ஆஸ்திரேலியா, 2025-ல் 16 வயதுக்கு குறைந்த குழந்தைகள் சமூக ஊடகங்களை (Instagram, TikTok, Facebook, YouTube போன்றவை) பயன்படுத்துவதற்கு தடை விதித்த முதல் நாடாக மாறியது. இந்த முடிவு உலகம் முழுவதும் பெரிய விவாதத்தை உருவாக்கி, பல நாடுகள் இதே போன்ற சட்டங்களை பரிசீலிக்க ஆரம்பித்துள்ளன.
இந்த தடை, முக்கியமாக இணைய மிரட்டல் (cyber bullying), மனநலம் பாதிப்பு, அடிமைத்தன்மை, மற்றும் ஆன்லைன் அபாயங்கள் ஆகியவற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது.
இதே மாதிரி தடையை யோசிக்கும் நாடுகள்
France – 15 வயதுக்கு குறைவானவர்களுக்கு social media தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Spain – 16 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு தடை விதிக்கும் திட்டம்.
Greece – இதே மாதிரியான சட்டம் குறித்து ஆலோசனை.
United Kingdom – Australia மாதிரி தடை குறித்து அரசு பரிசீலனை.
Indonesia – 16 வயதுக்கு குறைவானவர்களுக்கு social media பயன்பாட்டை கட்டுப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Malaysia – 2026 முதல் under-16 social media தடை திட்டம்.
Brazil, Denmark, Singapore, New Zealand போன்ற நாடுகளும் இதே மாதிரி கட்டுப்பாடுகளை பரிசீலிக்கின்றன.
இந்தியாவில் என்ன நடக்கிறது?
இந்தியாவில் தேசிய அளவில் இன்னும் தடை இல்லை. ஆனால் சில மாநிலங்கள் முயற்சி செய்கின்றன:
Karnataka – 16 வயதுக்குக் குறைவானவர்களுக்கு social media தடை திட்டம் அறிவித்துள்ளது.
Andhra Pradesh – 13 வயதுக்குக் குறைவானவர்களுக்கு கட்டுப்பாடு திட்டம்.




