முதலீட்டு செய்திகள்
செல்வமகள் திட்டத்தில் புதிய 74,332 கணக்குகள்
2024-25ஆம் ஆண்டில் சென்னையைச் சேர்ந்த 74,332 பெண் குழந்தைகளுக்காக செல்வமகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.இது கடந்த ஆண்டை விட 15% அதிகம். 8.2% வட்டி மற்றும் வரிவிலக்கு என்பது முக்கிய அம்சமாகும்.
கருடா ஏரோஸ்பேஸ் ரூ.100 கோடி நிதி பெற்றது
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ட்ரோன் தொழில்நுட்ப நிறுவனம் கருடா ஏரோஸ்பேஸ், வெஞ்சர் காடலிஸ்ட்ஸ் தலைமையிலான Series B நிதி சுற்றில் ரூ.100 கோடி நிதியை பெற்றுள்ளது. இந்த நிதி, ட்ரோன் உற்பத்தி திறனை விரிவாக்கவும், புதிய ஆராய்ச்சி மற்றும் சோதனை மையங்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படும்.
பி.எஸ்.என்.எல்-க்கு ரூ.61,000 கோடி மதிப்பில் 5ஜி அலைவரிசை ஒதுக்கீடு
தொலைத்தொடர்பு துறை (DoT), பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்திற்கு ரூ.61,000 கோடி மதிப்புள்ள 5ஜி அலைவரிசையை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், BSNL தனது 5ஜி சேவைகளுக்கான பரிசோதனைகளை புதுடெல்லி போன்ற நகரங்களில் தொடங்கியுள்ளது.
108 வருட பழமையான நிறுவனம்… வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் பதிவு!
108 வருட பழமையான சோப் நிறுவனம் குறித்த, ஆனந்த் மஹிந்திராவின் ஏக்கமான எக்ஸ் தள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 100 சதவீதம் சந்தன எண்ணெயை பயன்படுத்தி உற்பத்தியாகும் உலகின் ஒரே சோப் என்று கூறப்படும், ‘மைசூர் சாண்டல் சோப்’ 1916 முதல் கிடைக்கிறது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, சமீபத்திய தனது எக்ஸ் பதிவில், கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KSDL) தயாரிக்கும், பாரம்பரிய பிராண்டான மைசூர் சாண்டல் சோப்பைப் பாராட்டினார்….
அந்நிய நேரடி முதலீட்டில் 6-வது இடத்தில் தமிழகம்
மத்திய தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை வெளியிட்டுள்ள செய்தியில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் மாநில வரிசையில் தமிழகம் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.
உங்கள் வணிகத்தில் நேர்மறையான பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவி குறிப்புகள்.
குறிப்பு மூன்று : Cash Conversion Cycle (பணம் மாற்றம் சுழற்சி). இதை CCC என்று வைத்துக் கொள்வோம். இது ஒரு ஃபார்முலா இது நாட்களின் எண்ணிக்கையில் கணக்கிடப்படும். நாம் வணிகத்தில் செய்யும் நடப்பு முதலீடு (Working Capital) திரும்ப நமது கைகளுக்கு வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகிறது என்று கணக்கீடு செய்வதுதான் இந்த CCC ஃபார்முலா. உதாரணத்திற்கு நாம் ₹50, 000 பொருட்களை சப்ளையரிடமிருந்து 30 நாட்கள் கிரெடிட் பீரியடில் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். நாம்…
சூரிய மின்சக்தி பயன்பாட்டை ஊக்குவிக்க, மத்திய அரசின் புதிய திட்டம்
சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் வகையில், ‘பிரதமரின் சூரிய வீடு, இலவச மின்சாரம் திட்டம்’ ரூபாய் 75,000 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டில் தொடங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு, மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். நாட்டில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக, வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் (சூரிய மின்சக்தி தகடுகள்) பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அரசு…




