அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதாவது, ரூபாயின் மதிப்பு 85-க்கு மேல் சரிந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வீழ்ச்சி அடைவதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும், எஃப்ஐஐ விற்பனை மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள் பலரும், அதை வெளியே எடுத்து வருகின்றனர்.
இதன் பொருள், டாலர் சந்தையிலிருந்து டாலர் வெளியேறுகிறது என்பதுதான். கிட்டதட்ட 4 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ரூபாயின் விலை ஏற்றம் ஒருவிதமான அழுத்தத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக எஃப்ஐஐக்கள் தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுமட்டும் இல்லாமல், இந்தியாவின் இறக்குமதிக்கான செலவும் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகவும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏனெனில், இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு அதிகமாக உள்ளது. எனவே தங்கம்,வெள்ளி இறக்குமதி செய்வதற்கு பெருமளவு தொகை டாலரின் மதிப்பில் செலவிடப்படுகிறது. மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கும் கணிசமான தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அன்னிய செலவாணி தொடர்ந்து அதிகரித்து, ரூபாய் மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்கிறது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி என்பது தனியாக நடப்பது அல்ல. அதைச் சுற்றி பல புறக்காரணிகள் உள்ளன. மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, பல நாடுகளின் கரன்சிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளின் கரன்சி மதிப்பு சரிந்து வருகிறது.அமெரிக்கா, தனது பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் காரணமாக, உலக நாடுகளில் உள்ள முதலீடுகள் அமெரிக்காவுக்கு செல்கின்றன.
இதனால், பல நாடுகளின் கரன்சிகள் வலிமை இழந்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் உள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவதால், இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் அனைத்து நாடுகளின் கரன்சி மதிப்பும் சரிந்து வருவதால், இந்த பலன் அனைத்து நாடுகளுக்கும் பகிரப்படும். அதே நேரத்தில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அதிக விலை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். இதில் தங்கம், வெள்ளியின் இறக்குமதியை குறைத்தால் ரூபாய் மதிப்பின் மீதான அழுத்தம் குறையும்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தால் அது ரூபாயின் மதிப்புக்கு சாதகமாக அமையும்.




