முட்டை விலை வரலாற்றிலேயே அதிகபட்சமாக விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவில் கூட்டம் அந்த தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை உயர்வு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் கடந்த 25 நாட்களாக ஆறு ரூபாய் 65 காசுகள் என்ற நிலையில் இருந்த முட்டை விலை இன்று ஒரே நாளில் 5 பைசா உயர்ந்து ரூ 6. 70 காசுக்காக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை முட்டை வரலாற்றிலேயே அதிகபட்ச விலையாக கருதப்படுகிறது. மேலும் உற்பத்தி குறைவு, கோடை காலம் முடிந்து மழை காலம் ஆரம்பித்த நிலையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கை குறைவு மற்றும் சத்துணவுக்கு அதிக அளவில் முட்டை செல்வது முக்கிய காரணமாக உள்ளது.
ஏற்றுமதி குறைந்திருந்தாலும் உள்ளூர் மற்றும் ஆடி மாச திருவிழா உள்ளிட்ட தேவைகளுக்கு முட்டை பயன்பாடு அதிக அளவில் செல்வதுஉள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இந்த விலையை இன்று ஒரே நாளில் 5 பைசா உயர்த்தி ரூ 6.70 காசுகளாக விலை நிர்ணயம் செய்துள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




