மூத்த தொழிலதிபரும் முதலீட்டாளருமான ராதாகிஷன் தமானியின் நிறுவனமான டிமார்ட், இன்று செய்திகளில் இடம்பிடித்துள்ளது. பிரபலமான சில்லறை விற்பனை நிறுவனமான (avenue supermarts) அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் (DMart)-இன் பங்குகள், புதன்கிழமையன்று கிட்டத்தட்ட 9% உயர்ந்து, கணிசமான ஏற்றத்தைக் கண்டன. நிறுவனத்தின் ஓர் அறிவிப்பே இந்தப் பங்கு விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
டிமார்ட் 500 கடைகள் என்ற மைல்கல்லைத் தாண்டிவிட்டது. நிறுவனத்தின் இந்த மைல்கல் குறித்த செய்தி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்து, அதன் பங்குகள் அதிவேகமாக உயர வழிவகுத்தது.
9% மேல் உயர்ந்த பங்கு விலை
ஏப்ரல் 1, டிமார்ட் பங்குகள்2.9% உயர்ந்து ரூ.4,075-ல் வர்த்தகத்தைத் தொடங்கி, அன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 9% அதிகரித்து, ரூ.4,294.80 என்ற உச்சத்தை எட்டியது. நண்பகல் வாக்கில், அவை கிட்டத்தட்ட 8% லாபத்துடன், ரூ.4,255.60 என்ற அளவில் வர்த்தகமாகின. மேலும், இந்தப் பங்கின் வர்த்தக அளவு, பிஎஸ்இ-யை விட 3.5 மடங்கு அதிகமாக இருந்தது, இது முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது.
500 கடைகள் என்ற மைல்கல் தொட்ட டி-மார்ட் !
அந்நிறுவனம் சமீபத்தில் 12 புதிய கடைகளைத் தொடங்கியதன் மூலம், மொத்தக் கடைகளின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. இது டிமார்ட்டின் விரைவான விரிவாக்கத்தையும் வலுவான வணிக மாதிரியையும் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
டிமார்ட் நிதி செயல்திறன் எப்படியிருக்கு
நிறுவனத்தின் முடிவுகளும் வலுவாக உள்ளன. Q3FY26 இல், டிமார்ட்டின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 18.27% அதிகரித்து ரூ.855.78 கோடியாகவும், வருவாய் 13.32% அதிகரித்து ரூ.18,100.88 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
பங்கை வாங்கலாமா.. வேண்டாமா?
டிமார்ட் நிறுவனத்தின் பங்கு இன்று ஏற்றத்துடன் வர்த்தகமானது. வரும் நாட்களில் இது மேலும் வளர்ச்சி காண்பதற்கான சாத்தியம் உள்ளது. இதன் காரணமாகவே, சந்தை நிபுணர் அன்ஷுல் ஜெயின் இந்தப் பங்கிற்கு ரூ.4,800 என்ற இலக்கு விலையை நிர்ணயித்துள்ளார், அதே சமயம் அதன் தற்போதைய சந்தை விலை ரூ.4,247.30 ஆக உள்ளது. இதன் விளைவாக, இந்தப் பங்கு இன்னும் 13% வரை உயர்வதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.
இந்தப் பங்கை கண்காணிக்கும் 29 ஆய்வாளர்களில், 10 பேர் ‘வாங்கலாம்’ (Buy) என்ற மதிப்பீட்டையும், 11 பேர் ‘வைத்திருக்கலாம்’ (Hold) என்ற மதிப்பீட்டையும், 8 பேர் ‘விற்கலாம்’ (Sell) என்ற மதிப்பீட்டையும் வழங்கியுள்ளனர்.
சமீபத்தில், CLSA தரகு நிறுவனம் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்கிற்கு ‘உயர் நம்பிக்கை சிறந்த செயல்திறன்’ என்ற மதிப்பீட்டைத் தக்கவைத்துள்ளது.




