தொழில் & வர்த்தகம்
இனி வாட்ஸ்அப்பிலேயே இலவச சட்ட ஆலோசனை! மத்திய அரசின் ‘நியாய சேது’ சேவை அறிமுகம்!
மக்களுக்கு அடிப்படை சட்ட உதவிகளை எளிதாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், இந்திய சட்ட மற்றும் நீதி அமைச்சகம் ‘நியாய சேது’ (Nyaya Setu) என்ற புதிய சேவையை வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே ஒரு மெசேஜில் அனைத்து சட்ட ஆலோசனைகளும் இந்த AI தொழில்நுட்பம் கொண்ட சாட்போட் (Chatbot) மூலம் பொதுமக்கள் சிவில் மற்றும் குற்றவியல் சட்டம், நிலத் தகராறுகள், திருமணச் சிக்கல்கள், குடும்ப வன்முறை மற்றும் வணிகம் சார்ந்த சட்ட விளக்கங்களை இலவசமாகப் பெறலாம்….
வெனிசுலாவை வீழ்த்திய அமெரிக்கா! ரிலையன்ஸ் மற்றும் ONGC-க்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஜாக்பாட்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அதிரடி ராணுவ நடவடிக்கையால் வெனிசுலா அரசு வீழ்த்தப்பட்டு, அந்நாட்டின் கச்சா எண்ணெய் வளங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன. இந்தத் திடீர் புவிசார் அரசியல் மாற்றம் இந்தியாவின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ONGC ஆகியவற்றுக்கு பெரும் லாபத்தைத் தரப்போவதாக ‘ஜெஃப்ரீஸ்’ (Jefferies) நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜாம்நகர் ஆலைக்குக் கிடைக்கும் தள்ளுபடி மற்றும் லாப வாய்ப்பு வெனிசுலாவின் கச்சா எண்ணெய் மிகவும் கனமானது மற்றும் அமிலத்தன்மை…
இந்தியாவில் மின்னணு புரட்சி: 22 புதிய உதிரிபாக உற்பத்தி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!
இந்தியாவை உலகளாவிய மின்னணு உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரூ.41,863 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள 22 மின்னணு உதிரிபாக உற்பத்தி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டிக்ஸன் (Dixon), சாம்சங் டிஸ்ப்ளே (Samsung Display), பாக்ஸ்கான் (Foxconn) மற்றும் ஹிண்டால்கோ (Hindalco) போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தத் திட்டங்களில் பங்கேற்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதங்களை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கினார். இந்த மாபெரும் முதலீட்டின்…
இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: 2027 சுதந்திர தினத்தில் வெளியீடு! அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!
இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் புல்லட் ரயில் சேவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். நாட்டின் முதல் புல்லட் ரயில் 2027 ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) அன்று தனது சேவையைத் தொடங்க உள்ளது. மும்பை – அகமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த அதிவேக ரயில் பாதை, அகமதாபாத், வடோதரா, சூரத், வாபி, தானே மற்றும் மும்பை ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும்….
கூகுளின் ‘எமர்ஜென்சி லொகேஷன்’ சேவை இந்தியாவில் அறிமுகம்: முதற்கட்டமாக உத்தரப் பிரதேசத்தில் தொடக்கம்!
கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக ‘எமர்ஜென்சி லொகேஷன் சர்வீஸ்’ (Emergency Location Service – ELS) என்ற உயிர்காக்கும் புதிய வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தச் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அவசரகாலச் சூழலில் ஒருவர் சிக்கிக்கொள்ளும்போது, அவரால் போன் செய்து தனது இருப்பிடத்தை விவரிக்க முடியாத நிலையிலும் இந்தச் சேவை பேருதவியாக இருக்கும். அவசரகால அழைப்பின் போது தானாகவே பகிரப்படும் இருப்பிடத் தகவல் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இருந்து 112…
மனிதர்களுக்குப் பதில் AI-ஐப் பணிக்கு அமர்த்தியது தவறு! சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce) அதிகாரிகளின் பகீர் ஒப்புதல்!
உலகின் முன்னனி மென்பொருள் நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce), சமீபத்தில் மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள் தனக்கே தலைவலியாக மாறியுள்ளதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. சுமார் 4,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜெண்டுகளைப் பணிக்கு அமர்த்திய முடிவு பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. AI ஏஜெண்டுகளின் குழப்பமும் அதிகாரிகளின் வெளிப்படையான வருத்தமும் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ‘ஏஜெண்ட்ஃபோர்ஸ்’ (Agentforce) என்ற பெயரில் AI ஏஜெண்டுகளை உருவாக்கி வழங்கியது. ஆனால், இவை நிஜமான வணிகத்…
ஜிமெயில் பயனர்களுக்கு குட் நியூஸ்: டேட்டா அழியாமல் மின்னஞ்சல் முகவரியை மாற்றலாம்!
கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் (Gmail) பயனர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, புத்தாண்டு பரிசாக ஒரு அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இனி பயனர்கள் தங்களுடைய தற்போதைய @gmail.com முகவரியை, அதில் உள்ள தரவுகள் (Data) எதையும் இழக்காமல் எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். சிறுவயதில் அல்லது அவசரத்தில் உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் பலருக்கும் ‘ப்ரொபஷனலாக’ இருப்பதில்லை என்பதால், வேலைவாய்ப்பு போன்ற தேவைகளுக்காகப் புதிய முகவரிக்கு மாற விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகவல்கள்…
ஹோட்டல் துறையில் அதானியின் மாஸ்டர் பிளான்: இந்தியா முழுவதும் 60 ஹோட்டல்களைக் கட்டத் திட்டம்!
இந்தியாவின் முன்னணித் தொழில் குழுமமான அதானி குழுமம் (Adani Group), தற்போது ஹாஸ்பிடாலிட்டி (Hospitality) துறையில் பெரிய அளவில் கால்பதிக்கத் தயாராகி வருகிறது. ஏற்கனவே துறைமுகம், மின்சாரம், சிமெண்ட் எனப் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி, இப்போது இந்தியா முழுவதும் 60-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த ஹோட்டல்கள் பெரும்பாலும் அதானி நிர்வகிக்கும் விமான நிலையங்களுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டு, ஒரு ஒருங்கிணைந்த வர்த்தக மையமாக மாற்றப்படும். நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்க்க அதானியின் ‘அசெட்…
வருமாவரித்துறையின் புதிய அதிகாரம்: இமெயில் மற்றும் சமூக வலைதள கணக்குகள் ஆய்வு செய்யப்படுமா?
ஏப்ரல் 1, 2026 முதல் வருமான வரி மசோதா 2025-இன் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தனிநபர்களின் வங்கி கணக்குகள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. வரி ஏய்ப்பு அல்லது வருமான வரி தாக்கலில் பொய் கணக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்தால், அதிகாரிகளால் தனிநபரின் அனுமதியின்றி அவர்களின் டிஜிட்டல் வாலெட்டுகள், இமெயில் மற்றும் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய முடியும் என்று…
பெங்களூரு 2வது விமான நிலையம்: ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்குப் பின்னடைவா?
பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டின் ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு சில சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள் சவாலாக அமைந்துள்ளன. மத்திய அரசுக்கும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கும் (BIAL) இடையே கையெழுத்தான சலுகை ஒப்பந்தத்தின்படி, கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 150 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் 2033-ஆம் ஆண்டு வரை வணிக ரீதியான புதிய விமான நிலையம் எதையும் அமைக்க முடியாது. BIAL ஒப்பந்தமும் NOC…
2025: இந்திய பொருளாதாரச் சுதந்திரத்தின் ஆண்டா? அரசின் மெகா சீர்திருத்தங்கள் ஒரு பார்வை!
இந்தியப் பொருளாதாரத்தில் 2025-ஆம் ஆண்டு ஒரு புதிய அத்தியாயமாகத் திகழ்கிறது. “தொழில் செய்வது இனி சுமையல்ல” என்ற இலக்கோடு, மத்திய அரசு மற்றும் செபி (SEBI), ஆர்பிஐ (RBI) போன்ற அமைப்புகள் கட்டுப்பாடுகளைக் குறைத்து, வளர்ச்சியை விரிவுபடுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளன. முக்கிய சட்ட மாற்றங்கள் மற்றும் எளிதாக்கப்பட்ட நடைமுறைகள் இதன் ஒரு பகுதியாக, ஜன் விஸ்வாஸ் 2.0 திட்டத்தின் கீழ் சுமார் 17 சட்டங்களைத் திருத்தி, மோட்டார் வாகனங்கள் மற்றும் ஏற்றுமதி தொடர்பான…
கூகுள் பே-யின் அதிரடி: ‘Flex’ டிஜிட்டல் கிரெடிட் கார்டு அறிமுகம்!
கூகுள் பே (Google Pay) பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் டிஜிட்டல் கிரெடிட் கார்டை ‘Flex by Google Pay’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்டு ஆக்சிஸ் வங்கியுடன் (Axis Bank) இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) ரூபே (RuPay) நெட்வொர்க்கில் செயல்படுகிறது. இந்த கிரெடிட் கார்டை பயனர்கள் தங்களின் UPI கணக்குடன் எளிதாக இணைக்க முடியும். இதன் மூலம் கடைகளில்…
ஓசூர் விமான நிலையம்: 12 கிராமங்களில் இருந்து 2,900 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் திட்டம்!
தமிழ்நாடு அரசு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் மிகத் தீவிரமாக உள்ளது. தொழில் ரீதியாகவும், உற்பத்தி ரீதியாகவும் வேகமாக வளரும் நகரமான ஓசூரில், பெங்களூருவுக்கு அருகாமையில் இருப்பதால், டாடா, ஓலா, டிவிஎஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை அமைத்துள்ளன. இந்த வளர்ச்சிக்கு மேலும் உந்துதல் அளிக்கும் வகையில் விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் விவரங்கள் மற்றும் கிராமங்கள் ஓசூர் – பேரிகை – பாகலூர் – சூளகிரி பகுதிகள்…
ஜேபி மார்கன்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் புதிய கிளை
உலகின் முன்னணி வங்கியான ஜேபி மார்கன் சேஸ் (JPMorgan Chase & Co.), இந்தியாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கிளையைத் திறக்க உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்துள்ளதால், அமெரிக்க வங்கி தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் விதமாக இந்தப் புதிய கிளையைத் திறக்க முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி (RBI) புதிய அலுவலகம் அமைப்பதற்கு முதல் கட்ட அனுமதியை (In-Principle Approval) அளித்ததைத் தொடர்ந்து, ஜேபி மார்கன் தனது நான்காவது கிளையை புனேவில்…
இந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட்: டெக் நிறுவனங்களின் மிகப்பெரிய முதலீடு ஏன்?
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி டெக் நிறுவனங்களின் கவனம் தற்போது இந்தியாவின் மீது தீவிரமாகத் திரும்பியுள்ளது. கூகுள், மைக்ரோசாப்ட், இன்டெல் மற்றும் காக்னிசன்ட் போன்ற உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் அடுத்தடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டைத் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் இந்தியாவை ஒரு சந்தையாக மட்டும் பார்க்காமல், தங்களின் முக்கியமான டெக் மற்றும் உற்பத்தி மையமாக மாற்ற முன்வந்துள்ளன. இதன் மூலம், ஏஐ (AI) மையமாகவும், கிளவுட் உள்கட்டமைப்பு, டேட்டா…
பெண்களுக்காகவே தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! ₹4 லட்சம் வரை பிணையம் தேவையில்லை – அடாவடி வசூலைத் தடுக்க புதிய சட்டம்!
தமிழ்நாட்டில் சுயதொழில் புரிவோர், சிறு வணிகர்கள் மற்றும் சாமானிய மக்கள் கடன் பெறுவதை எளிதாக்கவும், கடன் வழங்கும் நிறுவனங்களின் அத்துமீறல்களைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சட்டத்தின் முக்கிய மாற்றங்கள் கடன் வழங்குபவர்களின் அடாவடி வசூல், அதிக வட்டிச் சுரண்டல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துவதைத் தடுக்கும் நோக்குடன் “தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவன விதிகள் 2025” என்ற பெயரில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடன் பிணைய (அடமானம்) நீக்கம்: சாதாரண…
பொது நிறுவனமாக மாறிய Zepto… 2026 ஆம் ஆண்டு ஐபிஓ வெளியிடத் திட்டம்!
விரைவு வர்த்தக (Quick Commerce) நிறுவனமான Zepto (ஸெப்டோ), 2026 ஆம் ஆண்டில் சாத்தியமான பொதுச் சந்தைப் பட்டியலிடலுக்குத் தயாராகும் வகையில், சில மாதங்களுக்கு முன்பே ஒரு பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக (Public Limited Company) மாறியுள்ளது. இது குறித்து செபியிடம் (SEBI) ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐபிஓ (IPO) திட்டம் மற்றும் நிதி திரட்டல் பணிகள் தொடக்கம்: 2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் Zepto தனது ஐபிஓ வெளியிடுவதற்கான பணிகளைத் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக,…
ஓலா, ஊபருக்குப் போட்டியாக ‘பாரத் டாக்ஸி’ – கமிஷன் இல்லாத கூட்டுறவு டாக்ஸி சேவை டெல்லி, குஜராத்தில் சோதனை ஓட்டம் ஆரம்பம்!
இந்தியாவின் டாக்ஸி சேவைத் துறையில் ஓலா (Ola), ஊபர் (Uber), மற்றும் ரேபிடோ (Rapido) போன்ற தனியார் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஆதரவுடன் ‘பாரத் டாக்ஸி’ (Bharat Taxi) என்ற புதிய கூட்டுறவு டாக்ஸி சேவை செயலி பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்தச் செயலி தற்போது டெல்லி மற்றும் குஜராத்தின் சௌராஷ்டிரா பிராந்தியங்களில் தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தை (Pilot Runs) தொடங்கியுள்ளது. இந்தச் சோதனை ஓட்டத்தில் கிடைக்கும் வெற்றியைப்…
இந்தியாவுக்கு ‘நோ’! தொழில்நுட்பப் பரிமாற்றத்தைத் தடுத்து நிறுத்தும் சீனா!
உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக அளவில் தொடர்ந்து நிலவும் எதிர்ப்புணர்வு, தற்போது இந்திய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் அப்ளையன்ஸ் (Appliances) துறையை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் இணைந்து செய்யவிருந்த பல கூட்டணி மற்றும் கையகப்படுத்தும் திட்டங்கள் சீன அரசின் அனுமதி கிடைக்காததால் தேக்கமடைந்துள்ளன. முக்கியக் காரணம்: சீன அரசின் கொள்கை மாற்றம் இந்திய நிறுவனங்களின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், தொழில்நுட்பப் பரிமாற்றம் (Technology Transfer) தொடர்பான…
HP நிறுவனத்திலும் பணிநீக்கம்! AI கணினி உற்பத்தியை அதிகரிக்க 10% உலகளாவிய ஊழியர்களை நீக்கத் திட்டம்!
கூகுள், அமேசான், ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி டெக் நிறுவனங்களைத் தொடர்ந்து, கணினி மற்றும் பிரிண்டர் தயாரிப்பு நிறுவனமான ஹெச்பி (HP) நிறுவனமும் ஊழியர்கள் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைச் சீரமைக்க இதைக் காரணமாகக் கூறி பணிநீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பணிநீக்க விவரங்கள் பணிநீக்க அளவு: ஹெச்பி நிறுவனம் தங்கள் உலகளாவிய ஊழியர்களில் சுமார் 10% பேரை வேலையில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது. எண்ணிக்கை: இதன்…
மீண்டும் களமிறங்கும் பிரம்மாண்டம்! டாடா சியாரா 2025: வெறும் ₹11.49 லட்சம் தொடக்க விலை – ஈஎம்ஐ எவ்வளவு தெரியுமா?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த டாடா சியாரா (Tata Sierra) கார், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு புத்தம் புதிய தோற்றத்துடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை மிகவும் கவர்ச்சிகரமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய விவரங்கள் அறிமுகத் தொடக்க விலை: ₹11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த விலை, இந்தியாவின் நடுத்தர வர்க்கக் குடும்பத்தினரும் இந்த பிரம்மாண்ட எஸ்யூவி காரை வாங்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. வேரியண்டுகள்: புதிய சியாரா நான்கு முக்கிய வேரியண்டுகளில்…
ஹீரோ மோட்டோகார்ப் காலாண்டு லாபம் 23% உயர்வு
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் (செப்டம்பர் 30, 2025 உடன் முடிவடைந்த) ஒட்டுமொத்த நிகர லாபத்தில் (Consolidated Net Profit) 23%க்கும் அதிகமாக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. முக்கிய நிதிச் சுருக்கங்கள் நிகர லாபம் (Net Profit): நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்த ₹1,064 கோடியிலிருந்து உயர்ந்து, தற்போது ₹1,309 கோடியாக (தோராயமாக) அதிகரித்துள்ளது. வருவாய் (Revenue): நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 16.5%க்கும் அதிகமாக உயர்ந்து, ₹12,218 கோடியாக உயர்ந்துள்ளது….
₹7,280 கோடியில் மத்திய அரசின் மெகா திட்டம்!
இந்தியாவில் மின்னணு சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவைப்படும் அரிய வகை நிரந்தர காந்தங்கள் (Rare Earth Permanent Magnets – REPM) பெரும்பாலும் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. உலகளவில் இந்த உற்பத்தியில் சீனாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சீனா இந்த அரிய வகைக் காந்தங்கள் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதித்ததால், இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இதற்கு மாற்று வழியை உருவாக்க…
ஊழியர் தான் எங்கள் சொத்து! 1,000 பேரை லண்டனுக்கு ஒரு வார சுற்றுலா அனுப்பும் காசாக்ரான்ட் நிறுவனம்!
ஊழியர்களை ஊக்குவிப்பதில் இந்திய நிறுவனங்கள் மத்தியில் தனித்து நிற்கும் சென்னை ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாக்ரான்ட் (Casagrand), இந்த ஆண்டு தனது சிறந்த ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு பிரம்மாண்டமான பரிசை வழங்கியுள்ளது. பரிசு விவரங்கள் சுற்றுப்பயணம்: நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 1,000 ஊழியர்களுக்கு ஒரு வாரம் முழுவதும் அனைத்துச் செலவுகளையும் நிறுவனமே ஏற்கும் வகையில், லண்டனுக்கு சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டம்: இது, காசாக்ரான்ட் நிறுவனத்தின் வருடாந்திர ஊழியர் வெகுமதித் திட்டமான ‘லாபப் பங்கு போனஸ்’ (Profit Share…
தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி: விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம்!
இந்தியாவில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில், நடப்பாண்டில் 19 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், விலை குறைந்ததாலும், குஜராத் உப்பின் வருகையாலும் 12 லட்சம் டன் உப்பு உப்பளங்களிலேயே தேங்கியுள்ளது. உப்பளப் பகுதிகள்: தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி போன்ற பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்….
அது ஒரு மிகப் பெரிய ரகசியம்”… ChatGPT-யின் வெற்றிக்குக் காரணமான ‘விஞ்ஞான அதிர்ஷ்டம்’ குறித்து சாம் ஆல்ட்மேன் தகவல்!
உலகப் புகழ் பெற்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓப்பன்ஏஐ (OpenAI)-இன் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், ChatGPT-யின் (Large Language Model – LLM) உருவாக்கத்தில் ஆரம்பத்தில் தாங்கள் கண்டறிந்த சில அடிப்படை விதிமுறைகள் ஒரு மகத்தான திருப்புமுனையாக அமைந்ததாகக் கூறியுள்ளார். சாம் ஆல்ட்மேன் கூறியது ஓப்பன்ஏஐ-இல் முதலீடு செய்துள்ள முக்கிய நிறுவனங்களில் ஒன்றான அன்ட்ரீசன் ஹொரோவிட்ஸ் (a16z) உடன் நடந்த உரையாடலில், சாம் ஆல்ட்மேன் பின்வரும் முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்: ‘பெரும் விஞ்ஞான அதிர்ஷ்டம்’…
1994-க்குப் பின் மிக மோசமான சரிவு! 2026-ல் இந்தியப் பங்குச் சந்தை மீட்சி அடையும் – வால் ஸ்ட்ரீட் கணிப்பு!
இந்தியப் பங்குச் சந்தை 2025-ஆம் ஆண்டில் பல சகாப்தங்களில் இல்லாத மிக மோசமான சரிவை சந்தித்தது. எனினும், உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் 2026-ஆம் ஆண்டிற்குள் இந்தியச் சந்தைகளில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை (Turnaround) ஏற்படும் என்று நம்பிக்கையுடன் கணித்துள்ளன. 2025-ன் மோசமான நிலை பின்தங்கிய நிலை: ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில், இந்தியா கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் சந்தைகளில் பின்தங்கியது. ரூபாய் ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாகச் சரிந்தது. அப்போதைய…
₹7,280 கோடியில் மத்திய அரசின் மெகா திட்டம்!
இந்தியாவில் மின்னணு சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவைப்படும் அரிய வகை நிரந்தர காந்தங்கள் (Rare Earth Permanent Magnets – REPM) பெரும்பாலும் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. உலகளவில் இந்த உற்பத்தியில் சீனாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சீனா இந்த அரிய வகைக் காந்தங்கள் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதித்ததால், இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இதற்கு மாற்று வழியை உருவாக்க…
AI தொழில்நுட்பம்… பெங்களூரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ₹2 கோடி முதலீடு செய்த மாருதி சுசுகி!
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா (Maruti Suzuki India), தனது வாடிக்கையாளர்களுக்கு வாகனப் பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒரு முக்கியமான முதலீட்டைச் செய்துள்ளது. முதலீட்டு விவரங்கள்: முதலீடு: மாருதி சுசுகி சுமார் ₹2 கோடி முதலீடு செய்துள்ளது. நிறுவனம்: இந்த முதலீடு ராவ்விட்டி சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் (Ravity Software Solutions) என்ற பெங்களூருவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ளது. பங்குதாரர் நிலை: இந்த முதலீட்டின்…
பான் கார்டு தொலைந்துவிட்டதா? – ஒரு தொழில்முறை வழிகாட்டி!
பான் கார்டு (PAN Card) என்பது இந்தியாவில் நிதி நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான ஓர் ஆவணமாகும். வருமான வரிக் கணக்குத் தாக்கல் முதல், முதலீடுகள், கடன்கள் வரை அனைத்து முக்கியப் பரிவர்த்தனைகளுக்கும் இதுவே நிரந்தரக் கணக்கு எண்ணாகப் (Permanent Account Number) பயன்படுகிறது. உங்களது பான் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது சேதமடைந்தால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவே எளிதாகவும், துரிதமாகவும் டூப்ளிகேட் (Duplicate) அல்லது மறுபதிப்பு (Reprint) செய்யப்பட்ட பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இணையவழியில் பான்…




