நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news ரூ.1,045 கோடி லாபம் ஈட்டிய ஜிண்டால் ஸ்டீல்... நஷ்டத்தில் இருந்து லாபப் பாதைக்கும் திரும்பும் ஜிண்டால்.... Just now
news வர்த்தக சிலிண்டர் விலை கடுமையாக உயர்வு.... ஒரே நாளில் ரூ.993 அதிகரிப்பு.... அதிர்ச்சியில் மக்கள்.... 18 hours ago
news வணிக ரீதியான எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை 195 ரூபாய் உயர்வு.. ஹோட்டல் உணவுகளின் விலை உயருமா? 20 hours ago
news பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்திய RBI.. உண்மைத்தன்மை என்ன.. வாங்க பார்க்கலாம்! 1 days ago
news சட்டென உயர்ந்த பிட்காயின் விலை.. திடீர் ஏற்றத்திற்குப்பின் உள்ள காரணம் என்ன? 2 days ago
news மே 1 ஆம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு விதிகள் மீண்டும் மாறுமா? BharatGas, HP Gas.. LPG பயனாளர்கள் பாதிப்பு ஏற்படுமா? 2 days ago
news AI தொழில்நுட்பத்தால் 6,000 போரை வேலைவிட்டு அனுப்பும் மெட்டா... 2 days ago
news கணவன் - மனைவி இருவருக்கும் ஒரே வருமான வரி.. விரைவில் இந்த மாற்றம் வருமா? மத்திய அரசிடம் கோரிக்கை 2 days ago
news Paytm-யின் கதையை மொத்தமாக முடித்த ஆர்பிஐ.... வங்கிக்கான உரிமைத்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை 2 days ago
news 2026-27 இல் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி வரும்.. ராபர்ட் கியோசாகியின் அதிரடி கணிப்பும், தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயினுக்கான ‘மெகா’ இலக்குகளும்! 2 days ago
news ரூ.1,045 கோடி லாபம் ஈட்டிய ஜிண்டால் ஸ்டீல்... நஷ்டத்தில் இருந்து லாபப் பாதைக்கும் திரும்பும் ஜிண்டால்.... Just now
news வர்த்தக சிலிண்டர் விலை கடுமையாக உயர்வு.... ஒரே நாளில் ரூ.993 அதிகரிப்பு.... அதிர்ச்சியில் மக்கள்.... 18 hours ago
news வணிக ரீதியான எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை 195 ரூபாய் உயர்வு.. ஹோட்டல் உணவுகளின் விலை உயருமா? 20 hours ago
news பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்திய RBI.. உண்மைத்தன்மை என்ன.. வாங்க பார்க்கலாம்! 1 days ago
news சட்டென உயர்ந்த பிட்காயின் விலை.. திடீர் ஏற்றத்திற்குப்பின் உள்ள காரணம் என்ன? 2 days ago
news மே 1 ஆம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு விதிகள் மீண்டும் மாறுமா? BharatGas, HP Gas.. LPG பயனாளர்கள் பாதிப்பு ஏற்படுமா? 2 days ago
news AI தொழில்நுட்பத்தால் 6,000 போரை வேலைவிட்டு அனுப்பும் மெட்டா... 2 days ago
news கணவன் - மனைவி இருவருக்கும் ஒரே வருமான வரி.. விரைவில் இந்த மாற்றம் வருமா? மத்திய அரசிடம் கோரிக்கை 2 days ago
news Paytm-யின் கதையை மொத்தமாக முடித்த ஆர்பிஐ.... வங்கிக்கான உரிமைத்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை 2 days ago
news 2026-27 இல் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி வரும்.. ராபர்ட் கியோசாகியின் அதிரடி கணிப்பும், தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயினுக்கான ‘மெகா’ இலக்குகளும்! 2 days ago
தொழில்

புதிய பொறுப்பில் ஜோஹோ கார்ப்- ஸ்ரீதர் வேம்பு

Feb 08, 2025 08 Feb 2025 0 Views
ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோ கார்ப்பரேஷனின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி இந்தியாவிலுள்ள மிக முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோவின் வளர்ச்சிக்கான முக்கிய பொறுப்பு வாய்நதவராக இருக்கிறார். 1996 ஆம் ஆண்டு, அட்வென்ட்ளெட் என்ற பெயரில துவங்கப்பட்ட இந்த நிறுவனம், ஆரம்பத்தில் ஐடி மற்றும் நெட்வொர்க் மேலாண்மை தீர்வுகளை வழங்கும் நோக்கில் செயல்பட்டது. பின்னர், ஜோஹோ என்ற பெயருக்கு மாற்றம் செய்து, வியாபாரிகளுக்கான பல்வேறு இகாமர்ஸ், செயல்பாட்டு கருவிகள் மற்றும் தொழில்துறை மென்பொருட்களை வழங்குவதற்கான முன்னணி நிறுவனம் ஆக மாறியது.

ஸ்ரீதர் வேம்பு வழிகாட்டுதலின் கீழ், ஜோஹோ சிறிய அளவிலிருந்து உலகளாவிய பிரபலம் பெற்றது. அவர் நிறுவனம் பங்கு அல்லது வெளி நிதி முதலீடுகளைப் பெறாமல் தனது சுயமான முன்னேற்றத்தில் வளர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றி வந்துள்ளார்.

தற்போது, ஜோஹோ உலகளாவிய வணிகங்களில் மில்லியன கணக்கான பயனர்களுடன் செயல்படும் ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக அறியப்படுகிறது.

ஸ்ரீதர் வேம்பு, கிராமப்புற அபிவிருத்தி மற்றும் ஊரக வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபடுகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழ் நாட்டு ஊரக பகுதிகளில் ஜோஹோ தனது தலைமையகத்தை அமைத்து, உள்ளூர் சமூக மக்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது ஸ்ரீதர் வேம்பு, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியிலிருந்து விலகி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) தளத்தில், AI துறையில் சமீபத்தில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, தனது கிராமப்புற மேம்பாட்டு பணிகளைத் தொடர்வதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு களில் முழுநேரமு முழுநேரமும் ஈடுபடுவது சிறந்தது முயற்சிகளில் எனத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.'

இந்நிலையில், ஜோஹோவின் இணை நிறுவனர் ஷைலேஷ் குமார் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.

மேலும், நிறுவனத்தின் முக்கிய வணிகப் பிரிவுகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

அமெரிக்க செயல்பாடுகளை இணை நிறுவனர் டோனி தாமஸ் மேற்பார்வையிடுவார்.

மேனேஜ் எஞ்சின் பிரிவை ராஜேஷ் கணேசன் வழிநடத்துவார்.

ஜோஹோ.காம் பிரிவை மணி வேம்பு வழிநடத்துவார்.

நிலையான வளர்ச்சி மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டில் தனது அர்ப்பணிப்புக்காக அனைவராலும் அறியப்பட்டவர் ஸ்ரீதர் வேம்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தீவிரமாக ஈடுபடுவது நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார். எங்கள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி. முற்றிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் சவால்களை நாங்கள் எவ்வாறு வழிநடத்துகிறோம் என்பதில் உள்ளது."என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றங்கள், ஜோஹோ நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் புதிய பாதைகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.