நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news ரூ.1,045 கோடி லாபம் ஈட்டிய ஜிண்டால் ஸ்டீல்... நஷ்டத்தில் இருந்து லாபப் பாதைக்கும் திரும்பும் ஜிண்டால்.... Just now
news வர்த்தக சிலிண்டர் விலை கடுமையாக உயர்வு.... ஒரே நாளில் ரூ.993 அதிகரிப்பு.... அதிர்ச்சியில் மக்கள்.... 18 hours ago
news வணிக ரீதியான எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை 195 ரூபாய் உயர்வு.. ஹோட்டல் உணவுகளின் விலை உயருமா? 20 hours ago
news பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்திய RBI.. உண்மைத்தன்மை என்ன.. வாங்க பார்க்கலாம்! 1 days ago
news சட்டென உயர்ந்த பிட்காயின் விலை.. திடீர் ஏற்றத்திற்குப்பின் உள்ள காரணம் என்ன? 2 days ago
news மே 1 ஆம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு விதிகள் மீண்டும் மாறுமா? BharatGas, HP Gas.. LPG பயனாளர்கள் பாதிப்பு ஏற்படுமா? 2 days ago
news AI தொழில்நுட்பத்தால் 6,000 போரை வேலைவிட்டு அனுப்பும் மெட்டா... 2 days ago
news கணவன் - மனைவி இருவருக்கும் ஒரே வருமான வரி.. விரைவில் இந்த மாற்றம் வருமா? மத்திய அரசிடம் கோரிக்கை 2 days ago
news Paytm-யின் கதையை மொத்தமாக முடித்த ஆர்பிஐ.... வங்கிக்கான உரிமைத்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை 2 days ago
news 2026-27 இல் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி வரும்.. ராபர்ட் கியோசாகியின் அதிரடி கணிப்பும், தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயினுக்கான ‘மெகா’ இலக்குகளும்! 2 days ago
news ரூ.1,045 கோடி லாபம் ஈட்டிய ஜிண்டால் ஸ்டீல்... நஷ்டத்தில் இருந்து லாபப் பாதைக்கும் திரும்பும் ஜிண்டால்.... Just now
news வர்த்தக சிலிண்டர் விலை கடுமையாக உயர்வு.... ஒரே நாளில் ரூ.993 அதிகரிப்பு.... அதிர்ச்சியில் மக்கள்.... 18 hours ago
news வணிக ரீதியான எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை 195 ரூபாய் உயர்வு.. ஹோட்டல் உணவுகளின் விலை உயருமா? 20 hours ago
news பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்திய RBI.. உண்மைத்தன்மை என்ன.. வாங்க பார்க்கலாம்! 1 days ago
news சட்டென உயர்ந்த பிட்காயின் விலை.. திடீர் ஏற்றத்திற்குப்பின் உள்ள காரணம் என்ன? 2 days ago
news மே 1 ஆம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு விதிகள் மீண்டும் மாறுமா? BharatGas, HP Gas.. LPG பயனாளர்கள் பாதிப்பு ஏற்படுமா? 2 days ago
news AI தொழில்நுட்பத்தால் 6,000 போரை வேலைவிட்டு அனுப்பும் மெட்டா... 2 days ago
news கணவன் - மனைவி இருவருக்கும் ஒரே வருமான வரி.. விரைவில் இந்த மாற்றம் வருமா? மத்திய அரசிடம் கோரிக்கை 2 days ago
news Paytm-யின் கதையை மொத்தமாக முடித்த ஆர்பிஐ.... வங்கிக்கான உரிமைத்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை 2 days ago
news 2026-27 இல் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி வரும்.. ராபர்ட் கியோசாகியின் அதிரடி கணிப்பும், தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயினுக்கான ‘மெகா’ இலக்குகளும்! 2 days ago
தொழில்

பெங்களூரு 2வது விமான நிலையம்: ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்குப் பின்னடைவா?

Dec 30, 2025 30 Dec 2025 0 Views
பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டின் ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு சில சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள் சவாலாக அமைந்துள்ளன. மத்திய அரசுக்கும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கும் (BIAL) இடையே கையெழுத்தான சலுகை ஒப்பந்தத்தின்படி, கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 150 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் 2033-ஆம் ஆண்டு வரை வணிக ரீதியான புதிய விமான நிலையம் எதையும் அமைக்க முடியாது.

BIAL ஒப்பந்தமும் NOC சிக்கல்களும்
ஓசூர், பெங்களூரு விமான நிலையத்திற்கு மிக அருகில் இருப்பதால், அங்கிருந்து விமானங்களை இயக்க BIAL நிறுவனத்தின் ‘தடையின்மை சான்றிதழ்’ (NOC) பெறுவது அவசியமாகும். ஒருவேளை BIAL அனுமதி தராவிட்டால், ஓசூர் விமான நிலையப் பணிகளை 2033-க்குப் பிறகுதான் தொடங்க முடியும். அவ்வாறு தொடங்கினால், அது செயல்பாட்டுக்கு வர 2038-40 வரை ஆகலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இது ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கர்நாடக அரசின் செல்வாக்கும் ரியல் எஸ்டேட் எச்சரிக்கையும்
பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையத் திட்டத்தில் கர்நாடக அரசுக்கு ஓசூரை விட கூடுதல் சாதகமான சூழல் உள்ளது. கர்நாடக அரசு BIAL நிறுவனத்தில் 13% பங்குகளைக் கொண்டுள்ளது. தனது இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி வழங்குவதைத் தாமதப்படுத்தும் வாய்ப்பு கர்நாடக அரசுக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையம் கனகபுரா சாலையில் அமைந்தால், அது ஓசூர் விமான நிலையத்தின் தேவையையே குறைத்துவிடும்.

எனவே, ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்போதே ரியல் எஸ்டேட் முதலீடுகளைச் செய்ய வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 2033-ஆம் ஆண்டுக்குப் பிறகே இந்தத் திட்டத்தின் தெளிவான நிலவரம் தெரியவரும் என்பதால், நீண்ட கால முதலீட்டாளர்கள் கவனத்துடன் செயல்படுவது அவசியம்.