நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news நிலத்தடி நீர் மாசுபாடு விவகாரத்தில் சிக்கிய டாடா ஐஃபோன்.. ஓசூர் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்.. என்னதான் நடக்குது? 18 hours ago
news 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.... 2 days ago
news 13 ஆண்டுகளுக்கு பிறகு ... ரிசர்வ் வங்கி கொடுத்த ஜாக்பாட் ... செப்டம்பர் 30-க்குள் முதலீடு செய்தால் 20% வரை வட்டி | FCNR B Account 3 days ago
news Credit Card | நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஜூன் 15 முதல் புது ரூல்ஸ்! 3 days ago
news வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்? 5 days ago
news 90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை! 6 days ago
news மீண்டும் உயரும் கச்சா எண்ணெய் விலை... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.... 08 Jun 2026
news எங்களுக்கும் ரூ.52,000 அடிப்படைச் சம்பளம் வேணும்.. 8வது ஊதியக்குழுவின் IRTSA-இடம் வேண்டுகோள் வைத்த ரயில்வே ஊழியர்கள்! 05 Jun 2026
news எச்சரிக்கை... இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரிக்கு வழிவகுக்கலாம்... கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 05 Jun 2026
news மீண்டும் தாமதமாகும் 8வது ஊதியக்குழு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. இனி பென்சன், சம்பளம் எப்போ கிடைக்கும்? 03 Jun 2026
news நிலத்தடி நீர் மாசுபாடு விவகாரத்தில் சிக்கிய டாடா ஐஃபோன்.. ஓசூர் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்.. என்னதான் நடக்குது? 18 hours ago
news 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.... 2 days ago
news 13 ஆண்டுகளுக்கு பிறகு ... ரிசர்வ் வங்கி கொடுத்த ஜாக்பாட் ... செப்டம்பர் 30-க்குள் முதலீடு செய்தால் 20% வரை வட்டி | FCNR B Account 3 days ago
news Credit Card | நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஜூன் 15 முதல் புது ரூல்ஸ்! 3 days ago
news வங்கிகளிடமிருந்து தங்க நகைக் கடன் குறித்த தகவல்களை கேட்கும் நிதி அமைச்சகம்.. அடுத்து என்ன நடக்கும்? 5 days ago
news 90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை! 6 days ago
news மீண்டும் உயரும் கச்சா எண்ணெய் விலை... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.... 08 Jun 2026
news எங்களுக்கும் ரூ.52,000 அடிப்படைச் சம்பளம் வேணும்.. 8வது ஊதியக்குழுவின் IRTSA-இடம் வேண்டுகோள் வைத்த ரயில்வே ஊழியர்கள்! 05 Jun 2026
news எச்சரிக்கை... இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரிக்கு வழிவகுக்கலாம்... கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 05 Jun 2026
news மீண்டும் தாமதமாகும் 8வது ஊதியக்குழு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. இனி பென்சன், சம்பளம் எப்போ கிடைக்கும்? 03 Jun 2026
தொழில்

கூகுளின் ‘எமர்ஜென்சி லொகேஷன்’ சேவை இந்தியாவில் அறிமுகம்: முதற்கட்டமாக உத்தரப் பிரதேசத்தில் தொடக்கம்!

Dec 30, 2025 30 Dec 2025 0 Views
கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக ‘எமர்ஜென்சி லொகேஷன் சர்வீஸ்’ (Emergency Location Service – ELS) என்ற உயிர்காக்கும் புதிய வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தச் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அவசரகாலச் சூழலில் ஒருவர் சிக்கிக்கொள்ளும்போது, அவரால் போன் செய்து தனது இருப்பிடத்தை விவரிக்க முடியாத நிலையிலும் இந்தச் சேவை பேருதவியாக இருக்கும்.

அவசரகால அழைப்பின் போது தானாகவே பகிரப்படும் இருப்பிடத் தகவல்
உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இருந்து 112 போன்ற அவசரகால உதவி எண்களை டயல் செய்தால் போதும். போன் இணைக்கப்பட்ட உடனேயே, உங்கள் துல்லியமான இருப்பிடத் தகவல் (Location) தானாகவே காவல்துறை அல்லது ஆம்புலன்ஸ் போன்ற அவசரக்கால உதவி மையங்களுக்குச் சென்றுவிடும். அருகில் உள்ள வைஃபை (Wi-Fi), ஜிபிஎஸ் (GPS) மற்றும் மொபைல் நெட்வொர்க் சிக்னல்களைப் பயன்படுத்தி, 50 மீட்டருக்குள் மிகத் துல்லியமாக இருப்பிடத்தைக் காட்டும் திறன் இதற்கு உண்டு. இந்த வசதி எப்போதும் உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்காது; நீங்கள் அவசரகால எண்ணை டயல் செய்யும் போது மட்டுமே இது தானாகவே ஆக்டிவேட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் இல்லை, தனி ஆப் தேவையில்லை
இந்தச் சேவையின் சிறப்பம்சமே இதன் எளிமைதான். இதற்காகப் பயனர்கள் தனியாக எந்தவொரு செயலியையும் (App) பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை. ஆண்ட்ராய்டு 6 (Android 6.0) அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனில் இயங்கும் அனைத்து போன்களிலும் இது தானாகவே இருக்கும். மேலும், இந்தச் சேவைக்குக் கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது.

நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ள உயிர்காக்கும் தொழில்நுட்பம்
உத்தரப் பிரதேசத்தில், அங்குள்ள UP112 அவசர உதவி மையத்துடன் இணைந்து இந்தச் சேவை முதன்முதலாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில அவசரகால அமைப்புகளுடன் இணைந்து நாடு முழுவதும் விரிவுபடுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. விபத்துகள், உடல்நலக் குறைவு அல்லது ஆபத்தான சூழ்நிலைகளில் உதவி தேவைப்படுபவர்களுக்கு, அவர்கள் பேச முடியாத நிலையிலும் விரைவாக உதவி கிடைப்பதை இந்தத் தொழில்நுட்பம் உறுதி செய்கிறது.