இந்திய அரசு முதியோர் நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் Senior Citizens Savings Scheme (SCSS) எனப்படும் ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டத்தை வழங்குகிறது. இத்திட்டம் பயனாளிக்கு மாதாந்திர வருமானத்தை அதிகரித்து, மூத்த குடிமக்களுக்கு நிதி பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு நம்பகமான வழியாக கருதப்படுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் (SCSS) சிறப்பம்சங்கள்
மூத்த குடிமக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதம் கிடைக்கிறது. இது வங்கி பிக்சட் டெபாசிட்களை காட்டிலும் அதிகம். · அரசின் பாதுகாப்புடன் செயல்படுவதால் உங்கள் பணத்திற்கு 100% பாதுகாப்பு உண்டு.
SCSS என்பது மத்திய அரசு அங்கீகரித்த பாதுகாப்பு சேமிப்பு திட்டம். இது 60-ஆண்டை கடந்த இந்திய குடிமக்களுக்காக மட்டுமே உள்ளது. இந்த எஸ்.சி.எஸ்.எஸ்(SCSS) திட்டத்தில் இணைய குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அடுத்தடுத்து முதலீடு செய்ய விரும்புபவர்கள் ஆயிரத்தின் மடங்கில் முதலீடு செய்ய வேண்டும்.
அதிகபட்ச முதலீடு
ஒரு தனி நபர் அல்லது கூட்டுக் கணக்கு மூலம், இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம். நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அஞ்சலகங்களில் கணக்கு வைத்திருந்தாலும், எல்லா கணக்குகளையும் சேர்த்து மொத்தம் 30 லட்சம் ரூபாய் மட்டுமே முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஒருவர் இந்த திட்டத்தில் 30 லட்சம் முதலீடு செய்துள்ளதாக வைத்துக் கொள்வோம். தற்போது வட்டி விகிதம் 8.2% என்பதால், அவரின் வருமானம் சுமார் 2.46 லட்சம் ரூபாயாக இருக்கும். இதை மாதத்திற்கு கணக்கிட்டால் மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் பெற முடியும். ஆனால் இந்த திட்டத்தில் காலாண்டுக்கு ஒரு முறை மட்டுமே வட்டி வரவு வைக்கப்படும். ஆக மூன்று மாதத்திற்கு ஒரு முறை கிடைக்கும் வட்டியை மாதம் சராசரியாக 20,000 ரூபாயாக எடுத்துக் கொள்ளலாம். ஆக ஓய்வுகாலத்திலும் மாதம் 20,000 ரூபாய் வருமானம் என்பது சாத்தியமான ஒன்று தான்.
SCSS கணக்கு 5 வருட காலத்திற்கு செயல்படும் — 5 வருட முடிவில் முதலீட்டார்கள் விரும்பினால் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கலாம். வட்டி quarterly (மூன்று மாதங்களுக்கு ஒரு முறை) கணக்கில் சேர்க்கப்படும், இதனால் நிதி நகர்வு (cash flow) நிரந்தரமாக இருக்கும்.




