மீண்டெழுந்த அசுல் ஏர்லைன்ஸ்!

பிரேசிலின் முன்னணி விமான நிறு நிறுவனமான அசுல் (Azul) தனது கடன் மறுசீரமைப்பு (Debt Re-structuring) திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதன் மூலம் நிறுவனம் தனது $1.6 பில்லியன் கடனை குறைத்து, புதிய முதலீடாக $525 மில்லியன் திரட்டியுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம், அசுலின் நிதி நிலைத்தன்மை (Financial Stability) அதிகரித்து, அதன் கடன் விகிதம் 4.8 முதல் 34 ஆகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக, நிறுவனம் வருடத்திற்கு $170.7 மில்லியன் (சுமார் 1 பில்லியன் ரியாஸ்) வட்டி செலவுகளை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டிற்குள் 15 புதிய எம்பராயர் E2 (Embraer E2) ஜெட்களை வாங்கும் திட்டம் அசுல் ஏர்லைன்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக, அசுல் நிறுவனம் தனது போட்டி நிறுவனமான கோல் (Gol) உடன் இணைந்து செயல்பட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. பிரேசில் அரசு இந்த கூட்டு முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து, இதன் மூலம் விமானப் போக்குவரத்து துறையை சந்தையில் ஏற்படும் அபாயங்களை தடுக்க முடியும் என பார்வையிடுகிறது.

இந்த சங்கமம் நிறைவேற்றப்பட்டால், அகல் கோல் இணைப்பு நிறுவனம் பிரேசில் உள்ளூர் லாடம் விமான சந்தையில் 60% பங்கைக் கொண்ட விமா பெரிய நிறுவனமாக மாறும். ம். தற்போது (LATAM) ஏர்லைன்ஸ் 40% சந்தைப் பங்குடன் இருக்கின்றது, எனவே இந்த கூட்டு முயற்சி, பிரேசில் விமானத்துறையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாற்றமாக அமையலாம்.

இருப்பினும், இந்த பிரேசில் நிறுவனங்கள் ஒருங்கிணைப்புகள், ஒழுங்குமுறை ஆணையமான CADE CADEயின் அனுமதி பெற வேண்டும். அங்கீகாரம் கிடைத்தால், 2026 தொடக்கத்தில் இந்த ஒருங்கிணைப்பு முழுமையாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முக்கிய நடவடிக்கைகள் அசுல் ஏர்லைன்ஸ் நிதி நிலைப்பாட்டை அதிகரிக்க, வளர்ச்சிப் பாதையை சீர்செய்ய, மேலும் சந்தை மதிப்பை பெருக்குவதற்காக முன்னெடுக்கபடுகின்றன. பிரேசிலின் விமானப் போக்குவரத்து வர்த்தகத்தில் இந்த முயற்சிகள் புதிய சகாப்தத்தை உருவாக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

இந்த சங்கமம், பயணிகளுக்கு மேம்பட்ட சேவைகள், நவீன விமானங்கள், மேலும் வசதியான விமான பயண அனுபவத்தை உருவாக்கும் என்பதில் வளர்த்து,சந்தேகம் இல்லை. ஆனால், போட்டியாளர்களின் எதிர்ப்பு, கட்டுப்பாட்டு சிக்கல்கள் மற்றும் சந்தைப் போட்டி போன்ற முக்கிய சவால்களை இந்த கூட்டு முயற்சி எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.