ரூபாய் 34,300 கோடி முதலீட்டில், தேசிய முக்கிய கனிமங்கள் திட்டம். மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வேகமாக வளர்ந்து வரும் தூய எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் காற்றாலை உள்ளிட்ட ளிட்ட மின் உள்ளிட் மின் உற்பத்தி நிறுவனங்களின் விரிவாக்க தேவைகள், மின்சார வாகனங்கள் மற்றும் அவற்றுக்கான மின்கல உற்பத்தி உள்ளிட்டவற்றுக்கு, லித்தியம், நிக்கல், கோபால்ட், செம்பு போன்ற முக்கிய கனிமங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையில் தன்னிறைவை அடையும் வகையில், ஏழு ஆண்டுகள் செயல்படுத்த இருக்கும் தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்திற்கு மொத்தம் ரூபாய் 34,300 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் பங்களிப்பு ரூபாய் 16,300 கோடியாகும். பொதுத்துறை நிறுவனங்கள் எஞ்சிய ரூபாய் 18,000 கோடி நிதியை பங்களிப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் நிலப்பரப்பில் மட்டுமின்றி, கடல் பரப்பிலும் முக்கிய கனிமங்களின் ஆய்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.

இது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற, மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், பில், நாடு முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதியை சார்ந்து இருப்பதை குறைத்து, தன்னிறைவை உ றுதிப்படுத்த இத்திட்டம் உதவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு, முக்கிய கனிமங்கள் இன்றியமையாதவை என்றார்.