அனைத்து வங்கிகளும் ‘PRAVAAH’ போர்டலை பயன்படுத்த வேண்டும் – ஆர்.பி.ஐ உத்தரவு!

வங்கி அனுமதிகள் மற்றும் ஒப்புதல்களை விரைவாக செயலாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘PRAVAAH’ போர்டலை, மே 1, 2025 முதல் அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இது நிர்வாக செயல்முறைகளில் தாமதங்களை தவிர்க்கும் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.