாட் ... செப்டம்பர் 30-க்குள் முதலீடு செய்தால் 20% வரை வட்டி | FCNR B Account 3 days ago
news Credit Card | நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஜூன் 15 முதல் புது ரூல்ஸ்! 3 days ago
news வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்? 5 days ago
news 90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை! 6 days ago
news மீண்டும் உயரும் கச்சா எண்ணெய் விலை... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.... 08 Jun 2026
news எங்களுக்கும் ரூ.52,000 அடிப்படைச் சம்பளம் வேணும்.. 8வது ஊதியக்குழுவின் IRTSA-இடம் வேண்டுகோள் வைத்த ரயில்வே ஊழியர்கள்! 05 Jun 2026
news எச்சரிக்கை... இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரிக்கு வழிவகுக்கலாம்... கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 05 Jun 2026
news மீண்டும் தாமதமாகும் 8வது ஊதியக்குழு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. இனி பென்சன், சம்பளம் எப்போ கிடைக்கும்? 03 Jun 2026
news நிலத்தடி நீர் மாசுபாடு விவகாரத்தில் சிக்கிய டாடா ஐஃபோன்.. ஓசூர் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்.. என்னதான் நடக்குது? 18 hours ago
news 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.... 2 days ago
news 13 ஆண்டுகளுக்கு பிறகு ... ரிசர்வ் வங்கி கொடுத்த ஜாக்பாட் ... செப்டம்பர் 30-க்குள் முதலீடு செய்தால் 20% வரை வட்டி | FCNR B Account 3 days ago
news Credit Card | நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஜூன் 15 முதல் புது ரூல்ஸ்! 3 days ago
news வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்? 5 days ago
news 90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை! 6 days ago
news மீண்டும் உயரும் கச்சா எண்ணெய் விலை... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.... 08 Jun 2026
news எங்களுக்கும் ரூ.52,000 அடிப்படைச் சம்பளம் வேணும்.. 8வது ஊதியக்குழுவின் IRTSA-இடம் வேண்டுகோள் வைத்த ரயில்வே ஊழியர்கள்! 05 Jun 2026
news எச்சரிக்கை... இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரிக்கு வழிவகுக்கலாம்... கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 05 Jun 2026
news மீண்டும் தாமதமாகும் 8வது ஊதியக்குழு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. இனி பென்சன், சம்பளம் எப்போ கிடைக்கும்? 03 Jun 2026
தொழில்

ஓலா, ஊபருக்குப் போட்டியாக ‘பாரத் டாக்ஸி’ – கமிஷன் இல்லாத கூட்டுறவு டாக்ஸி சேவை டெல்லி, குஜராத்தில் சோதனை ஓட்டம் ஆரம்பம்!

Dec 23, 2025 23 Dec 2025 0 Views
இந்தியாவின் டாக்ஸி சேவைத் துறையில் ஓலா (Ola), ஊபர் (Uber), மற்றும் ரேபிடோ (Rapido) போன்ற தனியார் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஆதரவுடன் ‘பாரத் டாக்ஸி’ (Bharat Taxi) என்ற புதிய கூட்டுறவு டாக்ஸி சேவை செயலி பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இந்தச் செயலி தற்போது டெல்லி மற்றும் குஜராத்தின் சௌராஷ்டிரா பிராந்தியங்களில் தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தை (Pilot Runs) தொடங்கியுள்ளது. இந்தச் சோதனை ஓட்டத்தில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து, இச்சேவை இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும்.

பாரத் டாக்ஸியின் தனிச்சிறப்புகள்
பாரத் டாக்ஸியை, சஹாரிகா கூட்டுறவு சங்கம் (Sahakarika Co-operative) என்ற அமைப்பு இயக்குகிறது. இது இந்தியாவின் முதல் கூட்டுறவு டாக்ஸி சேவை தளம் ஆகும். இதன் உறுப்பினர்கள் அனைவரும் கார் ஓட்டுநர்களே.

ஓலா, ஊபர் போன்ற தனியார் செயலிகளில் ஒவ்வொரு பயணத்திற்கும் (Ride) ஒரு கமிஷன் தொகையை நிறுவனம் எடுத்துக்கொள்ளும். ஆனால், பாரத் டாக்ஸியில் வாடிக்கையாளர் செலுத்தும் மொத்தப் பணமும் கார் ஓட்டுநருக்கே செல்லும். இதுதான் இதன் முக்கியமான சிறப்பம்சமாகும்.

மேலும், தனியார் செயலிகளைப் போல, தேவை அதிகரிக்கும் நேரங்களில் (Peak Hours) அதிக கட்டணம் (Surge Pricing) வசூலிக்கும் முறை இதில் கிடையாது. எப்போதுமே ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரே கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். இது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் லாபத்தை அளிக்கும்.

இந்தச் சேவையானது முழுக்க முழுக்க கார் ஓட்டுநர்களால் இயக்கப்படும் ஒரு தளமாக இருக்கும். சோதனை ஓட்டம் தொடங்கப்பட்ட 10 நாட்களிலேயே டெல்லி மற்றும் சௌராஷ்டிராவில் 51 ஆயிரம் ஓட்டுநர்கள் இதில் தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசின் நேஷனல் இ-கவர்ன்மென்ட் பிரிவு இந்த முன்னோட்டத்தை எடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு தளத்தில் இதன் சேவை தற்போது கிடைக்கிறது. ஐஓஎஸ் தளத்திலும் கூடிய விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. இந்த மாத இறுதிக்குள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பாரத் டாக்ஸி செயலி கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.