கருடா ஏரோஸ்பேஸ் ரூ.100 கோடி நிதி பெற்றது

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ட்ரோன் தொழில்நுட்ப நிறுவனம் கருடா ஏரோஸ்பேஸ், வெஞ்சர் காடலிஸ்ட்ஸ் தலைமையிலான Series B நிதி சுற்றில் ரூ.100 கோடி நிதியை பெற்றுள்ளது. இந்த நிதி, ட்ரோன் உற்பத்தி திறனை விரிவாக்கவும், புதிய ஆராய்ச்சி மற்றும் சோதனை மையங்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படும்.