Namathu Vanikam Media

பங்கு வர்த்தகம். ஒரு வித்தியாசமான அணுகுமுறை!

திட்ஒரு நிறுவனப் பங்கை எதிர்கால முதலீடாக எதிர்பாராத விதமாக அந்த bps நிறுவனத்தின் மதிப்பு குறைவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உடனடியாக அந்தப் பங்கை விற்கவேண்டும் என்று இல்லை இதுவரையில் வந்த இதுவரையில் அத்தியாயங்களில் சரியும் பங்கை வாங்காதீர்கள். நிறுவனத்தை ஆராய்ந்து பங்கை வாங்குங்கள் என அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது தலைப்பு அந்தக் கூற்றுக்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. அதனால், உங்களுக்கு தலைப்பு சரி தானா என்ற கேள்வி எழுந்திருக்கலாம். ஆம், தலைப்பு முற்றிலும் சரியானது…

Read More

சைமன் சினேக் “கோல்டன் சர்க்கில் மாடல்”. உங்கள் தொழில் கையேடு!

சைமன் சினெக்கின் “கோல்டன் சர்க்கிள் மாடல்” என்பது ஒரு வியாபாரத்தை வடிவமைக்கும் போது ஏன், எவ்வாறு, மற்றும் என்ன என்பதை விளக்கும் ஒரு வழிமுறை. மாடலின் மூன்று முக்கிய அம்சங்கள்: ஏன் (Why), எவ்வாறு (How), மற்றும் என்ன (What). இந்த முறை, குறிப்பாக ஒரு நிறுவனத்தின் நோக்கம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதை எவ்வாறு எடுத்துச் செல்வது என்பதில் தனித்தன்மையை உருவாக்க உதவுகிறது. கோல்டன் சர்க்கிள் மூன்று அடிப்படைப் பிரிவுகள் ஏன் (Why): இது ஒரு…

Read More

ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு பின்னர், டாட்டா டிரஸ்ட் தலைவர் ஆனார், நோயல் டாட்டா

சிறந்த தொழில்துறை தலைவரான ரத்தன் டாட்டா இறந்ததைத் தொடர்ந்து, டாட்டா குழுமத்தின் பாரம்பரியத்தை மேலே கொண்டு செல்லும் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வர் என்ற விவாதம் எழுந்தது. இந்நிலையில். ரத்தன் டாட்டாவின் தமையனும், சிறந்த நிர்வாகிகளுள் ஒருவருமான நோயல் டாட்டா, டாட்டா டிரஸ்ட்ஸ் தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டாட்டா டிரஸ்ட் குழுமம், சர் தோரப்ஜி டாட்டா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாட்டா டிரஸ்ட் ஆகியவற்றின் கீழ் செயல்படுகின்றது, இது டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் ஒரு முக்கிய…

Read More

தமிழகத்தில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்க, இன்- ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ ஒப்பந்தம்

தமிழகத்தில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்கவும், உற்பத்திப் பிரிவை தொடங்கவும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), இன்- ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில் துறை பெருவழித்தடத்தை செயல்படுத்துவதற்கான ஒரு முகமை நிறுவனமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) செயல்பட்டு வருகிறது. விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற தொழில் பூங்காக்களை அமைத்து, அதன் மூலம் தொழில் முனைவோர் இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதுடன், இத்துறைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதே,…

Read More

அந்நியச் செலாவணி கையிருப்பு, 62,560 கோடி டாலராக அதிகரிப்பு

மார்ச் 1- ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 6.5 கோடி டாலர் உயர்ந்து 62,562.6 கோடி டாலராக உள்ளது. பிப்ரவரி 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது, 297.5 கோடி டாலர் உயர்ந்து 61,907 கோடி டாலராக இருந்தது. அக்டோபர் 2021 இல், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, 64,500 கோடி டாலரை எட்டியது. உலகளாவிய பொருளாதார சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே, ரூபாய் மதிப்பை பாதுகாப்பதற்காக அந்நிய செலாவணி…

Read More

கடந்த 10 ஆண்டுகளில், 21 மடங்கு அதிகரித்த கைபேசி உற்பத்தி

மதிப்பின் அடிப்படையில், இந்தியாவின் கைபேசி உற்பத்தி கடந்த பத்து ஆண்டுகளில் 21 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014-15 ஆம் நிதி ஆண்டில் இந்தியா ரூபாய் 18,900 கோடி மதிப்பிலான கைபேசிகளை தயாரித்தது. இது நடப்பு நிதியாண்டில் ரூபாய் 4.10 லட்சம் கோடியாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில், நாட்டின் கைபேசி உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் 2000 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நாட்டின் அறிதிறன் பேசி (ஸ்மார்ட் போன்) உற்பத்தி வளர்ச்சியில், ஆப்பிள் மற்றும்…

Read More

உலக நாடுகளின் நாணய வலிமை

சர்வதேச அளவிலான வர்த்தக நடவடிக்கைகளின் உயிர்நாடி நாணயம். இது ஒரு நாட்டின் பொருளாதார ஆற்றலை பிரதிபலிப்பதுடன், வலிமை, ஸ்திரத்தன்மை, வலுவான நிதி ஆரோக்கியத்திற்கு தக்க சான்றாகும். நாணயம் மீதான மதிப்பு உயரும்போது, அந்த நாட்டின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையும் உயர்கிறது. இதனால் முதலீடுகளை எளிதாக ஈர்க்கவும், சர்வதேச கூட்டாண்மையை வலுப்படுத்தவும் முடியும். அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபை, உலகெங்கிலும் உள்ள 180 நாடுகளின் நாணயங்களை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது. அதில் சில நாணயங்கள் பிரபலமானவை என்பதுடன், அதன்…

Read More

இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆண்டுக்கு 8 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை, 10 கோடியாக உயரும்

ஆண்டுக்கு ரூபாய் 8 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 2027 ஆம் ஆண்டுக்குள் 10 கோடியாக உயரும் என, சர்வதேச முதலீட்டு நிறுவனமான ‘கோல்டுமேன் சாக்ஸ்’ மதிப்பிட்டுள்ளது. இந்தியர்களின் வருமானம், நுகர்வுத் திறன், சொத்து உள்ளிட்டவை தொடர்பாக ‘கோல்டுமேன் சாக்ஸ்’ நிறுவனம் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய மக்களின் வருவாய் அடுத்த…

Read More

வேகம் எடுக்கும், இந்திய ரியல் எஸ்டேட் துறை

இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை அமலுக்கு வந்த பிறகு, வேலைவாய்ப்பும் தனிநபர் வருமானமும் அதிகரித்தது. இதனால் நம் நாட்டு பொருளாதாரத்தின் முக்கிய உந்து சக்தியாக, ரியல் எஸ்டேட் விளங்குகிறது. குறிப்பாக நகரமயமாக்கமும், தனிநபர் வருமானமும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய பொருளாதாரத்தில் வீட்டு வசதி துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த 2020-இல் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் ரியல் எஸ்டேட் துறை பெரும்…

Read More

உங்கள் வணிகத்தில் நேர்மறையான பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவி குறிப்புகள்.

குறிப்பு மூன்று : Cash Conversion Cycle (பணம் மாற்றம் சுழற்சி). இதை CCC என்று வைத்துக் கொள்வோம். இது ஒரு ஃபார்முலா இது நாட்களின் எண்ணிக்கையில் கணக்கிடப்படும். நாம் வணிகத்தில் செய்யும் நடப்பு முதலீடு (Working Capital) திரும்ப நமது கைகளுக்கு வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகிறது என்று கணக்கீடு செய்வதுதான் இந்த CCC ஃபார்முலா. உதாரணத்திற்கு நாம் ₹50, 000 பொருட்களை சப்ளையரிடமிருந்து 30 நாட்கள் கிரெடிட் பீரியடில் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். நாம்…

Read More

சூரிய மின்சக்தி பயன்பாட்டை ஊக்குவிக்க, மத்திய அரசின் புதிய திட்டம்

சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் வகையில், ‘பிரதமரின் சூரிய வீடு, இலவச மின்சாரம் திட்டம்’ ரூபாய் 75,000 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டில் தொடங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு, மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். நாட்டில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக, வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் (சூரிய மின்சக்தி தகடுகள்) பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அரசு…

Read More

எங்கும் எதிலும் மோசடிகள். இப்பொழுது பெயரிலும்…உஷார்!

பங்குச் சந்தை மோசடிகள் முன்பேல்லாம் அங்கே ஒன்று, இங்கே ஒன்று என்று இருந்த காலம் போய், இப்பொழுது பங்குச்சந்தையைப் பயன்படுத்தியே முழுநேர மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் நிறைய முளைத்துவிட்டன. மெசேஜ்கள் பின்னால் வரும். ஆனால், அதை நம்பவே நம்பாதீர்கள். பங்குச்சந்தையில் நீங்கள் முதலீடு செய்யும்போது முகம் தெரியாத, முன்பின் தெரியாத யாருடைய அறிவுரையையும் கண்டிப்பாக ஏற்காதீர்கள். அவர்கள் பரிந்துரைப்பதுப்போல பரிந்துரைத்து நாம் முதலீடு செய்யும் பணத்தை திருடிவிடுவார்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போஸ்ட் மூலம்…

Read More